சிண்ட்ரெல்லா; அல்லது தி லிட்டில் கிளாஸ் ஸ்லிப்பர் (பிரெஞ்ச்: சிண்ட்ரெல்லியன், ou La petite Pantoufle de Verre ) என்பது அனைவராலும் அறியப்பட்ட பாரம்பரியமிக்க கதை ஆகும்.
இதன் ஆயிரக்கணக்கான பதிப்புகள் உலகெங்கிலும் வலம் வந்துள்ளது. தலைப்பின் கதாநாயகி ஒரு இளம் பெண். இக்கட்டான சூழ்நிலையில் வாழும் அவள் வாழ்வில் ஏற்படும் திடீர் நல்வாய்ப்பைப் பற்றியதே இந்தக் கதை. "சிண்ட்ரெல்லா" என்ற வார்த்தையின் பொருள், அறிந்துகொள்ள முடியாத ஒருவரின் பண்புகள் என்பதாகும் அல்லது வாழ்க்கையின் பெரும் துன்பங்களைச் சந்தித்த ஒருவர் அதையெல்லாம் வெற்றிகொண்டு மீண்டு வந்ததையும் குறிக்கும். ஊடகத்தில் ஒரு கதைக்கு உண்டான அனைத்து அம்சங்களும் சிறப்பாக அமையப்பெற்ற இன்னும் சொல்லப்போனால் சர்வதேச அளவில் ஒரு புகழ்பெற்ற நாடகமாக சிண்ட்ரெல்லா இன்னும் இருந்துகொண்டிருக்கிறது.
பாரம்பரியமிக்க பழமையை நினைவுகூரும் வகையில் சிண்ட்ரெல்லா நாடகத்தின் கதையின் கரு அமைந்திருக்கும். கிரேக்க வரலாற்றிஞர் ஸ்ட்ராபோ (ஜியோகிராஃபிக்கா புத்தகம் 17, 1.33) என்பவர், முதல் நூற்றாண்டில் (BC) கிரேக்க-எகிப்திய பெண்ணான ரொடோபிஸ் பற்றி, "ரோஸி-ஐஸ்" என்ற கதையை பதிவுசெய்துள்ளார். பழமையான எகிப்தில் கிரேக்க குடியேற்றமான நௌகிராடிசில் வாழ்ந்தவர் அவர். அந்தக் கதை:
They tell the fabulous story that, when she was bathing, an eagle snatched one of her sandals from her maid and carried it to Memphis; and while the king was administering justice in the open air, the eagle, when it arrived above his head, flung the sandal into his lap; and the king, stirred both by the beautiful shape of the sandal and by the strangeness of the occurrence, sent men in all directions into the country in quest of the woman who wore the sandal; and when she was found in the city of Naucratis, she was brought up to Memphis, became the wife of the king...
ஸ்ட்ராபோவிற்கு முன் சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹீரோடொடஸ் என்பவர் ரொடோபிஸ் குறித்த கூடுதல் தகவல்களை தனது வரலாற்றில் கூறியுள்ளார். அதில் திராஸ்ஸில் இருந்து ரொடொபிஸ் வந்ததாகவும், சமோஸின் லாட்மோனின் அடிமையாக அவள் இருந்ததாகவும், அவளுடன் துணை அடிமையாக ஏசோப்பும் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. பாரோ அமசிஸின் போது அவள் எகிப்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு பாடல்வரி கவிஞர் சப்போவின் தம்பியான மைடெலேன் கெராக்ஸிடம் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்ததால் விடுதலை செய்யப்பட்டு சுதந்திரமாக வாழ்ந்ததாகவும் வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.
பின்னர், ஏலியன் (ca. 175–ca. 235), படத்தில் இந்த கதை மீண்டும் வேறொரு வடிவம் பெற்று வெளிவந்தது அதன்மூலம் சிண்ட்ரெல்லா கதையின் கரு மிகவும் பிரபலமான ஒன்றாக கருதப்பட்டது.
கதையின் மற்றொரு பதிப்பில், எ சியான் , மிசலேனிய்யஸ் மோர்சல்ஸ் ஃபிரம் யூயங் படத்தில் நடித்துள்ளார் {}Tuan Ch'eng-Shih -இன் இந்தப்படம் 860 -ஆம் ஆண்டுகளில் வெளியானது. தனது மாற்றாந்தாயால் ஒரு இளம்பெண்ணின் தாய் கொல்லப்படுகிறாள்.அவளின் தாய் மீண்டும் மீனாக மறுபிறப்பு அடைகிறாள். அந்த மீனுடன் பழகும், கடினமாக உழைக்கக்கூடிய அழகான பெண்ணைப் பற்றியது இந்தக் கதை. எ சியான் மந்திரம் நிறைந்த எலும்புகளை சேகரித்து வைத்து, விழாவிற்கு ஏற்றபடி அவளின் ஆடைகள் இருக்கும்படி மாற்றுகின்றனர். வரும் வழியில் அவள் தனது காலணியைத் தொலைக்கும்போது, அரசர் அதனைக் கண்டு அவள் மேல் காதல் கொள்கிறார்.
