இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல்

இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் என்பது தற்போது நடைபெற்று வரும் வீடுமனை உடைமைத் தொழில் மற்றும் நிதிச் சிக்கலாகும்.

இது அமெரிக்க ஒன்றியத்தில் அடமானக் கடன் திருப்பித்தரத் தவறுதல் மற்றும் முன்கூட்டியே கடன் தவணை முடித்தல் ஆகியவற்றில் ஏற்பட்ட அதிகரிப்பினால் உருவானது, இது உலகம் முழுதும் பெரும் எதிர்மறையான விளைவுகளை வங்கிகளுக்கும், பணச் சந்தைகளுக்கும் ஏற்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் காணப்பட்ட இதன் வேர்கள் 2007ஆம் ஆண்டில் தெளிவாக உணரத்தக்க வகையில் இச்சிக்கல் உலக நிதியமைப்பிலும், நிதித் துறை கட்டுப்பாட்டிலும் ஊடுருவும் தன்மையுள்ள பலவீனங்களை வெளிக்காட்டியது.

ஏறக்குறைய 80% கடனாளிகளுக்கு வழங்கப்பட்ட அமெரிக்க இரண்டாம் நிலை அடமானங்கள் அனுசரிக்கக் கூடிய வட்டி விகித அடமானங்களாகும். அமெரிக்க வீட்டு விலைகள் 2006-07 ஆம் ஆண்டில் வீழத் தொடங்கிய போது, மறுக்கடன் அதிகக் கடினமானது. மேலும், அனுசரிக்கக் கூடிய அடமானங்கள், அதிக விகிதங்களில் மாற்றியமைக்கப்பட்ட போது, அடமானக் கடன் தவறுகை அதிகரித்தது. நிதி நிறுவனங்களால் கைக்கொள்ளப்பட்டிருந்த இரண்டாம் நிலை அடமானங்களுக்குரிய கடனீடுகளின் மதிப்பு பரவலாக குறைந்தது. இதன் விளைவாக பல அமெரிக்க அரசு ஆதரவுப் பெற்ற வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் முதலீடுகளில் அதிக வீழ்ச்சி ஏற்பட்டது, இதனால் உலகம் முழுதும் கடன் இறுக்கம் அதிகமானது.

பின்னணியும் நிகழ்வின் காலக்கோடும்

இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் 
வீட்டுக் குமிழிகளுக்கு பங்களிக்கும் காரணிகள்
இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் 
வீட்டு விலைகள் வீழ்ந்தபோது டோமினோ விளைவுகள்

2005-06 ஆம் ஆண்டின் போது உச்சத்திலிருந்த அமெரிக்க வீட்டுச் சந்தையின் குமிழி சிக்கல் வெடித்ததே இதற்கான உடனடிக் காரணம் அல்லது தூண்டுதலாகும். அதன் பிறகு "இரண்டாம் நிலை" மற்றும் அனுசரிப்பு விகித அடமான கடன்கள் மீதான கடன் திருப்பி வழங்காமை விகிதங்கள் விரைவாக அதிகரித்தது. எளிதான துவக்க விதிகள் மற்றும் நீண்ட கால வீட்டு விலை அதிகரிப்பு போன்ற கடன் ஊக்கமளிப்பு அம்சங்களின் அதிகரிப்பினால், கடனாளிகள் விரைவாக மிகவும் ஏற்ற நிபந்தனைகளில் மறுநிதியுதவிப் பெற முடியுமென்ற நம்பிக்கையைப் பெற்று இதன் பேரில் கடுமையான அடமானங்களை கடனீடு செய்யத் துணிவூட்டியது. எனினும், 2006-07 ஆம் ஆண்டில் வட்டி விகிதங்கள் அதிகரித்து வீட்டு விலைகள் ஓரளவு குறையத் துவங்கிய போது அமெரிக்காவின் பல பகுதிகளில் மறுநிதியளிப்பு மிகக் கடினமானது. எளிதான துவக்க வரையறைகள் காலாவதியான போது கடன் திருப்பு தவறுதல்கள் மற்றும் முன்கூட்டியே கடன் முடிப்பது ஆகிய நடவடிக்கைகள் குறிப்பிடுமளவு உயர்ந்து, எதிர்பார்த்தப்படி வீட்டு விலைகள் அதிகரிக்கத் தவறியது, அனுசரிப்பு விகித அடமானங்கள் வட்டி விகிதங்கள் உயர்ந்து மறு நிர்ணயத்திற்குள்ளாயின. வீட்டு விலை வீழ்ச்சியினால், வீடுகள் அடமானக் கடனை விடக் குறைவான மதிப்பிற்கு உட்பட்டன, இதனால் முன்கூட்டியே கடன் முடிப்பதற்கு நிதி ஊக்கமளிப்பு வழங்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டின் பிற்காலங்களில் அமெரிக்காவில் துவங்கி நடைபெற்று வரும் முன்கூட்டியே கடன் அடைப்பதென்ற தொற்று நோய் உலக பொருளாதார சிக்கலில் முக்கிய காரணியாக இருக்கிறது. காரணம், இது நுகர்வோரின் செல்வத்தைக் கரைத்து, வங்கி நிறுவனங்களின் நிதி வலுவை அரிக்கிறது.

சிக்கலுக்கு வழிவகுத்த வருடங்களில், குறிப்பிடத்தகுந்த அளவிலான அந்நியப் பணம், விரைவாக வளர்ந்து வரும் ஆசியப் பொருளாதார நாடுகளிடமிருந்தும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்தும் அமெரிக்காவினுள் பாய்ந்தது. இந்த நிதிப் பாய்ச்சல்கள் 2002-04 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க குறை வட்டியுடன் இணைந்து எளிதான கடன் நிலைமைகளுக்கு பங்களித்து, வீட்டு விலை மற்றும் வீட்டுக் கடன் குமிழிகளுக்குக் காரணமானது. கடனின் பல்வேறு வகைகள் (எ.கா. அடமானம்,கடன் அட்டை மற்றும் வாகனக் கடன்) எளிதாகப் பெற முடிந்தது. மேலும், நுகர்வோர் முன்காணப்படாத கடன் சுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். வீட்டு விலைகள் மற்றும் கடன் சுபிட்சத்தின் பகுதியாக, அடமான அடிப்படைக் கடனீடுகள் என்ற நிதி உடன்படிக்கைகள் அளவு பெருமளவு அதிகரித்தது. இவை, அடமானப் பெறுமானங்கள் மற்றும் வீட்டு விலைகளிடமிருந்து அவற்றுக்கான மதிப்பினைப் பெறுகின்றன. இது போன்ற நிதி முறைகளின் கண்டுபிடிப்பு உலகம் முழுதுமுள்ள நிறுவனங்கள், நிதி முதலீட்டாளர்கள் ஆகியோரை அமெரிக்க வீட்டுச் சந்தையில் முதலீடு செய்ய ஏதுவாக்கியது. வீட்டு விலைகள் குறைந்ததால், முன்னணி உலக நிதி நிறுவனங்கள், இரண்டாம் நிலை அடமான அடிப்படை பத்திரங்களிடமிருந்து கடன் பெற்றவையும், அதிக அளவில் முதலீடு செய்திருந்தவையும், கணிசமான இழப்புகளை அடைந்தன. சிக்கல் வீட்டுச் சந்தையிலிருந்து பொருளாதாரத்தின் பிற பகுதிகளில் பரவிய போது கடன் அடைப்பதில் தவறுதல் மற்றும் இதர கடன் வகைகளின் இழப்புகள் கணிசமாக உயர்ந்தன. உலகம் முழுதும் மொத்த இழப்புகள் அமெரிக்க டாலர்களில் ட்ரில்லியன்கள் அளவில் இருந்ததாக மதிப்பிடப்பட்டது.

வீட்டு மற்றும் கடன் குமிழிகள் உருவானபோது, நிதியமைப்பு தொடர்ச்சியான காரணிகளால் அதிகமான சிதைவுக்கு உள்ளாகியது. முதலீட்டு வங்கிகள் மற்றும் நிழல் வங்கியமைப்பு எனப்படும் இழப்பீட்டு கைகாப்பு நிதிகள், போன்ற நிதியமைப்புகளின் அதிகரிக்கும் முக்கிய பங்கினை கொள்கை வகுப்பாளர்கள் அங்கீகரிக்கவில்லை. சில வல்லுநர்கள் இத்தகைய வங்கிகள் வணிக வங்கிகள் (வைப்பு) போல் அமெரிக்க ஒன்றிய பொருளாதாரத்திற்கு கடன் அளிப்பதில் முக்கியமானவையாகிவிட்டன என்றாலும் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதில்லை. இத்தகைய நிறுவனங்களும் அதே போன்ற சில கட்டுப்பாட்டிற்குள்ளான வங்கிகளும் கணிசமான கடன் சுமையை ஏற்றிருந்தன, மேற்சொன்ன கடன்களை கொடுத்திருந்தும் அவற்றின் கடன் தவறுதலையோ அல்லது அடமான அடிப்படை பத்திரங்களின் இழப்பையோ உள்வாங்கிக் கொள்ளும் போதுமான நிதி தடையுறை ஏதுமின்றி இருந்தன. இந்த இழப்புகள் நிதி நிறுவனங்களின் கடன் அளிக்கும் திறனைப் பாதிக்கச் செய்து பொருளாதார நடவடிக்கைகளை மெதுவாக்கின. முக்கிய நிதியமைப்புகளின் நிலைத்தன்மை குறித்த கவலைகள், மத்திய வங்கிகள் நிதி வழங்கி கடன் அளிப்பதை ஊக்குவிக்கவும் வணிக பத்திரச் சந்தையில் மீண்டும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வைத்தன, இவை வர்த்தக இயக்கத்திற்கான நிதியளிப்பிற்கு தேவையான ஒருங்கிணைந்த அம்சங்களாக உள்ளன. அரசுகளும் முக்கிய நிதி நிறுவனங்களுக்கு மறுமீட்பு நிதியளித்தன. இது அந்த நிறுவனங்களுக்கு கணிசமான கூடுதல் நிதிக் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டே வழங்கப்பட்டன.

வீட்டுத் தொழிற் சந்தையில் ஏற்பட்ட சரிவு ஏற்படுத்திய சிக்கல்கள் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிதிச் சந்தை சிக்கல்கள், ஆகியவையே உலகின் பல்வேறு மத்திய வங்கிகள் வட்டி குறைப்பைச் செய்யவும் அரசுகள் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும் முக்கியக் காரணிகளாக இருந்தன. இச்சிக்கலினால் ஏற்பட்ட உலக பங்குச் சந்தை விளைவுகள் குறிப்பிடத்தக்கவை. 2008 ஆம் ஆண்டின் ஜனவரி 1 லிருந்து 11 அக்டோபர் வரையிலான அமெரிக்க பெரு நிறுவனங்களின் பங்குகளின் உரிமையாளர்கள் அவர்களது பங்கு மதிப்பு $20 டிரில்லியனிலிருந்து $12 டிரில்லியனாகச் சரிந்ததால் $8 டிரில்லியன் அளவிற்கு நட்டத்தைச் சந்தித்தனர். பிற நாடுகளில் நட்டம் சராசரியாக 40% அளவிலிருந்தது. பங்கு சந்தைகளில் நட்டமும் வீட்டு மதிப்பு வீழ்ச்சியும் முக்கிய பொருளாதார ஊக்கியான நுகர்வோர் செலவினங்களில் மேலும் கீழ்நோக்கிய அழுத்தத்தைக் கொடுத்தன. இச் சிக்கலைத் தீர்க்க பெரிய வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் தலைவர்கள் 2008 நவம்பர் மற்றும் 2009 மார்ச்சில் செயல் தந்திரங்களை வகுக்கக்கூடினர். 2009 ஏப்ரல் வரை சிக்கலின் பல வேர்க் காரணிகள் இன்னும் கையாளப்பட வேண்டியவையாக உள்ளன. பல வகையிலான தீர்வுகள் அரசு அலுவலர்கள், பொருளாதார அறிஞர்கள், மத்திய வங்கிகள் மற்றும் வணிக பணியாளர்கள் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்டன.

அடமானச் சந்தை

இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் 
அமெரிக்க குடியிருப்பு சொத்துக்கள் கடன் முன் கூட்டியே தரும் நடவடிக்கைகள் காலாண்டு (2007-2009).

இரண்டாம் நிலை அடமானக் கடன்தாரர்கள் என்போர், பொதுவாக பலவீனமான கடன் வரலாற்றையும் குறைந்த கடன் திருப்பியளிக்கும் தகுதியையும் கொண்டுள்ளனர். முதன் நிலை கடன்தாரர்களை விட இரண்டாம் நிலை கடன்கள் அதிக திருப்பியளிக்கப்படாமல் போகும் சிக்கலைக் கொண்டவை. கடன்தாரர் ஒருவேளை நேரத்திற்கு கடன் அளித்தவர்க்கு அடமானக் கடன் திருப்பக் கடமைத் தவறினால் அவை (வங்கி அல்லது நிதி நிறுவனம்) அவர்களின் சொத்தினை கைக்கொண்டு விடுவர், அதற்கு முன்கூட்டியே கடன் முடித்தல் என்று பெயர்.

