ஔவை குறள்

ஔவை குறள் என்னும் நூல் ஔவையார் என்னும் பெண் புலவரால் பாடப்பட்டது.

இது அவ்வை குறள் எனவும் வழங்கப்படுகிறது. திருவள்ளுவர் திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பால்களில் பாடல்கள் உள்ளன. எனவே வீட்டு நெறியை விளக்க இந்த நூல் பாடப்பட்டது என்பர்.. இதில் மூன்று அதிகாரங்களில் 310 குறட்பாக்கள் உள்ளன. இதன் காலம் 14ஆம் நூற்றாண்டு

பகுப்பு முறை

    வீட்டுநெறிப்பால்
  1. பிறப்பின் நிலைமை
  2. உடம்பின் பயன்
  3. உள்ளுடம்பின் நிலைமை
  4. நாடி தாரடை
  5. வாயு தாரணை
  6. அங்கி தாரணை
  7. அமுத தாரணை
  8. அர்ச்சனை
  9. உள்ளுணர்தல்
  10. பத்தி உடைமை
    திருவருட்பால்
  1. அருள் பெறுதல்
  2. நினைப்பு உறுதல்
  3. தெரிந்து தெளிதல்
  4. கலைஞானம்
  5. உருவொன்றி நிற்றல்
  6. முத்தி காண்டல்
  7. உருபாதீதம் (உருபு அதீதம்)
  8. பிறப்பு அறுத்தல்
  9. தூய ஒளி காண்டல்
  10. சதாசிவம்
    தன்பால்
  1. குரு வழி
  2. அங்கியில் பஞ்சு
  3. மெய்யகம்
  4. கண்ணாடி
  5. சூனிய காலமறிதல்
  6. சிவயோக நிலை
  7. ஞான நிலை
  8. ஞானம் பிரியாமை
  9. மெய்ந்நெறி
  10. துரிய தரிசனம்
  11. உயர்ஞான தரிசனம்

நூலிலிருந்து சில பாடல்கள்

செய்தி காட்டப்பட்டுள்ள முறைமை

    பாடல்
      கருத்து
        விளக்கம்

1

    ஆதியாய் நின்ற அறிவும் முதலெழுத்து
    ஓதிய நூலின் பயன் முதல் குறள்
      ஆதியாய் நின்ற ஒன்று அறிவு அறிவாகும். நமக்கு முதலெழுத்தாக உள்ளதும் அதுதான். நூல் ஓதியதன் பயனும் அதுதான்.
        திருக்குறளின் முதல் இரண்டு பாடல்களில் உள்ள கருத்துக்களின் உள்ளடக்கப் பாடல் இது.

2

    கற்கிலும் கேட்கிலும் ஞானக் கருத்துற
    நிற்கில் பரமவை வீடு. கடைசிக் குறள்
      கற்றாலும் சரி, கேட்டாலும் சரி, அவற்றில் ஞானக்கருத்து வந்து அதில் நின்றால்தான் வீடுபேறு.

3

    உடம்பினைப் பெற்ற பயனாவ(து) எல்லாம்
    உடபினில் உத்தமனைக் காண் பால் 1, அதிகாரம் 2, பாடல் 1
      உடம்புக்குள்ளே இறைவன் இருக்கிறான். அவனைக் காண்பதே இவ் உடம்பினைப் பெற்ற பயன்.
        மலர்மிசை ஏகினான் என்னும் திருக்குறள் கருத்து.

4

    முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
    பின்னைப் பெரும்உணர்வு தான். பால் 1, அதிகாரம் 9, பாடல் 4
      முன்னைப் பிறப்பு என்பது முன்னோர்களின் பிறப்பு. முன்னோர் தவத்தினால் பின்னோர் மெய்யறிவாம் பெருமைக்குரிய உணர்வு எய்துவர்.
        பேருணர்வு எனின் அளவில் விரிந்திருக்கும் உணர்வைக் குறிக்கும். இது அட்டாவதானம் போன்ற அறிவு. பெரும்உணர்வு எனில் அது மெய்ஞ்ஞான உணர்வு என்க.