நடுத்தர காலங்களில் வெவ்வேறான அம்சங்களைக் கொண்டு உருமாறிய பல கதைகள் உள்ளன அராபியன் நைட்ஸ் என்று அழைக்கப்படக்கூடிய ஒன் தௌசன் அண்ட் ஒன் நைட்ஸ் , "தி செகண்ட் ஷேக்ஸ் ஸ்டோரி", "தி எல்டஸ்ட் லேடிஸ் டேல்" மற்றும் "அப்டல்லா இபின் படில் அண்ட் ஹிஸ் பிரதர்ஸ்" போன்றவை அவற்றில் சிலவாகும். இவை அனைத்தும் பொறாமை மிக்க மூத்தவர்கள் இருவர், இளையவர்களை கொடுமைப்படுத்தும் கதையின் கருவை மையமாகக் கொண்டதாகும். இந்தக் கதையில் வரும் கதாப்பாத்திரங்களில் சில பெண்களாகவும், பிறர் ஆண்களாகவும் இருப்பர். "ஜூடர் அண்ட் ஹிஸ் பிரெத்ரன்" என்ற ஒரு கதையில் மேற்கூறிய கதைகளில் வரும் நல்லவிதமான முடிவுகளைப் போல அல்லாமல், மூத்த சகோதரர்களால் இளைய சகோதரன் விஷம் வைத்து கொல்லப்படுவதைப் போன்ற மோசமான முடிவு இருக்கும்படி இந்தக் கதை மாற்றம் செய்யபட்டிருந்தது.
"லா கட்டா செனேரென்டோலா" அல்லது "தி ஹார்ட் கேட்" என்ற முந்தைய ஐரோப்பிய கதையானது, Il பென்டெமேரொனே என்ற புத்தகமாக வந்துள்ளது. இதை இத்தாலிய தேவதைக் கதை தொகுப்பாளர் கியாம்பட்டிஸ்தா பசிலி 1635 ஆம் ஆண்டுகளில் எழுதியுள்ளார். பிரெஞ்ச் ஆசிரியர் சார்லஸ் பெரால்ட் மற்றும் ஜெர்மன் பிரதர்ஸ் கிரிம் என்பவர்களால் வெளியிடப்பட்ட முந்தையை பதிப்பிலிருந்து இந்த பதிப்பு உருவாக்கப்பட்டது. (குறிப்பு: பிரதர்ஸ் கிரிம்மின் பதிப்பில், தேவதை மூதாட்டி யாரும் இல்லை ஆனால் அவளின் தாயின் ஆன்மா, அவரின் கல்லறையில் வளர்ந்த ஒரு மரத்திலிருக்கும் இரு பறவைகளில் இருப்பதாக சித்தரிக்கப்பட்டது.)
1967 ஆம் ஆண்டு சார்லஸ் பெரால்ட் எழுதிய சிண்ட்ரெல்லா கதை மிகவும் பிரபலமானது. பூசணி, தேவதை-பாட்டி மற்றும் கண்ணாடி காலணிகள் அறிமுகம் தொடர்பாக இவர் கூடுதலாக சேர்த்த விஷயங்களே இந்த கதைக்கு பிரபலத்தை ஏற்படுத்தியது. பெரால்ட்டின் பதிப்பில் சிண்ட்ரெல்லா உரோமத்தினால் ஆன காலணியை ("pantoufle en vair"), அணிந்திருந்ததாக எழுதியிருந்தார். இந்தக் கதையானது ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது, vair என்பது verre (கண்ணாடி) என்பது போன்று எழுத்துபிழையுடன் பதிவாகியது. இதன் விளைவாக கண்ணாடி காலணிகளையே சிண்ட்ரெல்லா அணிந்திருந்தாக இன்றுவரை தொடர்கிறது.