2007 ஆம் ஆண்டு மார்ச் வரை அமெரிக்க இரண்டாம் நிலை அடமானச் சந்தையின் மதிப்பு $1.3 டிரில்லியனாக இருந்தது. இதில் 7.5 மில்லியனுக்கு அதிகமானது முதல் பற்றுரிமையுள்ள இரண்டாம் நிலை அடமானச் சந்தை திருப்பியளிக்கப்படாமலிருந்தது. 2004-2006 ஆம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் இரண்டாம் நிலை அடமானச் சந்தை உருவான மொத்த அடமானச் சந்தை பங்கில் ஒப்புமையில் 18%-21% ஆக இருந்தது. அதே நேரம் 2001-2003 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் 10% ஆக இருந்தது. 2007 ஆம் ஆண்டுளின் மூன்றாம் கால் பகுதியில் இரண்டாம் நிலை ARMகள் அமெரிக்க திருப்பியளிக்கப்படாத அடமானங்களில் 6.8% மட்டுமே பங்களித்தன. அத்தோடு, அந்த காலாண்டில் தொடங்கிய கடன் முன்கூட்டியே முடித்தல்களில் 43% க்கு அது காரணமாக இருந்தது. 2007 அக்டோபரில் ஏறக்குறைய 16% இரண்டாம் நிலை அனுசரிப்பு விகித அடமானங்கள் 90 நாட்கள் திருப்பியளிக்கப்படாமலும் அல்லது கடன் வழங்குநர் முன்கூட்டியே கடன் முடித்தல் நடவடிக்கையை துவங்கியிருக்கும் நிலையிலும் இருந்தது, இது 2005 ஆம் ஆண்டை விட மும்மடங்கு அதிகமாகும். 2008 ஆம் ஆண்டு ஜனவரியில் கடன்திருப்பித்தரத் தவறுதல் விகிதம் அதிகரித்து 21% ஆகவும், 2008 ஆம் ஆண்டு மே யில் 25% ஆகவும் உயர்ந்தது.

அமெரிக்க குடும்பங்களினால் அதிகபட்சம் நான்கு குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புக்களின் திருப்பித் தர வேண்டிய குடியிருப்பு அடமானங்களின் மதிப்பு அமெரிக்க $9.9 டிரில்லியன்களாக 2006 ஆம் ஆண்டின் இறுதியிலும், 2008 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அமெரிக்க $10.6 டிரில்லியன்களாகவும் இருந்தது. 2007 ஆம் ஆண்டின் போது, கடன் அளித்தவர்கள் முன்கூட்டியே கடன் முடிக்கும் நடவடிக்கைகளின் மூலம் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் சொத்துக்களைக் கைப்பற்றத் தொடங்கினர், இது 2006 ஐ விட 79% அதிகமாகும். இது 2008 ஆம் ஆண்டில் 2.3 மில்லியனாக அதிகரித்தது, அப்போது அதன் மதிப்பு 2007 ஆம் ஆண்டை விட 81% அதிகமாகும். 2008 ஆகஸ்ட் வரை, 9.2% எல்லா அடமானங்களின் பற்றும் ஒன்று திருப்பித்தரப்படாமலிருந்தது அல்லது முன்கூட்டியே முடிக்கப்பட்டிருந்தது. 2007 ஆம் ஆண்டு ஆகஸ்டிற்கும் 2008 ஆண்டு அக்டோபருக்கும் இடையில் 936,439 அமெரிக்க குடியிருப்புகள் முன்கூட்டியே கடன் முடிப்புக்குள்ளாயின. முன்கூட்டியே கடன் முடித்தல் குறிப்பிட்ட மாகாணங்களில், எண்ணிக்கை மற்றும் முன்கூட்டியே கடன்முடிப்புக்கான விண்ணப்பங்களின் விகிதங்கள் ஆகிய இரண்டின் ரீதியாகவும் குவிந்திருந்தன. 2008 ஆம் ஆண்டில் பத்து மாகாணங்கள் 74% முன்கூட்டியே கடன் முடித்தலுக்கான விண்ணப்பங்களைக் கொண்டிருந்தன; இதில் இரண்டு மாகாணங்கள் (கலிபோர்னியா மற்றும் ஃபோளோரிடா) 41% என்ற அதிக மதிப்பைக் கொண்டிருந்தன. ஒன்பது மாகாணங்கள் சராசரி தேசிய முன்கூட்டியே கடன் முடிப்பு விகிதமான மொத்த குடியிருப்புகளின் 1.84% ஐ விட அதிகமான விகிதத்தைக் கொண்டிருந்தன.

காரணங்கள்

இந்தச் சிக்கலுக்கு, வீடு மற்றும் கடன் சந்தைகளில் பரவும் தன்மையுள்ள, ஆண்டுக் கணக்கில் உருவாகும் எண்ணற்ற காரணிகள் காரணமாக இருப்பதாகக் கருதப்படலாம். கூறப்படும் காரணங்களாகக் கருதப்படுபவையில் உள்ளடங்குபவை: அனுசரிக்கும் விகித அடமானங்கள் மறு அமைப்பினால் வீட்டு உரிமையாளர்கள் அடமான தொகையை திருப்பிச் செலுத்த இயலாமல் போதல், அதீத கடன் நீட்டிப்பு, சிக்கல் மிகுந்த கடன் வழங்குதல், வளமான காலங்களிலான அதீத ஊகம் மற்றும் மூளைச்சலவைக் கருத்துகள், ஆபத்து நிறைந்த வணிக கடன்கள், தனிநபர் மற்றும் பெரு நிறுவன அளவிலான அதிக கடன் அளவுகள் மற்றும் கடன் திருப்பி அடைக்க முடியாமை சிக்கல்களை மறைத்து வழங்கப்படும் அடமானக் கடன்களை வழங்கும் நிதித் திட்டங்கள், பணக் கொள்கை, பன்னாட்டு வர்த்தகச் சமநிலையின்மை மற்றும் அரசுக் கட்டுப்பாடுகள் (அல்லது இவை போதிய அளவிலில்லாத நிலை). முக்கிய இரண்டாம் நிலை அடமானச் சிக்கலின் இரண்டு வினையூக்கியாக இருப்பவை தனியார், வங்கிகள் அடமான பங்குச் சந்தை நுழைவதால் ஏற்படும் பணப்பாய்வுகள் மற்றும் அடமான முகவர்களின் வேட்டையாடும் வகையிலான கடன் வழங்கும் பழக்கங்கள், குறிப்பாக அனுசரிப்பு விகித அடமானம், 2-28 கொண்ட கடன் ஆகியவையாகும். இருப்பினும், குறிப்பாக வால் ஸ்டிரீட் மற்றும் நிதித்துறை ஆகியவற்றின் நெறிமுறை பாதுகாப்பின்மையே இந்தப் பல காரணங்களின் மையமாக சுட்டப்படுகிறது.

"டிக்லரேஷன் ஆஃப் தி சம்மிட் ஆன் ஃபினான்ஷியல் மார்க்கெட்ஸ் அண்ட் தி வேர்ல்ட் இகானமி," யில் 2008 ஆம் ஆண்டில் நவம்பர் 15 அன்று குரூப் ஆஃப் 20 இன் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் அவர்கள் கீழ்க்கண்ட காரணங்களைக் கூறினர்.

During a period of strong global growth, growing capital flows, and prolonged stability earlier this decade, market participants sought higher yields without an adequate appreciation of the risks and failed to exercise proper due diligence. At the same time, weak underwriting standards, unsound risk management practices, increasingly complex and opaque financial products, and consequent excessive leverage combined to create vulnerabilities in the system. Policy-makers, regulators and supervisors, in some advanced countries, did not adequately appreciate and address the risks building up in financial markets, keep pace with financial innovation, or take into account the systemic ramifications of domestic regulatory actions.

வீட்டுச் சந்தையில் செழிப்பும் அழிவும்

இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் 
காலாண்டில் இருக்கின்ற வீட்டு விற்பனைகள், கணக்கு மற்றும் மாத அளிப்புகள்
இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் 
வீட்டு & நிதித்துறைகளின் விஷச் சுழல்கள்

குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் அந்நிய பணப் பாய்ச்சல் ஆகியவை எளிதான கடன் தரும் சூழ்நிலையை, சிக்கலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு உண்டாக்கி, வீட்டு சந்தை வளர்ச்சியினைத் தூண்டி கடன் அடிப்படையிலான நுகர்வினை ஊக்குவித்தது. அமெரிக்க வீட்டு உரிமைச் சதவீதம் 1994 ஆம் ஆண்டில் 64% மாக இருந்தது (1980 லிருந்து அதே அளவோடு இருந்த இம்மதிப்பு) எல்லாக் காலங்களுக்கான அதிகபட்ச மதிப்பான 69.2% மாக 2004 இல் உயர்ந்தது. இரண்டாம் நிலை அடமானக் கடனே வீட்டு உரிமை விகிதங்களின் உயர்வுக்கும் மற்றும் ஒட்டுமொத்த வீடுகளின் தேவைக்குமான அதிகரிப்பிற்குமான பெரும் காரணமாக இருந்ததோடு, விலைகளையும் உயர்த்தியது.

1997 ஆண்டிற்கும் 2006 ஆண்டிற்கும் இடையில் வழக்கமான ஓர் அமெரிக்க வீட்டின் விலை 124% அதிகரித்தது. 2001 ஆம் ஆண்டில் முடிவடைந்த இரு பத்தாண்டுகளில் தேசிய சராசரி வீட்டு விலை சராசரி வீட்டு வருமானத்தினைப் போன்று 2.9 லிருந்து 3.1 மடங்கு வரை இருந்தது. இந்த விகிதம் 2004 ஆம் ஆண்டில் 4.0 வும், 2006ல் 4.6 கவும் உயர்ந்தது. இந்த வீட்டுத் துறை குமிழி சில வீட்டு உரிமையாளர்களை வீட்டை மறு நிதியளிப்பிற்கு குறைந்த வட்டி விகிதத்தில் உட்படுத்த வைத்தது, அல்லது விலை அதிகரிப்பினால் பாதுகாக்கப்பட்ட இரண்டாம் அடமானத்தின் பேரில் நுகர்வுச் செலவுகளுக்கு நிதியளிக்கத் தூண்டியது. அமெரிக்க குடும்பக் கடன் வருடாந்திர செலவழிக்கத்தக்க தனிநபர் வருமானத்தின் விழுக்காடாக 2007 இறுதியில் 127% ஆகவும் 1990 ஆம் ஆண்டில் 77% ஆகவும் இருந்ததது.

வீட்டு விலைகள் உயர்ந்து வந்த போது நுகர்வோர் குறைவாக சேமித்தனர் மேலும் கடன் வாங்கியும் அதிகமாக செலவழிக்கவுமான இரண்டையும் செய்தனர். 1974 ன் வருட இறுதியில் வீட்டுக் கடன் தனிநபர் செலவழிப்பு வருமானத்தின் 60% மதிப்பான $705 பில்லியனிலிருந்து அதிகரித்து 2000 ஆம் ஆண்டின் இறுதியில் $7.4 டிரில்லியன் ஆனது, மேலும் 2008 ஆம் ஆண்டின் நடுவில் $14.5 டிரில்லியனாக ஆனது அது தனிநபர் செலவழிப்பு வருமானத்தின் 134% ஆகும். 2008 ஆம் ஆண்டில் வழக்கமான அமெரிக்க குடும்பம் 13 கடன் அட்டைகளை வைத்திருந்தது, அதில் 40% குடும்பங்கள் நிலுவை மீதம் வைத்திருந்தன, அது 1970 லிருந்த 6% இலிருந்து அதிகரித்திருந்தது. கட்டற்ற பணம் வீட்டுத் துறைப் பங்கின் பிரிப்பிலிருந்து நுகர்வோர்களால் பயன்படுத்தப்பட்ட கட்டற்ற பணம் 2001 ஆம் ஆண்டில் $627 பில்லியனிலிருந்து இரட்டிப்பாகி 2005 ஆம் ஆண்டில் $1,428 பில்லியனானது, வீட்டுக் குமிழி இக்காலகட்டத்தில் கிட்டத்தட்ட மொத்தமாக $5 டிரில்லியன் அளவுக்குரியதை உருவாக்கியது. அமெரிக்க வீட்டு அடமானக் கடன் தேசிய மொத்த உற்பத்தியின் ஒப்பீட்டில் சராசரியாக 1990 ஆம் ஆண்டுகளில் 46% மாக இருந்து 73% மாக 2008 ஆம் ஆண்டில் மாறி $10.5 டிரில்லியனை அடைந்தது.

கடன் மற்றும் வீட்டு விலைகள் வெடிப்பானது கட்டுமான பூரிப்புக்கு வித்திட்டது, பின்னர் விற்கப்படாத வீடுகளின் உபரிக்கு வழியேற்படுத்தியது, அமெரிக்க வீட்டு விலைகள் உச்சத்திற்கு சென்று 2006 ஆம் ஆண்டின் மத்தியில் வீழத் துவங்கியதற்கு அது காரணமானது. எளிதான கடனும், வீட்டு விலைகள் தொடர்ந்து உயரும் என்ற நம்பிக்கையும் பல இரண்டாம் நிலை கடனாளிகளை அனுசரிப்பு விகித அடமானத்தைப் பெறத் தூண்டியது. இந்த அடமானங்கள் கடனாளிகளை, சந்தை விகிதத்திற்கு முன் தீர்மானிக்கப்பட்ட குறைவான வட்டி விகிதத்தில் முதலில் தூண்டி, பின்னர் சந்தை வட்டி விகிதத்திற்கு அடமானத்தின் மீதி காலத்திற்கு சிக்கவைத்தது. தொடக்க நீட்டிப்புக் காலம் முடிந்த பிறகு உடனடியாக கடனாளிகளால் உயர்ந்த தவணைகளை செலுத்த இயலாத போது அடமானங்களை மறு நிதிக்குட்படுத்த முயலுகின்றனர். மறு நிதியளிப்பு பல அமெரிக்க பகுதிகளில் வீட்டு விலைகள் வீழ்ச்சியடையத்துவங்கியபோது மேலும் கடினமாகியது. மறு நிதியளிப்பினால உயர்ந்த மாதத் தவணைகளிலிருந்து தப்பிக்க இயலாத கடனாளிகள் கடன் திருப்பித்தருவதிலிருந்து தவறினர்.

