கந்தளாய் அணை (Kantale Dam) இலங்கை கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கட்டுக்கரை அணையாகும்.
இது வேளாண்மைக்காக நீரைத்தேக்க உதவுகிறது. இது 14,000 அடி (4,267 மீட்டர்) நீளமும், 50 அடி (15 மீட்டர்) உயரமும் கொண்டது. 1986 ஏப்ரல் 20 ஆம் தேதி இந்த அணை உடைந்து உயிர்ச்சேதம் உட்படப் பெரும் சேதங்களை விளைவித்தது. பேராற்றை மறித்துக் கட்டப்பட்டுள்ள இந்த அணை ஆற்று நீரின் பெரும்பகுதியைத் தேக்கி வைத்துக்கொள்வதால் வெளியேறுப்போது இது சிறிய ஆறாகத் திருகோணமலை துறைமுகப் பகுதியில் கடலை அடைகிறது.
கந்தளாய் அணை | |
---|---|
நாடு | இலங்கை |
அமைவிடம் | கந்தளாய் |
நோக்கம் | நீர்ப்பாசனம் |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
உரிமையாளர்(கள்) | மகாவலி அதிகாரசபை |
அணையும் வழிகாலும் | |
வகை | அணைக்கட்டு |
தடுக்கப்படும் ஆறு | பேராறு |
உயரம் (அடித்தளம்) | 50 அடி (15 m) |
நீளம் | 14,000 அடி (4,267 m) |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | கந்தளாய்க் குளம் |
1986 ஏப்ரல் 20 அதிகாலை 3.00 மணிக்கு அணை உடைத்துக்கொண்டது. குளத்து நீர் ஒரு சுவர்போல தாழ்ந்த பகுதிகளில் உள்ள ஊர்களுக்குள் புகுந்தது. ஏறத்தாழ 120-180 வரையிலானோர் இறந்தனர். 1600 வீடுகள் சேதமாயின. 2000 ஏக்கர் நெற்பயிர் அழிந்துபோனது. 8,000 குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டன. மிகவும் பாரமான வண்டிகள் அணையின் மீது போக்குவரத்துச் செய்தமை அணை உடைந்ததற்கான காரணங்களுள் ஒன்றாகச் சொல்லப்படுகிறது..
This article uses material from the Wikipedia தமிழ் article கந்தளாய் அணை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.