பினாங்கு பாலம் (மலாய் மொழி: Jambatan Pulau Pinang; ஆங்கிலம்: Penang Bridge; சீனம்: 槟威大桥) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு நீண்ட பாலம் ஆகும்.
இந்தப் பாலம் தீபகற்ப மலேசியா நிலப் பகுதியில் இருக்கும் பிறை நகரத்தையும்; மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரையும் இணைக்கிறது.
பினாங்கு பாலம் Penang Bridge Jambatan Pulau Pinang | |
---|---|
பினாங்கு பாலம் | |
போக்குவரத்து | வாகனங்கள் |
தாண்டுவது | பினாங்கு நீரிணை; மலாக்கா நீரிணை |
பராமரிப்பு | பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் |
வடிவமைப்பாளர் | மலேசிய அரசாங்கம் ஹூண்டாய் பொறியியல் கட்டுமான நிறுவனம் |
வடிவமைப்பு | கேபிள் பாதை பாலம் |
மொத்த நீளம் | 13.5 கிமீ |
அதிகூடிய அகல்வு | 225 மீ |
கட்டியவர் | ஹூண்டாய் பொறியியல் கட்டுமான நிறுவனம் யூ. இ. ஏம் குழு |
கட்டுமானம் தொடங்கிய தேதி | 1982 |
கட்டுமானம் முடிந்த தேதி | 1985 |
திறப்பு நாள் | ஆகஸ்ட் 3, 1985 |
அமைவு | 5°21′14″N 100°21′09″E / 5.35389°N 100.35250°E |
பினாங்கு பாலம், 1985 செப்டம்பர் 14-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகப் போக்குவரத்திற்கு திறக்கப் பட்டது. பாலத்தின் மொத்த நீளம் 13.5 கி.மீ. (8.4 மைல்) ஆகும். இந்தப் பாலம் மலேசியாவில் இரண்டாவது நீளமான பாலமாகவும்; மொத்த நீளத்தின் அடிப்படையில் தென்கிழக்கு ஆசியாவில் ஐந்தாவது நீளமான பாலமாகவும் உள்ளது.
1985-ஆம் ஆன்டுக்கு முன்னர், பட்டர்வொர்த் நகரத்திற்கும்; ஜோர்ஜ் டவுன் மாநகரத்திற்கும் இடையே நீர்வழிப் போக்குவரத்து அரசுக்கு சொந்தமான பினாங்கு படகுச் சேவையை (Penang Ferry Service) மட்டுமே சார்ந்து இருந்தது.
இந்தப் படகுச் சேவை 1894-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தச் சேவைக்கு ஆறு படகுகள் பயன்படுத்தப்பட்டன. அதுவே மலேசியாவின் பழமையான படகு சேவை ஆகும். பின் அந்தச் சேவைக்குப் பதிலாக பினாங்கு பாலம் அமைக்க மலேசிய மத்திய அரசு பரிந்துரை செய்தது.
தொடக்கத்தில் பாலம் கட்டப்பட்டபோது, பாலத்தின் நடுப்பாகம் மட்டும் ஆறு வழிகளைக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் மீதமுள்ள பாலம் நான்கு வழிகளைக் கொண்டிருந்தது.
முழு பாலத்தையும் ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் திட்டம் ஜனவரி 2008-இல் தொடங்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு இறுதியில் அத்திட்டம் நிறைவு அடைந்தது.
1985-ஆம் ஆண்டு தொடங்கி, பினாங்கு பாலம் ஒரு கட்டண பாலமாக உள்ளது. தீபகற்ப பெருநிலத்தில் இருந்து பினாங்குத் தீவை நோக்கிப் பயணிக்கும் போது ஒருவழிக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. பினாங்குத் தீவில் இருந்து தீபகற்ப பெருநிலத்திற்குச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படுவது இல்லை.
1994 முதல், பினாங்கு பாலம் பினாங்கு பாலம் நிறுவனம் (Penang Bridge Sdn Bhd) என்ற தனியார் நிறுவனத்தால் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இப்போது இந்த நிறுவனம் பிளஸ் மலேசியா (PLUS Malaysia Berhad) என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது. 1 ஜனவரி 2019 முதல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டது.
2015-ஆம் ஆண்டில் தீபகற்ப பெருநிலப் பகுதியில் உள்ள பிறை சுங்கச் சாவடியில் கட்டணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையில் 2015 செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி மின்னியல் கட்டண முறைமை அமலுக்கு வந்தது. கீழ்க்காணும் தொட்டு செல்; திறன் அட்டைகள் மூலமாகக் கட்டணம் வசூல் செய்யப் படுகிறது.
This article uses material from the Wikipedia தமிழ் article பினாங்கு பாலம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.