அதிக எண்ணிக்கையிலான கடனாளிகள் தங்களது அடமானத் தவணைகளை செலுத்தத் தவறும் போது (இது தற்போது நடந்து வரும் சிக்கல்) முன்கூட்டியே கடன் முடிப்பது மற்றும் வீடுகளை விற்பனைக்கு அளிப்பது அதிகரித்தது. இது வீட்டு விலைகளின் மீது கீழிறக்க அழுத்தத்தை வழங்குகிறது. இது மேலும் வீட்டு உரிமையாளர்களின் உரிமைப் பங்கினைக் குறைக்கிறது. அடமானத் தவணைகளில் ஏற்படும் வீழ்ச்சி அடமானப் பின்னணியுள்ள கடனீடுகளின் மதிப்பையும் குறைக்கிறது, அது வங்கிகளின் நிகர மதிப்பையும் நிதி ஆரோக்கியத்தையும் அரிக்கிறது. இந்தச் நச்சுச் சுழல்சிக்கலின் மையமாக உள்ளது.

2008 ஆம் ஆண்டில் செப்டம்பர் சராசரி அமெரிக்க வீட்டு விலைகள் 2006 ன் மத்தியில் இருந்த உச்ச மதிப்பிலிருந்து 20% குறைந்தன. இந்த பெரும் எதிர்பாராத வீட்டு விலைகளின் வீழ்ச்சியானது, பல கடனாளிகள் தங்களது வீடுகளில் பூஜ்யம் அல்லது எதிர்மறையான உரிமைப் பங்கு மதிப்பையே கொண்டுள்ளதைக் குறிக்கிறது, இதன் பொருள் அவர்களது வீடுகளின் மதிப்பு அவர்களின் அடமான மதிப்பை விட குறைந்துள்ளது என்பதாகும். மார்ச் 2008 ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்ட 8.8 மில்லியன் கடனாளிகள்- மொத்த வீட்டு உரிமையாளர்களிலும் 10.8% பேர்- தங்களது வீடுகளில் எதிர்மறையான உரிமைப் பங்கினைப் பெற்றிருந்தனர், இது 2008 ஆம் ஆண்டு நவம்பரில் 12 மில்லியனாக அதிகரித்ததாக நம்பப்படுகிறது. இச்சூழ்நிலையில் கடனாளிகள் தங்களது அடமானங்களில் தவற ஊக்குவிப்பதாக இருப்பது சொத்திற்கு எதிரான கடன் வழக்கமாக புகலிடமற்றக் கடனாகும். பொருளாதார அறிஞரான ஸ்டான் லிபோவிட்ஸ் வால்ட் ஸ்டிரீட் ஜர்னல் இதழில், 12% வீடுகளே எதிர்மறையான பங்கினை கொண்டிருந்தாலும், அவை முன்கூட்டியே திருப்பும் கடனில் 47% ஐ 2008 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கொண்டிருந்தது என வாதிட்டார். அவர், வீட்டில் உரிமைப் பங்கு எந்தளவிற்கு இருக்கிறது என்பதுவே முன்கூட்டியே முடிக்கப்படும் கடனில் முக்கியமானதாகும், இது கடன் வகை, கடனாளியின் கடன் மதிப்பு, அல்லது கடனடைக்கும் திறன் ஆகியவற்றைவிட முக்கிய காரணியாகவுள்ளது என்ற முடிவுக்கு வந்தார்.

முன்கூட்டியே திருப்பித்தரும் கடனின் விகித எண்ணிக்கை அதிகரித்து விற்பனைக்கு வரும் வீடுகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. முன் வருடத்தை விட 2007 ஆம் ஆண்டில் புதிய வீடுகளின் விற்பனை 26.4% குறைந்திருந்தது. 2008 ஆம் ஆண்டு ஜனவரியில், விற்கப்படாத புதிய வீடுகளின் பட்டியல் 2007 ஆம் ஆண்டின் டிசம்பர் விற்பனை எண்ணிக்கையைவிட 9.8மடங்கு அதிகமாக இருந்தது, இது 1981 ஆம் ஆண்டிலிருந்து காணப்பட்ட அதிகபட்ச விகித மதிப்பாகும். மேலும், நான்கு இலட்சம் வீடுகள் விற்பனைக்கு வந்ததில் ஏறக்குறைய 2.9 மில்லியன் வீடுகள் வெறுமையாக இருந்தவை. இந்த விற்காத வீடுகளின் மீதமிருந்த தேக்கம் வீட்டு விலைகளை குறைத்தது. விலைகள் குறைந்ததால் மேலும் சில வீட்டு உரிமையாளர்கள் கடன் திருப்பத்தவறுதல் அல்லது முன்கூட்டியே கடன் முடித்தல் சிக்கலில் விழுந்தனர். வீட்டு விலைகள் இந்த விற்காத வீடுகளின் பட்டியல் (மிகை அளிப்பின் ஒரு சான்று நிகழ்வு)சராசரியான அளவிற்கு குறையும்வரை தொடர்ச்சியாக சரியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஊகம்

குடியிருப்பு வீட்டுத் தொழிலின் ஊகக் கடனே இரண்டாம் நிலை அடமானச் சிக்கலின் பங்களிப்பு காரணியாகக் குறிக்கப் படுகிறது. 2006 ஆம் ஆண்டின் போது, வாங்கப்பட்ட வீடுகளில் (1.65 மில்லியன் வீடுகளில்) 22%, முதலீட்டு நோக்கத்தைக் கொண்டவை, கூடுதலாக 14% (1.07 மில்லியன் வீடுகள்)விடுமுறைக் கால வீடுகளாக வாங்கப்பட்டன. 2005 ஆம் ஆண்டின் போது, இவற்றின் மதிப்புகள் முறையே 28% ஆகவும், 12% ஆகவும் இருந்தன. வேறு விதமாகக் கூறினால், சாதனை அளவாக 40% வீட்டு வாங்குதல் அளவுகளுக்குரிய வீடுகள் முதல் தர குடியிருப்பிற்கான நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. டேவிட் லெரே, NAR ன் தலைமைப் பொருளாதார நிபுணர், 2006 ஆம் ஆண்டின் முதலீட்டு நோக்க வாங்குதல் குறையும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே எனக் கூறினார்: " 2006 ஆம் ஆண்டில் ஊக வியாபாரிகள் சந்தையை விட்டு வெளியேறினர், அது முதல் தரச் சந்தையை விட முதலீட்டுச் சந்தை வேகமாக வீழக் காரணமானது.

2000 மற்றும் 2006 ஆம் ஆண்டிற்கு இடையே வீட்டு விலைகள் கிட்டத்தட்ட இரு மடங்காகியது, பணவீக்கத்தின் வீதத்திற்கு ஏறக்குறைய சமமாக இருந்த வரலாற்று ரீதியான குறிப்பிடத்தகுந்த ஒரு விரிவான வேறுபட்ட போக்காகும். மரபு ரீதியாக வீடுகள் ஊகம் சார்ந்த முதலீடுகளாக் கருதப்படுவதில்லையெனினும் இந்த நடவடிக்கை வீட்டு பூரிப்புக்காலத்தில் மாறியது. ஊடகங்கள் பரவலாக தொகுப்பு வீடுகள் கட்டப்படும்போதே வாங்கப்பட்டு, பிறகு இலாபத்திற்கு விற்பனையாளர் ஒருமுறை கூட இங்கு வாழ்ந்திராமல் "சுண்டி விடுவதாக"க் (விற்கப்படுவதாகக்) கூறின. சில அடமான நிறுவனங்கள் 2005 ஆம் ஆண்டிற்கு முன்கூட்டியே இந்த நடவடிக்கைகளின் உள்ளார்ந்த சிக்கல்களை பற்பல சொத்துக்களில் முதலீட்டாளர்கள் உயர்ந்த துணை வலுவுடன் ஆதயங்களைப் பெறக் கருதுவதை அறிந்த பிறகு அடையாளம் கண்டுணர்ந்தனர்.

மன்ஹாட்டன் நிறுவனத்தின் நிகோலே ஜெலினாஸ் ஒரு வீட்டைப் பற்றிய மாறி வரும் எண்ணங்களை, மரபு ரீதியிலான விலைவாசி ஏற்றத்தின் இழப்பீட்டுக் கைகாப்பு ஏற்பாடாக கருதுவதிலிருந்து ஊக முதலீடாக கருதுவதை வரி மற்றும் அடமானக் கொள்கைகளால் அனுசரிக்கவில்லையென்றால் ஏற்படும் எதிமறையான விளைவுகளை விவரித்தார். பொருளாதார நிபுணர் ராபர்ட் ஷில்லர் ஊகக் குமிழிகளை தூண்டுபவைப் பற்றி வாதிட்டது " உண்மை நிலவரங்கள் உள்ளே நுழையமுடியாத தொற்றக் கூடிய நம்பிக்கை, விலைகள் எப்போதெல்லாம் ஏறுகின்றனவோ அடிக்கடி கைக்கொள்ளப்படுகிறது. குமிழிகள் முதன்மையாக சமூக நிகழ்வுகளாகும்; நாம் அவற்றை தூண்டும் உளவியலை புரிந்து கொள்வதுடன் அணுகவும் செய்யாதவரை அவை தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கும்." ஹைமான் மின்ஸ்கி என்ற கீனீசிய பொருளியலாளர் எவ்வாறு ஊகக் கடன், ஏற்றம் காணும் கடனிற்கும் அதன் பிறகான சொத்து மதிப்பின் வீழ்ச்சிக்கும் பங்களிக்கிறது என விவரித்தார்.

உயர்-சிக்கல் அடமானக் கடன்கள் மற்றும் கொடுக்கல்/வாங்கல் நடைமுறைகள்

சிக்கலுக்கு முந்தைய வருடங்களில், கடனளிப்பவர்களின் நடவடிக்கை முற்றிலும் மாறியது. கடன் அளிப்பவர்கள் உயர் சிக்கல் வாய்ந்த கடனாளிகளுக்கு மேலும் மேலும் கடனளித்தனர். இரண்டாம் நிலை அடமானங்கள் 1994 ஆம் ஆண்டில் $35 பில்லியன் தொகையாக இருந்தது (மொத்த தோன்றுபவற்றில் 5%) 1996 ஆம் ஆண்டில் 9%, 1999 ஆம் ஆண்டில் $160 பில்லியன் (13%), மற்றும் 2006 ஆம் ஆண்டில் $600 (20%) எனவும் இருந்தது.. மத்திய வங்கியின் ஆய்வு ஒன்று இரண்டாம் நிலை அடமானச் சந்தைக்கும் முதல் நிலைச் சந்தைக்குமான வட்டி விகிதங்களுக்கிடையிலான ("இரண்டாம் நிலை சந்தையின் விலையேற்றம்") சராசரி வேறுபாடு 2001 ஆம் ஆண்டிற்கும் 2007 ஆம் ஆண்டிற்கும் இடையில் கணிசமாகக் குறைந்துள்ளதைக் கண்டது. குறையும் சிக்கல் தவணை மற்றும் கடன் தரக்கட்டுப்பாடுகள் இணைந்து, அவை கடன் சுழல்களின் பூரிப்பு மற்றும் வெடிப்பு இரண்டிற்கும் பொதுவானவை.

உயர் சிக்கல் கடனாளிகளை முக்கியமாகக் கருத்தில் கொள்வதுடன் சேர்த்து, கடன் அளிப்பவர்கள் அதிக அளவில் சிக்கல் வாய்ந்த கடன் விருப்பத்தேர்வுகளையும் கடன் ஊக்கங்களையும் கொடுத்தனர். 2005 ஆம் ஆண்டில், சராசரி முன் தொகை முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு 2% இருந்தது, மேலும் அத்தகைய வீடு வாங்குவோர்களில் 43% பேர் எந்த மாதிரியான முன் தொகையையும் செலுத்தவில்லை. ஒப்பீட்டளவில்,சீனா 20% யையும் தாண்டிய முன் தொகை தேவைகளையும் முதன்மை இல்லாத குடியேற்றங்களுக்கு அதிக அளவில் வைத்துள்ளது.

இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் 
அமெரிக்க கருவூலத் துறையின் சந்தேகத்திற்கிடமான் நடவடிக்கை அறிக்கை அலசல்கள் படி அடமானக் கடன் மோசடிகளின் வளர்ச்சி

சில நேரங்களில் நிஞ்ஜா கடன்கள்என அழைக்கப்படும் ஓர் உயர் சிக்கல் மாற்றுக் கடன் "வருமானமற்ற, வேலையற்ற மற்றும் சொத்துக்களற்ற" கடன்கள் ஆகும். மேலும் ஒரு எடுத்துக் காட்டாக, வட்டி மட்டுமேயுள்ள அனுசரிப்பு வட்டி அடமானக் கடன் (ARM), துவக்கக் காலத்தில் கடன்தாரர் வட்டி மட்டுமே (அசலை அல்ல)கட்டுகின்றதை அனுமதிக்கின்றது. இன்னும் ஒரு உதாரணம் "செலுத்துதல் விருப்பத்தேர்வுக்" கடன் ஆகும், இதில் வீட்டு உரிமையாளர் வேறுபட்ட தொகையினைச் செலுத்தலாம் ஆனால் செலுத்தப்படாத வட்டி அசலோடு சேர்க்கப்படும். 2004 மற்றும் 2006 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றிய ARM களில் மூன்றில் ஒரு பங்கு "தொந்தரவு" தரும் 4% விகிதங்களுக்கு கீழானது, பின்னர் சில துவக்க காலத்திற்கு பிறகு கணிசமாக உயர்த்தப்பட்டு, மாதத் தவணைத் தொகையை இயன்றளவு இரட்டிப்பாக்கியது.