19 ஆம் நூற்றாண்டில், ஜேக்கப் மற்றும் வில்ஹெம் கிரிம் சகோதரர்களால் மற்றொரு பதிப்பு பதிவுசெய்யப்பட்டது. கதையின் பெயர் "அஸ்சென்புட்டேல்" (ஆங்கில மொழிபெயர்ப்பில் "சிண்ட்ரெல்லா "). மேலும் சிண்ட்ரெல்லாவிற்கு அவள் தாயின் கல்லறையில் வளரும் ஒரு மரத்திலிருந்து தான் தேவதை-மூதாட்டியிடமிருந்து அவள் விரும்பியது அனைத்தும் கிடைத்திருக்கிறது. இந்தப் பதிப்பில், மாற்றாந்தாய் சகோதரிகள் இருவரும் சிண்ட்ரெல்லாவின் பாதத்தை அறுத்து அவள் அணிந்திருக்கும் காலணியை பறிக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் அந்த இரண்டு சகோதரிகளின் கண்பார்வையைப் பறித்த புறா ஒன்று இளவரசருக்கு அவர்களின் கொடிய எண்ணத்தை தெரியப்படுத்துகிறது. அவர்களின் அந்தக் கொடிய எண்ணத்தின் விளைவாக தங்களின் வாழ்நாள் முழுவதும் இருவரும் கண்பார்வையற்ற பிச்சைக்காரிகளாகவே கழிக்கின்றனர். இந்தக் கதையில் இருமுறை சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ளவிருந்த இளவரசன், பறவைகளால் காப்பாற்றப்படுகிறான். இதன் அடிப்படையில் வைத்து பார்க்கும்போது, இளவரசரின் நிலையை சற்று தரம் தாழ்த்துவதாக அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிண்ட்ரெல்லாவின் கதாப்பாத்திரத்திற்கு மிகுந்த மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்டிஷ் செல்டிக் கதையில், ஜீல், டான் மற்றும் கிரிதேனேக் என்பவர்களைக் கொண்ட கதை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. செல்டிக்கில் வரும் உடன் பிறந்த சகோதரிகள் ஜீல், டான் மற்றும் கிரிதேனேக் இதில் கிரிதேனேக் தான் சிண்ட்ரெல்லா.
தனது மனைவியை இழந்த ஒருவர், இரண்டாம் தாரமாக செல்வாக்கு நிறைந்த ஒரு பெண்ணை மணக்கிறார். அவளுக்கு இரண்டு பெண்கள். இருவருமே உலக மகா சோம்பேறிகள். அவனின் முதல் மனைவிக்குப் பிறந்த பெண்ணோ அன்பையும் அருளையும் பெற்றவள்.குணத்தில் சிறந்தவள். வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் பார்க்கும்படி அந்த முதல் தாரத்தின் மகளை, இவர்கள் அனைவரும் கட்டாயப்படுத்துவர். கொடுத்த வேலைகளை செய்து முடிக்கும் அவள் அங்கிருக்கும் சிறுகற்கள் அமைந்த இடத்தில் (சின்டர்ஸ்) அமர்வாள். அதனாலேயே அவளை சிண்ட்ரெல்லா என்று அழைப்பர் இரண்டாம் தாரத்தின் கட்டுப்பாட்டில் தனது தந்தை இருப்பதால், இவளால் அவர்களை எதிர்த்து ஒன்றும் பேச முடியாது.
ஒருநாள் தனது மனைவியைத் தேர்ந்தெடுப்பதற்காக அந்நாட்டு இளவரசன் அனைத்துப் பெண்களையும் விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தான். இரண்டாம் தாரத்தின் இரு மகள்களும் அற்புத ஆடையணிந்து விழாவிற்குத் தயாரானார்கள். சிண்ட்ரெல்லாவிற்கும் அங்கு செல்ல விருப்பம் தான். ஆனால், அவர்கள் அவளை அவமானப்படுத்திவிட்டு விழாவிற்குச் சென்றுவிட்டார்கள்.
தனது நிலையை எண்ணி தனிமையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த சிண்ட்ரெல்லாவின் முன் தேவதை மூதாட்டி தோன்றி அவளும் விழாவில் கலந்துகொள்ள மாயவித்தையை செய்தார். அவள் ஒரு பூசணிக்காயை பயிற்சியாளராக மாற்றினாள், எலிகளை குதிரைகளாகவும், ஒரு முயலை பயிற்சி நபராகவும், ஓணான்களை காலாட்களாகவும் மாற்றினாள். சிண்ட்ரெல்லா அணிந்திருந்த பழைய உடையை, அழகிய உடையாக மாற்றி, கண்ணாடி காலணிகள் இரண்டையும் வழங்கிவிட்டு, விழாவிற்கு மகிழ்ச்சியாக சென்றுவரும்படி தெரிவித்தாள். ஆனால் நடுநிசிக்குள் திரும்பி விடவும் எனவும் கட்டளையிட்டாள். காரணம் நடு இரவானால் அவளின் மாயவித்தை பலத்தை இழந்துவிடும்.
விழா அறைக்கு சிண்ட்ரெல்லா நுழைந்ததுமே அரங்கமே ஒரு நிமிடம் அசந்துபோனது. இதில் அரசரின் நிலையை சொல்ல வேண்டுமா என்ன? சிண்ட்ரெல்லாவை அவளது சகோதரிகளாலேயே அடையாளம் காண முடியாமல் போனது. இரவிற்குள் திரும்ப வேண்டும் என்பது சிண்ட்ரெல்லாவிற்கு நினைவிற்கு வர வீடு திரும்பினாள். வீடு திரும்பியவள் தனது மூதாட்டிக்கு நன்றி தெரிவித்தாள். வீடு திரும்பிய அவளது சகோதரிகளும், விழாவிற்கு வந்திருந்த அந்த அழகுப் பெண்ணைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.