5

    எள்ளகத்து எண்ணெய் இருந்ததனை ஒக்குமே
    உள்ளகத்து ஈசன் ஒளி பால் 2, அதிகாரம் 5, பாடல் 1
      உள்ளுக்குள் ஈசன் ஒளியானது, எள்ளுக்குள் இருக்கும் எண்ணெய் போன்றது.

6

    பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
    ஒத்தெங்கும் நிற்கும் சிவம். பால் 2, அதிகாரம் 10, பாடல் 1
      சிவமானது இடவிரிவிலும் ஒன்றாக நிற்கிறது.

7

    கண்ணாடி தன்னில் ஒளிபோல் உடம்பதனுள்
    உண்ணாடி நின்ற ஒளி பால் 3, அதிகாரம் 4, பாடல் 1
      கண்ணாடிக்கு முன் நின்றால்தான் நிழல் விழும். அதுபோல இறைவனைப் பார்த்தால்தான் உணரமுடியும்.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005
  • ஔவை குறள், ஆறுமுக நாவலர் பரம்பரை நா கதிரைவேற்பிள்ளை பார்வையில் சென்னை இரத்தினநாயகர் அண்டு சன்ஸ் பதிப்பு 1953

அடிக்குறிப்பு

Tags:

ஔவை குறள் பகுப்பு முறைஔவை குறள் நூலிலிருந்து சில பாடல்கள்ஔவை குறள் கருவிநூல்ஔவை குறள் அடிக்குறிப்புஔவை குறள்14ஆம் நூற்றாண்டுஔவையார், சமயநூல் புலவர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முல்லைப்பாட்டுபாம்பாட்டி சித்தர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)ஒரு காதலன் ஒரு காதலிவினைச்சொல்பூக்கள் பட்டியல்சித்த மருத்துவம்கல்விகெல்லி கெல்லிதஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ் நீதி நூல்கள்புதிய ஏழு உலக அதிசயங்கள்தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)வாரணம் ஆயிரம் (திரைப்படம்)வன்னியர்மதுரைஇலக்கியம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உயர் இரத்த அழுத்தம்திருவிளையாடல் புராணம்சிறுபாணாற்றுப்படைதமிழர் விளையாட்டுகள்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்காடுவெட்டி குருயாதவர்இன்ஃபுளுவென்சாமுக்கூடற் பள்ளுஅருந்ததியர்நந்தி திருமண விழாகே. அண்ணாமலைமாதவிடாய்பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்பஞ்சாபி மொழிகொச்சி கப்பல் கட்டும் தளம்வல்லம்பர்முன்மார்பு குத்தல்தமிழ் மன்னர்களின் பட்டியல்மலேசியாபாஞ்சாலி சபதம்ஹபிள் விண்வெளித் தொலைநோக்கிமுதலாம் கர்நாடகப் போர்ஆத்திசூடிஒட்டுண்ணி வாழ்வுதமிழக வரலாறுயாப்பகூவாமரபுச்சொற்கள்சிட்டுக்குருவிஅமேசான் பிரைம் வீடியோதிருவண்ணாமலைமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்இந்தியாஅப்துல் ரகுமான்கருப்பைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)மூலிகைகள் பட்டியல்பழமொழி நானூறுபள்ளர்சேலம்பார்க்கவகுலம்பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்சோழர்கொன்றை வேந்தன்மருது பாண்டியர்இசைஎஸ். சத்தியமூர்த்திதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தினகரன் (இந்தியா)இசுலாமிய நாட்காட்டிவிஜய் (நடிகர்)ஜெயம் ரவிபதினெண் கீழ்க்கணக்குமதராசபட்டினம் (திரைப்படம்)வராகிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கணிதம்கருப்பசாமிதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்இந்தி🡆 More