இரண்டாம் நிலை ARM கடனாளிகளில் ஒரு பகுதியினரில் கடன் குறியீடு நல்ல முறையில் தகுதியுடைய மரபு சார்ந்த அடமானங்களுக்கு மேம்பட்ட வரையறைகளில் அளிக்கப்படும் அடமானங்களின் சதவீதம் 2000 வருடத்தில் 41% லிருந்து 2006 ஆம் ஆண்டில் 61% மாக அதிகரித்தது. எனினும், கடன் குறியீடுகளைத் தாண்டிய கடன் வழங்கலைப் பாதிக்கும் பிற காரணிகள் உள்ளன. இத்தோடு சேர்ந்து, அடமான தரகர்கள் சில சந்தர்ப்பங்களில் இரண்டாம் நிலை ARM களை கடன் குறியீடுகள் மூலம் உறுதியான கடனுக்கான தகுதியைக் (அதாவது, இரண்டாம் நிலை இல்லாத) கொண்டவர்களுக்கு அளிப்பதற்கு ஊக்கத் தொகைகளை கடன் அளிப்பவர்களிடமிருந்து பெற்றனர்.

பூரிப்புக் காலங்களில் அடமானம் உறுதியளிக்கும் அம்சங்களின் தரநிலை திடீர் ஏற்றத்தைச் சந்தித்தது. தானியங்கு கடன் ஒப்புகைகள் கடன்களை முறையான மறு ஆய்வு ஆவணங்கள் ஏதுமின்றியும் அனுமதித்தன. 2007 ஆம் ஆண்டில், எல்லா இரண்டாம் நிலை கடன்களில் 40% தானியங்கு முறை உறுதியளிக்கும் ஆவண வகையின் கீழ் வழங்கப்பட்டவை. அடமான வங்கிகளின் கூட்டமைப்பின் தலைவர் அடமான முகவர்கள் வீட்டுக் கடன் பூரிப்பினால் இலாபமடைந்தும், கடனாளிகள் திருப்பியளிப்பார்களா என ஆராய தேவையானவற்றை செய்யவில்லையெனக் கூறினார். அடமான முறைக்கேடுகள் கடன் அளிப்பவர், வாங்குபவர் தரப்புகளில் பேரளவில் அதிகரித்தது. 2004 ஆம் ஆண்டில், அமெரிக்க புலனாய்வுத் துறை முதல் நிலை அல்லாத அடமான கடனில் முக்கிய கடன் சிக்கலானது "கொள்ளை நோய்" போல் அடமான முறைகேட்டில் ஏற்பட்டு அவர்கள் கூறியது போல் " S&L சிக்கல் போல் பாதிக்கக் கூடியதொரு பிரச்சினை" போன்றவற்றிற்கு வழியேற்படுத்தும்.

ஆக ஏன் கடன் தரநிலைகள் வீழ்ந்தன? பீபாடி விருதினைப் பெற்ற நிகழ்ச்சியொன்றில், NPRசெய்தியாளர்கள் வாதிட்டனர், ($70 டிரில்லியன் மதிப்புள்ள உலகம் முழுவதிலான நிலையான வருமான முதலீடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும்) "பெரும் பணக் குளம் ஒன்று" அமெரிக்க அரசுப் பத்திரங்கள் தருவதை விடக் கூடுதலான ஈன்றளிக்கக் கூடிய ஒன்றை அடைய முயற்சித்தது. மேலும், இப்பணக்குளம் ஏறத்தாழ அளவில் 2000 லிருந்து 2007 ஆம் ஆண்டு வரை இரட்டிப்பானது, இன்னும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான வருமானம் பெருக்கும் முதலீடுகள் விரைவாக வளரவில்லை. வால் ஸ்டிரீட் முதலீட்டு வங்கிகள் இத்தேவைகளை நிதி கண்டுபிடிப்புகளான அடமான அடிப்படையிலான பங்குகள்(MBS) மற்றும் ஒத்திசைவான கடன் கடமை(CDO), மூலமும் அவற்றிற்கு கடன் தரவரிசை முகமைகளால் பாதுகாப்பான தர நிலைகள் கொடுக்கப்பட்டதின் மூலம் பதிலளித்தன. அதன் விளைவாக, வால் ஸ்டிரீட் இந்தப் பணக் குளத்தை அமெரிக்க அடமான சந்தையுடன் இணைத்தது, இதனால் அடமான அளிப்பு சங்கிலியிலிருந்த எல்லோருக்கும் ஏராளமான கட்டணங்கள் கூடியது. இது கடன்களை விற்கும் அடமான முகவர் முதல், இவர்களுக்கு நிதியளித்த சிறிய வங்கிகள், இவர்கள் பின்னாலுள்ள பெரிய முதலீட்டு வங்கிகள் வரையிலுமிருந்தது. ஏறக்குறைய 2003 ஆம் ஆண்டில் மரபு ரீதியிலான கடன் தரங்கள் மூலம் அளிக்கப்படும் அடமானங்கள் இல்லாமல் போயின. எனினும், MBS மற்றும் CDO ஆகியவற்றிற்கான தொடர்ச்சியான வலுவான தேவையானது, கடன் தரங்களை அளிப்புச் சங்கிலியின் வாயிலாக அடமானங்கள் இன்னும் விற்கப்படும் வரையில் கீழே இறக்கச் செய்தது. பின்னர், இந்த ஊகக் குமிழி நிலையற்றதென்பது நிரூபணமானது. NPR இதை இவ்வாறு விவரித்தது:

The problem was that even though housing prices were going through the roof, people weren't making any more money. From 2000 to 2007, the median household income stayed flat. And so the more prices rose, the more tenuous the whole thing became. No matter how lax lending standards got, no matter how many exotic mortgage products were created to shoehorn people into homes they couldn't possibly afford, no matter what the mortgage machine tried, the people just couldn't swing it. By late 2006, the average home cost nearly four times what the average family made. Historically it was between two and three times. And mortgage lenders noticed something that they'd almost never seen before. People would close on a house, sign all the mortgage papers, and then default on their very first payment. No loss of a job, no medical emergency, they were underwater before they even started. And although no one could really hear it, that was probably the moment when one of the biggest speculative bubbles in American history popped.

கடனீடுமயமாக்கல் நடைமுறைகள்

இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் 
கடனீடுமயமாக்கல் அமைப்பின் கீழ் கடன் வாங்குதல்

மரபுரீதியிலான அடமான மாதிரியில், ஒரு வங்கி ஒரு கடனை உருவாக்கி கடன்தாரர்க்கு/வீட்டு உரிமையாளருக்கு கொடுத்து அதற்கான கடன் (திருப்பித்தர தவறுகின்ற) சிக்கலைத் தன்னிடமே வைத்துக் கொள்கிறது. பங்குமயமாக்கலின் வருகை, மரபுரீதியிலான மாதிரியான "உருவாக்கி விநியோகிக்கும்" மாதிரிக்கு வழிவிட்டது, இதில் அடமான அடிப்படையிலான கடனீடுகளின் வாயிலாக வங்கிகள் அவசியமான அடமானங்களை விற்று கடன் சிக்கலை முதலீட்டாளர்களுக்கு விநியோகித்தன. பங்குமயமாக்கல் குறிக்கும் பொருள், அடமானங்களை வழங்குபவர்கள் அவற்றை முதிர்வு வரை வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. அடமானங்களை முதலீட்டாளர்களுக்கு விற்பதன் மூலம், உருவாகும் வங்கிகள் தங்கள் நிதிகளை நிறைவாக்கிக் கொண்டு, மேலும் அதிகக் கடன்களை அளிக்க இயலச் செய்வதோடு கடன் நடவடிக்கை கட்டணங்களை உண்டாகுகின்றன. இது நெறிமுறை ஆபத்துகளை உருவாக்கியிருக்கலாம், மேலும் அடமானங்களின் வரவுத் தரத்தை உறுதி செய்வதற்கு மாறாக அடமானப் பரிமாற்றச் செயலாக்கத்திலேயே கவனம் செலுத்துவதை அதிகரித்தது.

1990 ஆம் ஆண்டுகளின் மத்தியில் பங்குமயமாக்கல் அதிகரித்தது. 1996 ஆம் ஆண்டிற்கும் 2007 ஆம் ஆண்டிற்கும் இடையில் அடமான அடிப்படை பங்குகளின் மொத்தத் தொகை ஏறக்குறைய $7.3 டிரில்லியன் அளவிற்கு மும்மடங்கு அதிகரித்தது. இரண்டாம் நிலை அடமானப் கடனீடுகளின் பங்கு (அதாவது மூன்றாம் நபர் முதலீட்டாளர்களுக்கு MBS மூலமாக வழங்கப்பட்டது) 2001 இல் 54% லிருந்து 2006 ஆம் ஆண்டில் 75% ஆக உயர்நதது. அமெரிக்க வீட்டு உரிமையாளர்கள், நுகர்வோர் மற்றும் பெரு நிறுவனங்கள் 2008 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட$ 25 டிரில்லியன் கடன்பட்டிருந்தனர். அமெரிக்க வங்கிகள் நேரடியாக அந்த மொத்தக் கடன்களில் மரபுரீதியான அடமானக் கடன்களாக சுமார் $8 டிரில்லியனைத் தக்கவைத்துக்கொண்டன. பத்திரதாரர்களும் பிற மரபுசார்ந்த கடன் அளிப்பவர்களும் மற்றொரு $7 டிரில்லியன் வழங்கின். மீதமுள்ள $10 டிரில்லியன் பங்குமயமானச் சந்தையிலிருந்து வந்தது. 2007 ஆம் ஆண்டின் வேனிற்காலத்தில் பங்குமயமாக்கல் சந்தைகள் முடிவடையத் துவங்கின, மேலும் 2008 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் முற்றிலும் முடிவடையும் நிலையை நெருங்கின. ஆகையால், தனியார் கடன் சந்தையின் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்ட நிதிகளின் மூலாதாரங்கள் கிடைக்காமற்போயின. 2009 ஆம் ஆண்டு பிப்ரவரியில், பென் பெர்னான்கே பங்குமயமாக்கல் சந்தைகள் செயல்திறனளவில் மூடப்பட்டிருந்தன, ஆனால் விதிவிலக்காக அவற்றுக்குரிய அடமானங்கள் ஃபேன்னி மே மற்றும் ஃபெரெட்டி மாக் ஆகியவற்றிற்கு விற்கப்படலாம் எனக் கூறினார்.

இரண்டாம் நிலை அடமானச் சிக்கலுக்கும் பங்குமயமாக்கலுக்கும் இடையிலான மேலுமொரு நேரடித் தொடர்பானது, அடமான உறுதிகொடுப்போர், தர முகமைகள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகிய தரப்பினர் பங்குமயமாக்கல் தொகுப்பிலுள்ள கடன்களில் உள்ள சிக்கல்களின் இணையுறவை மாதிரிப்படுத்தும் விதத்தில் உள்ள அடிப்படையான தவறுடன் தொடர்புடையதாகும். இணையுறவு மாதிரியமைத்தல்- ஒரு தொகுப்பில் உள்ள ஒரு கடனின் திருப்பித்தர இயலாத தன்மையோடு புள்ளியியல் ரீதியாக மற்ற கடன்களின் ஆபத்துகளுடன் எவ்வாறு தொடர்புடையதாக உள்ளது என்பதை நிர்ணயிக்கும் முறையாகும்- இது புள்ளியியல் நிபுணரான டேவிட் எக்ஸ்.லி யின் "காஸியன் காப்புலா" எனும் செய்முறை நுட்பம் ஒன்றின் அடிப்படையிலானது. இந்த செய்முறை நுட்பம், பரவலாக பங்குமயமாக்கல் நடவடிக்கைகள் தொடர்புடைய சிக்கல் மதிப்பீட்டின் வழிமுறையாக ஏற்கப்பட்டு, இணையுறவின் அணுகுமுறைக்கு மிக எளிமையான பயன்பாடாக மாறியது. துரதிருஷ்டவசமாக, இச் செய்முறை நுட்பத்திலிருந்த தவறுகள் சந்தை பங்கேற்பாளர்களுக்கு இரண்டாம் நிலை அடமானக் கடன்களை ஆதரிக்கும் ABS மற்றும் CDOக்கள் பல நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களுக்கு தரப்படுத்தப்பட்டு விற்கப்படும்வரை தெளிவாகத் தெரியவில்லை. முதலீட்டாளர்கள் இரண்டாம் நிலை அடமான அடிப்படையிலான பங்குகளை வாங்குவதை நிறுத்திய போது-அடமான கடன்களை அளிக்கும் மூலாதார வங்கிகளின் அடமானக் கடன்களை நீட்டிக்கும் திறனைத் தடுத்து நிறுத்தியிருந்தது-சிக்கலின் விளைவுகள் ஏற்கனவே வெளிப்படத் துவங்கியிருந்தன.

நோபல் பரிசு பெற்ற டாக்டர்.ஏ.மிகேல் ஸ்பென்ஸ் எழுதினார்:"நிதி கண்டுபிடிப்புகள், மறுவிநியோகத்திற்கும் சிக்கலைக் குறைப்பதற்கும் திட்டமிடப்பட்டது, அதை பார்வையிலிருந்து மறைந்திருப்பதாகத் தோன்றுகிறது. இதில் முன்னேறும் முக்கிய சாவாலாக இருப்பது நிதியியல் நிலையற்ற தன்மையைப் பொறுத்து இந்த இயக்கத் தன்மையை, பழைய எச்சரிக்கை முறையின் அடிப்படை ஆதரவு அம்சமாகப் புரிந்துகொள்வதே ஆகும்."