அடுத்த நாள் மாலை, மற்றொரு விழா அரங்கேறுகையில், தன் பாட்டியின் உதவியால் மீண்டும் சிண்ட்ரெல்லா அந்த விழாவில் கலந்துகொள்கிறாள். அவளைப் பார்த்து அரசர் மேலும் அவளிடம் மயங்கினான் எனினும், இந்த மாலைப்பொழுதில் தனக்கு தேவதை மூதாட்டி வழங்கிய கட்டளையை மறந்துவிட்டாள் சிண்ட்ரெல்லா. அரண்மனையின் படிகட்டுகளில் தனது கண்ணாடி காலணிகளில் ஒன்றை தொலைத்துவிட்டாள். அரசர் அவளைத் துரத்தி துரத்தி தேடி பார்த்தார். ஆனால் ஒரு சாதாரண பெண், அரண்மனையை விட்டு வெளியெறுவதை மட்டுமே அரண்மனைப் பாதுகாப்பாளர்கள் கண்டார்கள். அந்தக் காலணியை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துகொண்ட அரசன், அதற்கு உரிமையான அந்தப் பெண்ணைத் தேடி மணக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டார். மாய வித்தையின் நேரம் முடிந்த பின்னரும், மாறாமல் இருக்கும் அந்தக் காலணியை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டாள் சிண்ட்ரெல்லா.
அரசனோ, அவன் ராஜாங்கத்தில் இருக்கும் அனைத்துப் பெண்களை வைத்தும் அந்த காலணிக்கு உரியவர் யார் என்பதை கண்டறிய முயற்சித்தார். சிண்ட்ரெல்லா இருக்கும் இடத்திற்கு அரசன் வந்து, அந்தக் காலணியை அப்பகுதியில் இருக்கும் பெண்களை வைத்து பொருத்தி பார்த்தார். சிண்ட்ரெல்லாவின் மாற்றாந்தாய் சகோதரிகள் இருவரும் சிண்ட்ரெல்லா அந்தக் காலணியை அணிய விடாமல் திட்டமிட்டு சதிசெய்துவிட்டனர். ஆனால், இயற்கையாகவே அந்தக் காலணி சிண்ட்ரெல்லாவின் காலுக்கு பொருத்தமானதாக இருந்தது. மற்றொரு காலணியையும் சிண்ட்ரெல்லா வழங்கினாள். உண்மை என்னவென்று அறிந்த மாற்றாந்தாயின் சகோதரிகள் இருவரும் சிண்ட்ரெல்லாவிடம் மன்னிப்பு கேட்டனர். அவளும் அவர்களின் குற்றங்களை மன்னித்தாள்.
அரசனை மணந்து அரண்மனைக்கே சிண்ட்ரெல்லா திரும்புகிறாள், அவளின் இரு சகோதரிகளும் இரண்டு ராஜாக்களை மணந்துகொள்கின்றனர்.
அழகு என்பது சொத்து, ஆனால் நன்னடத்தை என்பது விலைமதிக்க முடியாத பொக்கிஷம். இது இல்லாமல் எதுவும் செய்ய முடியாது இது இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே இந்தக் கதையின் நீதி.
ஆர்னே-தாம்சன் வகை 510A , ஆக சிண்ட்ரெல்லா சித்தரிக்கப்பட்டிருந்தாள். தி ஷார்ப் கிரே ஷீப் , தி கோல்டன் ஸ்லிப்பர் , தி ஸ்டோர்ரி ஆஃப் டாம் அண்ட் கேம் , ருஷென் கோட்டி , ஃபேர், பிரவுன் அண்ட் டிரெம்பிலிங் அண்ட் கதி உடன்கிளாக் போன்றவையும் இதில் அடங்கும்.
கடந்த பத்து ஆண்டுகளாக, பல நூற்றுக்கணக்கான படங்கள் சிண்ட்ரெல்லாவின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, அல்லது அதிலிருந்து மருவி வந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. வருடத்தில் குறைந்தது ஒரு படமாவது, சிண்ட்ரெல்லாவின் கதையை ஒட்டி உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இதிலிருந்தே இலக்கியத்தில் சிண்ட்ரெல்லாவின் முக்கியத்துவம் புரியும். பிராம் ஸ்டோக்கரின் நாவலான டிராகுலா -ஐ தழுவி பல படங்களில் வந்துள்ளன.[சான்று தேவை]
This article uses material from the Wikipedia தமிழ் article சிண்ட்ரெல்லா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.