துல்லியமற்ற கடன் தரங்கள்

இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் 
MBS கடன் தர கீழ்தரங்கள், காலாண்டில்.

தற்போது கடன் தர முகமைகள் சிக்கல் வாய்ந்த இரண்டாம் நிலை அடமானக் கடன் அடிப்படையிலான MBSகளுக்கு முதலீட்டு- படிநிலைத் தரங்களை அளித்ததற்காக விசாரணையின் கீழ் உள்ளன. இந்த உயர் தர நிலைகள் இத்தகைய MBS களை முதலீட்டாளர்களுக்கு விற்று, அதன் மூலம் வீட்டுப் பூரிப்பிற்கு நிதியளிக்கப்படக் காரணமாயின. இந்த தர நிலைகள் சிக்கல் குறைப்பு நடவடிக்கைகளால், குறிப்பாக கடன் தவறுகைக் காப்பீடு மற்றும் பங்கு முதலீட்டாளர்கள் முதல் இழப்புகளைச் ஏற்க ஒப்புக்கொண்டதால் சரியென நம்பும்படி செய்யப்பட்டன. இருப்பினும், இரண்டாம் நிலை அடமானம் தொடர்பான பங்குகளின் தர நிலைகளைச் செய்து வந்த சிலர் அச் சமயத்தில் தரப்படுத்தும் பணி முறை தவறானது என அறிந்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தது.

விமர்சகர்கள் தர முகமைகள் கருத்து முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக வாதிட்டனர். அவர்கள் கட்டமைப்புக்குட்பட்ட பங்குகளை நிர்வகித்து முதலீட்டாளர்களுக்கு விற்கும் முதலீட்டு வங்கிகளாலும் பிற நிறுவனங்களாலும் பொருள் ஆதாயம் அடைகின்றனர். 2008 ஆம் ஆண்டில் ஜூன் 11 அன்று, SEC, தர முகமைகளுக்கும் கட்டமைப்புக்குட்பட்ட பங்குகளை வழங்குபவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளைக் குறைக்க உருவாக்கப்பட்ட விதிகளைப் பரிந்துரைத்தது. 2008 ஆம் ஆண்டில்,டிசம்பர் 3 அன்று SEC ஒரு பத்து மாத விசாரணையின் பின்னர், கடன் தர முகமைகளில் காணப்பட்ட கருத்து முரண்பாடுகளுட்பட, "கடன் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தகுந்த பலவீனங்கள்" இருப்பதைக் கண்டுபிடித்த பிறகு, அந்த முகமைகளின் மேற்பார்வை நடவடிக்கைகளுக்கு வலுவூட்டும் வழிமுறைகளுக்கு ஒப்புதலளித்தது.

2007 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கும் 2008 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கும் இடையே தர முகமைகள் $ 1.9 டிரில்லியன் மதிப்புள்ள அடமான அடிப்படையிலான பங்குகளின் கடன் தர நிலைகளை குறைத்தது. நிதி நிறுவனங்கள் தங்களது MBS மதிப்புகளைக் குறைக்க வேண்டியதை உணர்ந்தனர். மூலதன விகிதங்களை பராமரிக்கச் செய்ய கூடுதலான முதலீடுகளை அதன் மூலம் பெறவும் முயன்றனர். இந்த நடவடிக்கை இருப்பின் புதிய பங்குகளின் விற்பனையையும் உள்ளடக்கியதே எனில், தற்போதிருக்கும் பங்குகளின் மதிப்பும் குறைக்கப்பட்டது. ஆகையால், தரங்களின் மதிப்புக் குறைப்பு பல நிதி நிறுவனங்களின் இருப்பு விலைகளை விழச்செய்தது.[182]

அரசுக் கொள்கைகள்

இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் 
அமெரிக்க இரண்டாம் நிலை கடன் 2004-2006 ஆம் ஆண்டின் அதிரடி வளர்ச்சி

அரசின் தோல்வியடைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டுப்பாட்டு நீக்கம் இரண்டுமே இந்தச் சிக்கலுக்கு பங்களித்தது. அமெரிக்க செக்யூரிட்டி அண்ட் எக்ஸ்சேஞ் கமிஷன் (SEC) மற்றும் ஆலன் க்ரீன்ஸ்பான் ஆகிய இரு தரப்பினரும் அமெரிக்க உயர்சட்டப் பேரவையின் முன் சாட்சியமளிக்கும் போது முதலீட்டு வங்கிகளின் சுய-கட்டுப்பாட்டை அனுமதிப்பதில் அவர்கள் கண்ட தோல்வியை ஒப்புக்கொண்டனர்.

வீட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே ரூஸ்வெல்ட், ரீகன், கிளிண்டன் மற்றும் ஜி.டபிள்யு.புஷ் உள்ளிட்ட பல அதிபர்களின் குறிக்கோளாக இருந்தது. 1982 ஆம் ஆண்டில், உயர் சட்டப்பேரவையானது மாற்று அடமானப் பரிமாற்றச் சமநிலைச் சட்டத்தை (AMTPA) பிறப்பித்தது, அது மைய அரசால் தனியுரிமை அளிக்கப்படாத வீட்டுக் கடன் வழங்குபவர்களை அனுசரிக்கப்பட்ட விகித அடமானங்களை எழுத அனுமதித்தது. 1980 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் உருவாக்கப்பட்ட மற்றும் பிரபலமான புதிய அடமானக் கடன் வகைகளில், அனுசரிக்கப்பட்ட விகிதம், விருப்பத்தேர்வு அனுசரிக்கப்படும் விகிதம், பலூன் செலுத்துத் தொகை மற்றும் வட்டி மட்டுமே கொண்ட அடமானங்கள் ஆகியவை அடங்கும். இந்தப் புதிய கடன் வகைகள், நிலைத்த விகிதம், அசல் சிறுகச் சிறுக திருப்பிக் கட்டும் அடமானக் கடன் போன்ற வங்கிகளின் நீண்ட கால நடைமுறைகளை மாற்றி வழங்கப்பட்டன. சேமிப்பு மற்றும் கடன் சிக்கலுக்கு வழிவகுத்த வங்கித் தொழிலின் கட்டுப்பாட்டு நீக்கத்தின் மீதான விமர்சனங்களில், உயர் சட்டப்பேரவையானது இத்தகைய கடன் வகைகளின் சுரண்டல்களைத் தடுத்திருக்கக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது என்பதும் ஒன்றாகும். அனுசரிப்பு விகித அடமானங்களை தவறாகப் பயன்படுத்தி பரவலாக சூறையாடும் கடனளிப்பு பின் தொடர்ந்தது. ஏறக்குறைய 80% இரண்டாம் நிலை அடமானங்கள் அனுசரிப்பு விகித அடமானங்கள் ஆக்.

1995 ஆம் ஆண்டில், ஃபென்னி மே போன்ற GSE க்கள் அரசிடமிருந்து வரி ஊக்கங்களைப் பெற்று அடமான அடிப்படையிலான கடனீடுகளை வாங்குகின்றன, இதில் குறைந்த வருவாய் கடனாளிகளின் கடன்களும் அடங்கும். இதனால் ஃப்ன்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் ஆகிய நிறுவனங்கள் இரண்டாம் நிலை அடமானச் சந்தையில் ஈடுபடத் துவங்கின. 1996 ஆம் ஆண்டில், HUD ஃபென்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் ஆகியவற்றிற்கு ஒரு இலக்கை நிர்ணயித்தது, அதாவது அவர்கள் வாங்குகின்ற அடமானங்களில் 42% ஐ அவர்களது பகுதியைச் சார்ந்த சராசரிக்கும் கீழான குடும்ப வருமானம் கொண்ட கடனாளிகளுக்கு அளிக்க வேண்டும். இந்த இலக்கு 2000 ஆம் ஆண்டில் 50% மாகவும் 2005 ஆம் ஆண்டில் 52% மாகவும் உயர்த்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டுவரை, அமெரிக்க இரண்டாம் நிலை அடமானச் சந்தை முந்தைய வருடங்களை விட 292% வளர்ந்ததால், ஃபென்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் இணைந்து வாங்கிய இரண்டாம் நிலை பங்குகள் $38 பில்லியனிலிருந்து சுமார் $ 175 பில்லியன் ஆக உயர்ந்தது, அதன் பின்னர் வதற்கு வருடத்திற்கு $ 90 பில்லியன் குறைந்தது, அதில் Alt-A ன் $350 பில்லியன் பங்குகள் உள்ளடங்கும். கடன் அடைத்தல் சிக்கல்களின் அதிகரிப்பால், ஃபென்னி மே Alt-A வின் தயாரிப்புகளை வாங்குவதை 1990 களின் துவக்கத்திலே நிறுத்தியது. 2008 ஆம் ஆண்டில், ஃபென்னி மே மற்றும் ப்ரெட்டி மாக் நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது அவர்கள் ஆதரித்த அடமான கடனீடுகளின் தொகுப்புகள் வாயிலாகவோ அமெரிக்க அடமானச் சந்தையின் பாதியான $5.1 டிரில்லியன் மதிப்புள்ள குடியிருப்பு கடனீடுகளை உரிமையாக்கிக் கொண்டிருந்தனர். GSE எப்போதும் துணை ஆதரவு வழங்கப்பட்டுவந்ததாக இருந்தது, அவர்களின் நிகர மதிப்பு ஜூன் 30, 2008 வரை அமெரிக்க டாலரில் வெறும் 114 பில்லியன்களாகும். செப்டம்பர் 2008 ஆம் ஆண்டில் GSE நிறுவனம் அவர்களின் உத்தரவாதங்களைக் காப்பாற்றுவது தொடர்பான விவகாரம் எழுந்த போது, மைய அரசு நிறுவனங்கள் மீது கண்காணிப்புச் செய்யும் அமைப்பை ஏற்படுத்தி விளைவுத்திறன் மிக்க வகையில் வரி செலுத்துவோரின் செலவின் மதிப்பில் அவற்றை தேசியமயமாக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டன.

பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு க்ளாஸ்-ஸ்டீகல் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அச்சட்டம், வணிக ரீதியான வங்கிகளின் கடன் வழங்கல் செயல்கள் மற்றும் முதலீட்டு வங்கிகளின் தர நிர்ணயச் செயல்கள் ஆகியவற்றுக்கிடையே எழக்கூடிய கருத்து முரண்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, அவை இரண்டையும் பிரித்தது. பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிஸ் சட்டத்தை திரும்பப் பெற்றதை விமர்சித்தார். அவர் அதன் திரும்பப் பெற்றதை "இது செனட் உறுப்பினர் பில் கிராம் அவர்களால் தலைமையேற்று உயர் சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்டு ஆதரவு கோரப்பட்ட வங்கி மற்றும் நிதிச் சேவைகள் தொழிலகங்களின் $300 மில்லியன் முயற்சிகளின் விளைவாக முடிந்த ஒன்றாகும்" என்றார். அவர் இந்த நடவடிக்கை சிக்கலுக்கு பங்களித்திருக்கும் என நம்பக் காரணம், முதலீட்டு வங்கிகளின் சிக்கலை ஏற்கும் பண்பாட்டு மரபு, பழமை விரும்பும் வணிக ரீதியான வங்கிக் கலாச்சாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியது, இது பூரிப்பு காலத்தில் துணை வலுவுடன் துணிகர முயற்சிகளிஜ்ன் அதிகரிப்பு மற்றும் ஆதரவுக்கு வழிவகுத்தது. 1980 ஆம் ஆண்டுகளின் இறுதியில் இடம்பெற்ற சேமிப்பு மற்றும் கடன் சிக்கலின் போது மைய அரசின் சிக்கனத் தன்மை கைவிட்டதன் விளைவாக, பிற கடன் வழங்கும் நிறுவங்களை சிக்கல் வாய்ந்த கடன்களை அளிப்பதில் ஆர்வமேற்படுத்தி, நெறிமுறை ரீதியான ஆபத்தினைஅதிகரித்தது.

மரபுவாதிகளும் மற்றும் தாராளவாதிகளும் சமூக மறுமுதலீட்டுச் சட்டத்தின் (CRA) மூலம் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி விவாதித்தனர், இதனைக் குறைத்து மதிப்பிடுபவர்கள், இச்சட்டம் தகுதியற்ற கடனாளிகளுக்கு கடன் அளிப்பதை ஊக்குவித்ததையும், ஆதரவாளர்கள் முப்பது வருட கடன் வரலாறு அதிகரிப்பு சிக்கல் அதிகரிப்பின்றி இருந்தததையும் கூறுகின்றனர். அவர்கள், 1990 ஆம் ஆண்டுகளின் மத்தியில் CRA சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள், வழங்கப்படும் கடனீடுகளின் தொகையை அதிகரித்தன, இல்லாவிடில் அவை குறைந்த வருமானமுடைய கடன் பெறுபவர்களைத் தகுதியற்றவர்களாக்கியிருக்கும், மேலும் அது CRA கட்டுப்படுத்திய அடமானங்களின் பங்குமயமாக்கலை அவற்றில் கணிசமானவை இரண்டாம் நிலை அடமானங்கள் என்றாலும் அனுமதித்தன.

மைய வங்கியின் தலைவர் ராண்டால் க்ரோஸ்ச்னெரும் FDIC தலைவர் ஷீலா பேரும் CRA சட்டமானது இச்சிக்கலுக்கு குற்றம் சாட்டப்படக்கூடியதல்ல என்ற அவர்களது நம்பிக்கையைக் கூறினர்.

மத்திய வங்கிகளின் கொள்கைகள்

இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் 
மைய நிதி விகித மற்றும் பல்வேறு அடமான விகிதங்கள்

மத்திய வங்கிகள் பணக் கொள்கையை நிர்வகித்து, விலைவாசி அதிகரிப்பு விகிதங்களை இலக்காகக் கொள்ளும். அவர்களுக்கு வணிக வங்கிகள், பிற நிதி நிறுவனங்கள் மீதும் இருப்பதற்கு வாய்ப்புள்ள சில அதிகாரங்கள் உள்ளது. அவர்கள் வீட்டுத் துறை மற்றும் டாட்-காம் குமிழிகள் போன்ற சொத்து விலைக் குமிழிகளைத், தவிர்ப்பதில் குறைந்த கவனமே செலுத்துகின்றனர். மத்திய வங்கிகள் பொதுவாக குமிழிகள் ஏற்படுவதை முன்தடுக்கவோ அல்லது நிறுத்தவோ செய்யாமல் அவை ஏற்பட்ட பிறகு பொருளாதாரத்தில் உடனொத்த பாதிப்புகளை குறைப்பதற்காக அத்தகைய குமிழிகளுக்கு எதிர் விளைவுகளை செயல்படுத்தும் பழக்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளன. இது சொத்து விலை குமிழிகளை அடையாளம் காண்பதும் மற்றும் அதனை பொருத்தமான பணக் கொள்கை மூலம் தீர்மானித்து குறைவுபடுத்துவதென்பது பொருளாதார நிபுணர்களின் விவாதப் பொருளாகும்.

சில சந்தைப் பார்வையாளர்கள் மைய வங்கியின் நடவடிக்கைகள் ஒழுக்க ஆபத்துக்களை உயர்த்தும் என அனுமானித்துள்ளனர். அரசின் பதிலளிக்கும் அலுவலக விமர்சகர் கூறினார், 1998 ஆம் ஆண்டில் இருந்த நியூயார்க்கின் மைய வங்கியின் நீண்ட கால முதலீட்டு மேலாண்மை தானது பெரிய நிதி நிறுவனங்களை மைய வங்கி தங்கள் சார்பாக இத்தகைய கடன்கள் விரும்பத்தகாத நிலையை அடைந்தால், "இன்றியமையாதன" என்பதால் தலையிட்டு காப்பாற்றும் என நம்பின.

வீட்டு விலைகள் உயர்வுக்கு பங்காற்றிய காரணி மைய வங்கி பத்தாண்டின் முற்பகுதியில் வட்டி விகிதங்களை குறைத்ததுவே. 2000 ஆம் ஆண்டிலிருந்து 2003 ஆம் ஆண்டு வரை, மைய வங்கி மைய நிதிகளின் விகித இலக்கினை 6.5% லிருந்து 1.0% ஆக குறைத்தது. இது டாட் காம் குமிழிகள் மற்றும் 2001 செப்டம்பர் தீவிரவாத தாக்குதல்களினால் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவுகளை மென்மைப்படுத்தவும், விலைவாசி வீழ்ச்சியின் உணரப்பட்ட சிக்கல்களுடன் போராடவும் செய்யப்பட்டது. மைய வங்கி விலைவாசி விகிதங்கள் குறைவான காரணத்தால் வட்டி விகிதங்கள் பாதுகாப்பாக முதன்மையாக குறைக்கப்படலாம் என நம்பியது; பிற முக்கிய காரணிகளை புறக்கணித்தது. ரிச்சர்ட் டபிள்யு. பிஷர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, டல்லாஸ் மைய வங்கி, கூறினார் மைய வங்கியின் 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியின் வட்டி விகிதக் கொள்கை தவறாக வழிகாட்டப்பட்டது, ஏனெனில் அளவிடப்பட்ட விலைவாசி அவ்வருடங்களில் உண்மையான விலைவாசியைவிட கீழேயிருந்தது, அது பணக் கொள்கை ஒன்றின் மூலம் வீட்டுக் குமிழிக்கு பங்களித்தது. தற்போதைய மைய வங்கியின் தலைவர் பென் பெர்னான்கேயின் கூற்றுப்படி, உலகம் முழுவதற்குமான "சேமிப்பு தேக்கம்" அமெரிக்காவினுள் நுழைந்த முதலீடு அல்லது சேமிப்பாக மத்திய வங்கியின் நடவடிக்கைகளையும் தாண்டி தனித்து நீண்ட கால வட்டி விகிதங்களை குறைவாக வைத்திருந்தது.

பிறகு மைய வங்கி மைய நிதிகளின் விகித கணிசமாக 2004 ஜூலைக்கும் 2006 ஜூலைக்கும் இடையில் உயர்த்தியது. இது ஒன்று மற்றும் ஐந்து வருட ARM விகிதங்கள் உயர பங்களித்தது, ARM வட்டி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட வீட்டு உரிமையாளர்களுக்கு பெருஞ்செலவு பிடிக்கும்படியானது. இதுவும் வீட்டுக் குமிழி விலை வீழ்ச்சியடைய பங்களித்திருக்கலாம், சொத்து விலைகள் பொதுவாக வட்டி விகிதங்களுக்கு எதிர் மாறாக நகரும் மேலும் வீட்டுத் துறையில் அனுமானிக்க சிக்கலானது.

நிதி நிறுவனங்களின் கடன் அளவுகளும் ஊக்கமளிப்புகளும்

இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் 
முதலீட்டு வங்கிகளின் துணை வலு விகிதங்கள் கணிசமாக 2003-2007 அதிகரிப்பு

பல நிதி நிறுவனங்கள், குறிப்பாக முதலீட்டு வங்கிகள், 2004-2007 ஆம் ஆண்டுகளில் பெரும் தொகையிலான கடன்களை வழங்கின, மேலும் அதன் வரவுகளை அடமான அடிப்படையிலான கடனீடுகளில் முதலீடு செய்தன, கட்டாயமாக வீட்டு விலைகள் தொடர்ந்து உயரும் என்றும் குடும்பங்கள் தொடர்ச்சியாக அடமான தொகைகளை செலுத்தும் என்றும் பணையம் வைத்தது. குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி அதன் வரவுகளை உயர் வட்டிக்கு முதலீடு செய்வது என்பது நிதி துணை வலுவுள்ள முறைமையாகும். இது தனி நபர் ஒருவர் அவரது வீட்டின் மீது இரண்டாவது அடமானத்தைப் பெற்று பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு ஒப்பானது. இந்தச் செயல் தந்திரம் வீட்டு பூரிப்பு காலத்தில் இலாபகரமானதாக நிரூபித்தது, ஆனால் அதிக நஷ்டத்தை வீட்டு விலைகள் வீழத் துவங்கியபோதும் கடன் திருப்பித் தவறும் போதும் விளைவித்தது. 2007 ஆம் ஆண்டில் துவங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட முதலீட்டாளர்களில் MBS வைத்திருப்பவர்களும் கூட அடமானத் தொகை திருப்பத் தவறுதல் மற்றும் MBS ன் வீழும் மதிப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட கணிசமான நட்டத்தால் பாதிக்கப்பட்டனர்.

2004 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் செக்யூரிட்டி அண்ட் எக்ஸ்சேஞ் கமிஷன் (SEC) நிகர முதலீட்டு விதி தொடர்பான முடிவு அமெரிக்காவின் முதலீட்டு வங்கிகளை கணிசமாக மேலும் கடன்களை அளிக்க அனுமதித்தது, பின்னர் அவை MBS வாங்க பயன்படுத்தப்பட்டன. 2004-07 ஆம் ஆண்டுகள் கடந்து, உயர் நிலையிலுள்ள ஐந்து அமெரிக்க வங்கிகள் ஒவ்வொன்றும் கணிசமாக தங்களது நிதித் துணை வலுவை (காண்க விளக்கப்படம்), உயர்த்திக் கொண்டன, இது MBS களின் குறையும் மதிப்பு பாதிப்பிற்குள்ளாகும் தன்மையை அதிகரித்தது. 2007 ஆம் ஆண்டு நிதியாண்டில் இந்த ஐந்து நிறுவனங்களும், $4.1 டிரில்லியன் கடன் இருப்பதாகக் கூறின, இது அமெரிக்காவின் சாதாரண நாட்டு வருமானத்தில் 30% ஐக் கொண்டதாகும். மேலும், இரண்டாம் நிலை மொத்தம் உருவான உருவாக்கப்பட்ட அடமானங்களின் சதவீதத்தில் 2001-2003 ஆம் ஆண்டில் 10%கீழாக இருந்து 2004-2006 ஆம் ஆண்டில் 18-20% க்கு இடைப்பட்டதாக உயர்ந்தது, இதற்கு முதலீட்டு வங்கிகளின் நிதியுதவியும் ஒரு பகுதியளவு காரணமாகும்.

2008 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் பெரிய முதலீட்டு வங்கிகளில் மூன்று திவாலானது (லெக்மான் பிரதர்ஸ்) அல்லது சுடுகின்ற விற்கும் விலையில் பிற வங்கிகளுக்கு விற்கப்பட்டது (பியர் ஸ்டெர்ன்ஸ் மற்றும் மெரில் லிஞ்ச்). உலக நிதியமைப்புகளில் இத் தோல்விகள் நிலையற்றத்தன்மையை அதிகரித்தன. மீதமுள்ள இரு முதலீட்டு வங்கிகள், மார்கன் ஸ்டேன்லிமற்றும் கோல்ட்மேன் ஸ்சாஸ், வணிக வங்கிகளாக மாற விருப்பம் தெரிவித்தன. அதனால், மேலும் கடுமையான கட்டுப்பாட்டிற்குள்ளாக ஆட்பட்டன.

சிக்கலுக்கு வழிவகுத்த வருடங்களில், அமெரிக்காவின் முதல் நான்கு வைப்பு வங்கிகள் $5.2 டிரில்லியன் மதிக்கத்தக்க சொத்துக்களையும் மற்றும் பொறுப்புகளையும் கணக்கு தாளிலிருந்து நீக்கி சிறப்பு முதலீடுகள்அல்லது இதர நிழல் வங்கியமைப்புகளுக்கு நகர்த்தின. இது அவர்கள் தற்போதைய கட்டுப்பாடுகளை கட்டாயமாக குறைந்தபட்ச முதலீட்டு விகிதங்களை கடந்து சென்று, அதன் மூலம் அதிகரிக்கும் துணை வலுவுடன் இலாபத்தை பூரிப்பு காலத்தில் பெற்று, சிக்கல் காலங்களில் நஷ்டத்தையும் பெற வைத்தது. 2009 ஆம் ஆண்டில், புதிய கணக்கியல் வழிகாட்டி அவர்களை இந்த சொத்துக்களில் சிலவற்றை கணக்கு புத்தகத்தில் இட வேண்டியது, இவை கணிசமாக முதலீட்டு விகிதங்களை குறைக்கும். ஒரு செய்தி நிறுவனம் இந்தத் தொகை $500 பில்லியனிலிருந்து $ 1 டிரில்லியனுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என மதிப்பிட்டது. 2009 ஆம் ஆண்டில், அரசால் அழுத்தப் பரிசோதனை செய்யப்பட்டதின் ஒரு பகுதியின் விளைவாகக் கருதப்பட்டது.

மார்டின் வோல்ப் 2009 ஆம் ஆண்டின் ஜூனில் "இந்த பத்தாண்டின் முற்பகுதியில் வங்கிகள் செய்த பெரியளவுப் பகுதி - கணக்குத் தாள்களிலிருந்து நீக்கி சிறப்பு முதலீடுகளில் போட்ட பங்கு வரவுகள் மற்றும் 'நிழல் வங்கி அமைப்பு' அதுவும் - கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டி வழி காண வேண்டியிருந்தது."

நியூயார்க் அரசு கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலகம் 2006 ஆம் ஆண்டில் கூறியது வால் ஸ்டிரீட் அதிகாரிகள் வீட்டிற்கு மொத்த போனசாக $23.9 பில்லியனை எடுத்துச் சென்றனர். "வால் ஸ்டிரீட் வியாபாரிகள் தங்களது போனசைப் பற்றியே நினைத்தனர், தங்கள் நிறுவனத்தின் நீண்ட நாள் நலனைப் பற்றி அல்ல. முழு அமைப்பும் - அடமான முகவர்களிலிருந்து வால் ஸ்டிரீட் சிக்கல் மேலாளர்கள் வரை - குறைந்த கால சிக்கல்களின் பால் கவனம் வைத்து நீண்டக் கால கடன்களை கவனியாது இருந்தனர். மிக அதிகமாக கண்டிக்கத்தக்க சாட்சியம் எதுவெனில் இந்த உயர் பதவிகளில் இருந்த மேலாளர்களில் அத்தகைய (முதலீடுகள்)எவ்வாறு வேலை செய்யும் என உண்மையில் அறிந்திருக்கவில்லை."

முதலீட்டு வங்கி ஊக்க நிவாரணம் நிதி சேவைகளை ஏற்படுத்திக் கொடுக்கிற அடிப்படையில் தரப்படுகிற கட்டணங்களையே மையமாகக் கொண்டிருந்ததே தவிர அது அந்தத் தயாரிப்புகளின் செயல்திறன் மற்றும் காலப்போக்கில் ஏற்படுத்திக்கொடுக்கும் இலாபங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளவில்லை. அவர்களின் போனஸ்கள் அதிகமாக பணத்தை நோக்கி கோணலாக திருப்பப்பட்டது பங்கு போன்றவற்றின் மீதல்ல, மேலும் MBS அல்லது CDO செயல்படவில்லை எனும் நிலையில் "திருப்புதல் காலத்துக்கு" உட்பட்டதல்ல (நிறுவனம் ஊழியரிடமிருந்து போனசை திரும்பப்பெறுவது). மேலும், முதலீட்டு வங்கிகள் (நிதித் துணை ஆதரவு எனும் வடிவில்) மேற்கொண்ட துணிகர முயறசிகள் அதிகரித்து வந்தது எனும் நிகழ்வு, பிரதான மூத்த செயல் அதிகாரிகளின் ஊதியத்தை காரணியாகக் கருத்தில் கொள்ளவில்லை.

கடன் திருப்பத் தவறுதலின் சமப் பரிமாற்றங்கள்

கடன் திருப்பத் தவறுதலின் சமப்பரிமாற்றங்கள்(CDS) என்பவை நிதிக் கருவிகளாகும், இவை பத்திரதாரருக்கு பாதுகாப்பையும் காப்பையும் வழங்கப் பயன்படுத்தப்படுகின்றன, குறிப்பாக MBS முதலீட்டாளர்கள் கடன் தவறுதல் சிக்கலிலிருந்து பாதுகாக்கப்பட உதவுகின்றன. வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் நிகர மதிப்பு இரண்டாம் நிலை அடமானங்கள் தொடர்பான இழப்புகளால் மிகவும் மோசமடைந்ததால், காப்பீடு கொடுப்பவர்கள் தங்கள் எதிர் தரப்பிற்கு கட்டணம் செலுத்த வேண்டிய போக்கு அதிகரித்தது. இது நிச்சயமற்றதன்மையை அமைப்பு நெடுகிலும் உண்டாக்கியது, அடமானக் கடன் தவறுதலைப் பாதுகாக்க பணமளிக்க வேண்டியது எந்த நிறுவனம் என முதலீட்டாளர்கள் அதிசயித்தனர்.

பிற அனைத்து சமப்பரிமாற்றங்கள் மற்றும் நிதியியல் வழிப்பொருள்களைப் போலவே, CDS என்பதையும் சிக்கல்களைத் தவிர்க்கவோ (குறிப்பாக கடனளிப்பவர்களுக்கு கடன் தவறுதலிலிருந்து பாதுகாப்பளிக்க) அல்லது ஊகத்திலிருந்து ஆதாயம் பெறவோ பயன்படுத்தப்படலாம். CDS ன் நிலுவையின் அளவு 1998 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை 100 மடங்கு அதிகரித்து, CDS ஒப்பந்தங்களுக்குரிய கடன் மதிப்பு, நவம்பர் வரை US$33 முதல் $47 ட்ரில்லியன் அளவில் இருந்தது. CDS கள் இலேசாக கட்டுப்படுத்தப்பட்டது. 2008 வரை, CDS ஒப்பந்தத்தின் படி, ஒரு CDS தரப்பினருக்கு அவரது கோரிக்கைகளைச் செயல்படுத்த முடியாது என நிரூபிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், CDS ஐ பரிமாற்றம் செய்ய மையப் பரிமாற்றச் சேவையகம் எதுவும் இல்லை. CDS தொடர்பான கடமைகளின் கீழ் அளிக்கப்பட வேண்டிய வெளிப்படையான தகவல் தேவைகள் போதுமான அளவு இல்லையென விமர்சிக்கப்பட்டது. பரவலான அடமானக் கடன் திருப்பத் தவறல்கள் CDS இழப்புகளை வெளிப்படையாகக் காட்டக்கூடியது அதிகரித்ததால், அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் (AIG), MBIA மற்றும் அம்பாக் போன்ற காப்பீட்டு நிறுவனங்கள் தர வரிசை வீழ்ச்சியைச் சந்தித்தன. இந்த வெளிப்படையான தகவலை குறை நிரப்ப நிறுவனங்கள் கூடுதலாக நிதியினைப் பெற வேண்டியிருந்தது. $440 MBSகளைக் காப்பீடு செய்யும் CDSகளை AIG கொண்டுள்ளது, இதனால் சிக்கலிலிருந்து மீள மைய அரசின் உதவியை எதிர்பார்க்க நேர்ந்தது.

எல்லா சமப்பரிமாற்றங்கள் மற்றும் பிற சூதாட்டங்கள் போலவே, CDS இல் ஒரு தரப்பின் இழப்பு, மற்றொரு தரப்பின் இலாபமாகிறது; CDSகள் தற்போது இருக்கும் செல்வத்தை மட்டுமே மறு பங்கீடு செய்யும் (அதாவது, கொடுக்கின்ற தரப்பு செயல்படுமெனில்). ஆகையால், கடன் மறு ஈடு எத்தரப்பிற்கு பணமளிக்க வேண்டும் மேலும் அவ்வாறு செய்ய இயலுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. செப்டம்பர் 2008 இல் முதலீட்டு வங்கியான லெக்மான் பிரதர்ஸ் திவாலான போது, அதன் $600 பில்லியன் நிலுவையிலுள்ள பிணைத்தொகைகளை எந்த நிதி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நிச்சயமின்மை மிகுந்திருந்தது. 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மெர்ரில் லிஞ்ச்சின் பெரிய இழப்புகளுக்கு, AIG அதன் மெர்ரில்லின் (CDO க்கள்) மீது CDSகளை வழங்குவதை நிறுத்திய பின்னர் மெரில்லின் ஆதரவளிக்கப்பட்ட கடன் பொறுப்புகளின் (CDO க்கள்) கைகாப்பு நிதியல்லாத பயன்பாட்டின் மதிப்பு இழந்ததும் ஒரு காரணமாகும். மெர்ரில் லிஞ்ச்சின் கடன் தீர்வுத்திறம் மற்றும் குறுகிய காலக் கடன் மறு நிதி திறன் ஆகியவற்றில் அதன் வர்த்தகக் கூட்டாளிகள் நம்பிக்கை இழந்ததால், பாங்க் ஆஃப் அமெரிக்கா அந்நிறுவனத்தைக் கைக்கொள்ள வழிவகுத்தது.

பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்சு கடன் திருப்பத் தவறுதல் சமப்பரிமாற்றங்கள், அமைப்பு ரீதியான வீழ்ச்சிக்குப் பங்களித்தது என்பதை இவ்வாறு சுருக்கமாகக் கூறுகிறார்: "இந்த சிக்கலானப் பெரிய அளவிலான பணையச் சுழற்சியில், எவரும் எவருடைய நிதி நிலைமைகளைப் பற்றி, ஏன் அவர்களதைப் பற்றிக் கூட உறுதியளிக்க முடியாது. ஆச்சரியமளிக்காத வகையில், கடன் சந்தைகள் உறைந்தன."

அமெரிக்காவின் நிகர இறக்குமதிகளின் மூலமான வருவாயிலிருந்து அந்நியர்களின் அமெரிக்க முதலீடுகள்

இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் 
அமெரிக்க நடப்புக் கணக்கு அல்லது வர்த்தக பற்றாக்குறை

2005 ஆம் ஆண்டில் பென் பெர்னான்கே அமெரிக்காவின் இறக்குமதிகள் ஏற்றுமதிகளை விட அதிகரித்ததால், ஏற்பட்ட உயர்ந்த மற்றும் அதிகரிக்கும் நடப்புக் கணக்கு(வர்த்தக) பற்றாக்குறையின் பாதிப்புக்களை விவரித்தார். 1996 மற்றும் 2004 ஆம் ஆண்டிற்கும் இடையே அமெரிக்க நடப்புக் கணக்கு பற்றாக்குறை தேசிய மொத்த உற்பத்தியில் 1.5% லிருந்து 5.8% ஆக $650 பில்லியன் மதிப்பில் அதிகரித்தது. இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட அமெரிக்கா வர்த்தக கணக்கு நிறைவுள்ள முக்கியமாக வளர்ந்து வரும் ஆசிய மற்றும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிலிருந்து ஏராளமான பணத்தை கடன் வாங்க வேண்டியிருந்தது. பணக்கட்டணங்களின் சமநிலை தனிநிலை இருக்க வேண்டுமானால், நடப்புக் கணக்குப் பற்றக்குறை உள்ள (அமெரிக்கா போன்ற) ஒரு நாட்டில் அதே மதிப்புள்ள தொகைக்கு சமமாக மூலதனக் கணக்கு (முதலீடு) இருக்க வேண்டும். ஆக பெரிய மற்றும் வளரும் அந்நிய நிதி (மூலதன)அமெரிக்காவினுள் பாய்ந்து அதன் இறக்குமதித் தேவைகளுக்கு பயன்பட்டது. அந்நிய முதலீட்டாளர்கள் இந்த நிதிகளை கடன் கொடுக்க வைத்திருந்தனர், ஒன்று அவர்களுக்கு தனிப்பட்ட சேமிப்பு விகிதங்கள் (சீனாவில் 40% ற்கும் அதிகமாக) அதிகமிருந்தது அல்லது உயர் எண்ணெய் விலைகள் காரணமாக இருந்தன. பெர்னான்கே இதை "சேமிப்புத் தேக்கம்" எனக் குறிப்பிட்டார், அமெரிக்காவினுள் மூலதனம் உள்ளே தள்ளி யிருக்கலாம், இது பிற பொருளாதார நிபுணர்களின் பார்வையிலிருந்து, அவர்களின் பார்வையான மூலதனங்கள் அமெரிக்காவின் உயர் நுகர்வு அளவுகளால் உள்ளிழுக்கப்பட்டு ள்ளது என்பதிலிருந்து மாறுபட்டிருந்தது. வேறு விதத்தில் கூறுவதானால், நாடு அதிகமாக தனது சொத்துக்களை அந்நியருக்கு விற்காதவரையோ அல்லது அந்நியர்கள் அதற்கு கடன் அளிக்க முன் வராத வரை அதன் வருமானத்தை விட அதிகமாக நுகர முடியாது.

உள்ளே தள்ளுவது அல்லது உள்ளிழுக்கப்படுவது என்ற பார்வைகள் கடந்து, ஒரு நிதி "வெள்ளம்" (மூலதனம் அல்லது பணம்) அமெரிக்க நிதிச் சந்தைகளை அடைந்தது. அந்நிய அரசுகள், அமெரிக்க அரசு கருவூல பத்திரங்களை வாங்குவதன் மூலம் நிதி வழங்கின, இதனால் சிக்கலின் நேரடியான பாதிப்பினை பெருமளவு தவிர்த்தன. மற்றொரு புறம், அமெரிக்க குடும்பங்கள் அந்நியரிடமிருந்து பெற்ற நிதியை நுகர்விற்கும் வீடு மற்றும் நிதிச் சொத்துக்களை விலையுயர்த்த முயற்சிக்கவும் பயன்படுத்தினர். நிதி நிறுவனங்கள் அடமான அடிப்படையிலான கடனீடுகளில் அந்நிய நிதியை முதலீடு செய்தன. அமெரிக்க வீட்டு மற்றும் நிதி சொத்துக்களின் மதிப்பு வீட்டு குமிழி வெடித்த போது குறிப்பிடுமளவு வீழ்ந்தது.

நிழல் வங்கியமைப்பின் பூரிப்பும் வீழ்ச்சியும்

2008 ஆம் ஆண்டின் ஜூன் மாதப் பேச்சில், அமெரிக்க கருவூல அமைச்சர் டிமோதி கீத்னர், அப்போதைய நியூயார்க் மைய வங்கித் தலைவர், நிழல் வங்கியமைப்பு என்றழைக்கப்படும் "இணை" வங்கியமைப்பில் உள்ளார்ந்த விஷயங்களில் செலுத்தி கடன் சந்தைகளை உறைய வைத்ததை கணிசமாகச் சுட்டி குற்றஞ்சாட்டினார். இந்த உள்ளார்ந்த விஷயங்கள் நிதியமைப்பின் அடிப்படையான ஆதரவு கடன் சந்தைகளுக்கு முக்கியமானவையானது, ஆனால் அதற்கிணையான கட்டுப்பாட்டு ஒழுங்கமைவுகளுக்கு உட்பட்டவையல்ல. மேலும், இந்த உள்ளார்ந்த விஷயங்கள் பாதிப்பிற்குள்ளாகக் கூடியவை ஏனெனில் அவை குறுகிய-கால கடனை நிதிச் சந்தையில் பெற்று, நீண்ட கால நிதியில்லாத மற்றும் சிக்கல்வாய்ந்த சொத்துக்களை வாங்கியுள்ளன. கடன் சந்தைகளில் ஏற்படும் சீர்குலைவுகள் இவற்றை வேகமான துணை வலுவற்றதாகவும், அவற்றின் நீண்ட கால சொத்துக்களை அழுத்தப்பட்ட விலைகளுக்கு விற்கின்றனவாகவும் மாற்றுகின்றன என்பதே இதன் பொருளாகும். இந்த உள்ளார்ந்த விஷயங்களின் முக்கியத்துவம் பற்றி அவர் விவரித்தார்: " 2007 முற்பகுதியில், சொத்து அடிப்படையிலான வணிக பத்திரங்கள் வழி, அமைப்பாக்கப்பட்ட முதலீட்டு வழிமுறைகள், ஏல-விகித முன்னுரிமை பத்திரங்கள், ஒப்பந்தப்புள்ளி மாற்று பத்திரங்கள் மற்றும் மாறும் விகித தேவை பத்திரங்கள், ஆகியவை கூட்டு மதிப்புச் சொத்தாக ஏறக்குறைய $2.2 டிரில்லியனைக் கொண்டிருந்தது. சொத்துக்கள் ஓரிரவில் மும்முனை மறு வாங்கல் பத்திரமாக நிதியளிக்கப்பட்டது $2.5 டிரில்லியனாக அதிகரித்தது. சொத்துக்கள் கை காப்பு இழப்புக் காப்பீடு நிதிகளில் இருந்தவை ஏறக்குறைய $1.8 டிரில்லியனாக அதிகரித்தது. அப்போதைய ஐந்து பெரிய முதலீட்டு வங்கிகளின் இருப்புநிலைக் குறிப்புகள் மொத்தமாக $4 டிரில்லியனாக இருந்தது. ஒப்பீட்டளவில், அமெரிக்காவிலுள்ள உயர்மட்ட ஐந்து வங்கி பொறுப்பு நிறுவனங்களின் சொத்து மதிப்பு $6 டிரில்லியனை விட கூடுதலாக இருந்தது, அனைத்து வங்கியமைப்பின் மொத்த சொத்துக்கள் சுமார் $10 டிரில்லியனாக விளங்கியது." அவர் கூறினார், " இந்த காரணிகளின் கூட்டு விளைவு ஒரு நிதியமைப்பானது சுய-மறுவலுவுண்டாக்கும் சொத்து விலை மற்றும் கடன் சுழல்கள் ஆகியவற்றால் பாதிப்படையக்கூடியது."

நோபல் பரிசு பெற்ற பால் குரூக்மென் நிழல் வங்கியமைப்பில் நடைபெற்றது சிக்கலை உண்டாக்கும் காரணியாக "என்ன நடந்தது என்பதன் மையமாக" இருந்ததாக விவரித்தார். "நிழல் வங்கியமைப்பு விரிவடைந்து முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை மரபுவழி வங்கியமைப்புக்கு போட்டியாக அல்லது அதனை முந்திய நிலையிலும் இருத்ததால், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பெரும் பொருளாதார அழுத்தத்தை (சரிவை) ஏற்படுத்தக் கூடிய நிதி பாதிப்பு சூழலை மறு உருவாக்கத்தையுணர்ந்து- மற்றும் அவர்கள் கட்டுப்பாடுகளை நீடிப்பதுன் மூலமும் இத்தகைய நிறுவனங்களின் நிதிப் பாதுகாப்பிற்கு வலையளிக்கவும் பதிலளிப்பு நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். செல்வாக்குள்ள நபர்கள் எளிமையாக ஒரு விதியை அறிவித்திருக்க வேண்டும்: வங்கி செய்யும் எதனையும் செய்வது, சிக்கல் காலத்தில் வங்கியை மீட்பது போன்றது, வங்கி போன்றே கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்." இத்தகைய கட்டுப்பாட்டின்மையை பற்றி அவர் "தீங்கு விளைவிக்கின்ற புறக்கணிப்பு" என்று குறிப்பிட்டார்.

2007 ஆம் ஆண்டு இளவேனிற் காலத்தில் நிழல் வங்கியமைப்பினால் ஆதரவளிக்கப்பட்ட பங்குமயமாக்கல் சந்தை மூடப்படத் துவங்கின மேலும் 2008 ஆம் ஆண்டின் இறுதியில் கிட்டத்தட்ட மூடப்பட்டன. மூன்றில் ஒரு பங்கு தனியார் கடன் சந்தைகள் நிதி ஆதாரமாக இருப்பது கிடைக்காமற்போனது. ப்ரூகிங்க்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, மரபு ரீதியிலான வங்கியமைப்பு இந்த இடைவெளியை நிரப்பத் தேவையான மூலதனத்தை 2009 ஆம் ஆண்டில் ஜூனில் வைத்திருக்கவில்லை: " கூடுதலாகக் கடன் அளிக்கத் தேவையான அளவு மூலதனம் உருவாக்கும் வலுவான இலாபத்திற்கு பல வருடங்கள் பிடிக்கும்." கட்டுரையாசிரியர்கள் மேலும் குறிப்பிடுவது சில வகையான பங்குமயமாக்கல் "எப்போதும் மறையக்கூடியவை, மனிதரால் உருவாக்கப்பட்ட கலைப்பொருள் போன்ற அதிகமான நெகிழ்வான கடன் சூழ்நிலைகளில் இருக்கக்கூடியது."[281]

பாதிப்புகள்

அமெரிக்காவில் உண்டாக்கிய பாதிப்புகள்

இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் 
முக்கிய சொத்து அளவீடுகளின் மீதான சிக்கலின் பாதிப்புகள்

2007 ஜூன் - 2008 நவம்பர் இடைப்பட்ட காலத்தில், அமெரிக்கர்கள் தங்களது நிகர மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமாக இழந்தனர். 2008 நவம்பர் முற்பகுதியில், பரந்த அமெரிக்க பங்கு அட்டவணை, S&P 500 தனது 2007 ன் உச்சத்திலிருந்து 45 சதவீதம் கீழிறங்கியது. வீட்டு விலைகள், 2006 ஆம் ஆண்டில் இருந்த உச்சத்தில் இருந்து 20% குறைந்தன, எதிர்கால சந்தையில் ஒரு 30-35% நிகழக்கூடிய வீழ்ச்சியை சுட்டியது. அமெரிக்காவில் மொத்த வீட்டு சமப்பங்குகள், 2006 ஆம் ஆண்டில் உச்சத்தில் $13 டிரில்லியனாக இருந்தது, 2008 ஆம் ஆண்டின் மத்தியில் $8.8 டிரில்லியனாக வீழ்ந்து மேலும் 2008 ன் பிற்பகுதியில் இன்னும் வீழ்ந்து கொண்டேயிருந்தது. அமெரிக்காவின் இரண்டாம் பெரிய குடும்பச் சொத்தான, ஓய்வுக்கால சொத்துக்கள் 22 சதவீதம் குறைந்தது, 2006 ஆம் ஆண்டில் $10.3 டிரில்லியனாக இருந்து $8 டிரில்லியனாக 2008 ன் மத்தியில் குறைந்தது. இதே காலகட்டத்தில், சேமிப்பு மற்றும் முதலீடு சொத்துக்கள் (ஓய்வுக்கால சேமிப்புகள் தவிர) $1.2 டிரில்லியன்களையும் ஓய்வுக்கால சொத்துக்கள் $1.3 டிரில்லியன்களையும் இழந்தன. இணைத்தெடுத்தபோது, இத்தகைய இழப்புகள் தள்ளாட்டமிக்க மொத்தமாக $8.3 டிரில்லியன்களாகவிருந்தன. அமெரிக்க சிறுபான்மை குழு வின் உறுப்பினர்கள் இரண்டாம் நிலை அடமானங்களை பொருத்தமில்லாத எண்ணிக்கையில் பெற்றனர், மேலும் அதன் விளைவாக பொருத்தமில்லாத அளவு முன்கூட்டியே திருப்பும் கடன்களையும் அனுபவித்தனர்.

நிதிச் சந்தை பாதிப்புகள், 2007

இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் 
FDIC வரைபடம்-அமெரிக்க வங்கி & சிக்கன இலாபம் காலாண்டில்

2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சிக்கல் நிதிச் சந்தையை பாதிக்கத் துவங்கியது, உலகின் பெரிய (2008) வங்கியான HSBC, $10.5 பில்லியன்கள் மதிப்புள்ள இரண்டாம் நிலை MBS பங்குகளை கைவிட்டது, அது பெரிய இரண்டாம் நிலை சம்பந்தமான முதல் இழப்பு செய்தியாகவிருந்தது. 2007 ஆம் ஆண்டின் போது, குறைந்தது 100 அடமான நிறுவனங்கள் ஒன்று மூடப்பட்டன, செயல்பாடுகளை இடைநிறுத்தம் செய்யப்பட்டன அல்லது விற்கப்பட்டன. உயர் மேலாண்மை பதவிகளும் பாதிக்கப்படாமல் தப்பிக்க இயலவில்லை, மெர்ரிலிஞ்ச் மற்றும் சிட்டி குழுமதலைமை நிர்வாகிகள் 2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு வார இடைவெளியில் பதவி விலகினர். சிக்கல் ஆழமான போது, மென்மேலும் நிதி நிறுவனங்கள் ஒன்று இணைந்தன, அல்லது அவர்கள் இணைப்பு ஜோடிகளை காண பேச்சுவார்த்தைகளை நடத்துவதாக அறிவித்தனர்.

2007 ஆம் ஆண்டின் போது, சிக்கல் நிதிச் சந்தையில் பீதியை ஏற்படுத்தியது, மேலும் முதலீட்டாளர்களை சிக்கல் வாய்ந்த அடமானப் பத்திரங்களிலிருந்தும் நிலையற்ற பங்குகளிலிருந்தும் பணத்தை திரும்பப் பெற்று மற்றும் பொருட்கள் சந்தையில் "மதிப்புக் குவியலாக" இட ஊக்குவித்தது. நிதி வழிப்பொருட்களின் சந்தையின் வீழ்ச்சிக்குப் பின்னரான சரக்குகள் சந்தையிலான நிதி ஊகம், உலக உணவு பொருட்களின் விலைச் சிக்கலுக்கு பங்களித்தது மேலும் எண்ணெய் விலை அதிகரிப்பும் "பொருட்களின் பெரும்-சுழலை" காரணமாகக் கொண்டு அதிகரித்தது. நிதி ஊக வியாபாரிகள் விரைவான இலாபம் பெற பங்குகளிலிருந்தும், அடமானப்பங்குகளிலிருந்தும் டிரில்லியன் டாலர்களை நீக்கினர், அவற்றில் சில உணவு மற்றும் மூலப் பொருட்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தன.

எதிர்கால கடன் தவறுதல்களுக்கான அடமான கடன் தவறுதல்கள் மற்றும் முன்னேற்பாடுகள் FDIC ஆல் காப்பீடு செய்யப்பட்ட அமெரிக்க 8533 பங்கு வைப்பு நிறுவனங்களின் இலாபத்தை 2006 இன் நான்காம் கால்பகுதியிலிருந்த $35.2 பில்லியனிலிருந்து அதே காற்பகுதியின் அடுத்தாண்டில் 98% மதிப்புக்கான $646 மில்லியனாகவும் வீழ்த்தக் காரணமானது. 1990 ஆம் ஆண்டிற்குப் பிறகு 2007 நான்காம் காற்பகுதி மோசமான வங்கி மற்றும் செல்வ ஆக்க நிலையினைக் கண்டது. 2007 முழுதும், காப்பீடு செய்த பங்கு வைப்பு நிறுவனங்கள் ஏறக்குறைய $100 பில்லியனை ஈட்டின, 2006 ன் சாதனை இலாபமான $145 பில்லியனை விட 31% கீழானது. 2007 காற்பகுதி ஒன்றில் இலாபம் $35.6 பில்லியனிலிருந்து 46% குறைந்து $19.3 பில்லியனாக 2008 காற்பகுதி ஒன்றில் வீழ்ந்தது.

நிதிச் சந்தை பாதிப்புகள், 2008

இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் 
TED பரவல் - கடன் சிக்கலின் குறிப்பு - அதிரடியாக ஏறியது செப்டம்பர் 2008.

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில், உலகம் முழுதும் உள்ள நிதி நிறுவனங்கள் இரண்டாம் நிலை சம்பந்தப்பட்ட தங்கள் வசமுள்ள கடனீடுகள் US$501 பில்லியன் மதிப்புள்ளவை என எழுத்துப்பூர்வமாக அறிவித்தன. உலகம் முழுதுமுள்ள நிதி நிறுவனங்கள் இறுதியாக இரண்டாம் நிலை MBS களின் வைப்புகளை $1.5 டிரில்லியனுக்கு குறைத்தாக வேண்டும் என IMF மதிப்பிட்டது. 2008 ஆம் ஆண்டு நவம்பரில் சுமார் $750 பில்லியனை அத்தகைய இழப்புகளில் கண்டுணர்ந்தனர். உலக வங்கியமைப்பிலுள்ள முதலீட்டில் பெரும்பகுதியை இந்த இழப்புகள் இல்லாமல் ஆக்கின. பேசல் ஒப்பந்தத்தைஏற்ற நாடுகளில் தலமையிடங்களைக் கொண்ட வங்கிகள் ஒவ்வொரு டாலர் நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு அளித்த கடனுக்கும பற்பல செண்ட்டுக்களை முதலீடாக வைத்திருக்க வேண்டும். முன்பு விவரித்தபடி வங்கிகளின் முதலீட்டில் ஏற்பட்ட கடும் குறைப்பு இவ்வாறாக வணிகர்களுக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் கடன் இருப்பைக் குறைத்தது.

சிக்கல் லெக்மான் பிரதர்ஸ் மற்றும் இதர முக்கிய நிதி நிறுவனங்கள் 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் தோல்வியுற்ற போது இச்சிக்கல் முக்கிய கட்டத்தையடைந்தது. செப்டம்பர் 2008 இல் அமெரிக்காவில் பண நிதியிலிருந்து இரு நாட்களில் $150 பில்லியன் திரும்ப எடுக்கப்பட்டது. இரு தினங்களின் சராசரி வெளியேற்றம் $5 பில்லியனாக இருந்தது. விளைவாக, பணச் சந்தை வங்கி நம்பிக்கையிழப்புக்கு உட்பட்டது. பணச் சந்தை வங்கி கடனுக்கும் (CD) நிதியல்லாத நிறுவனங்களுக்கும் (வணிகப் பத்திரங்கள்) ஒரு முக்கிய ஆதாரமாகும். TED பரப்பு(மேலுள்ள வரைப்படத்தைக் காண்க)லெக்மான் தோல்விக்குப் பிறகு வங்கிகளுக்கு இடையிலான கடன் அளிப்பு அளவு, நான்கு மடங்கு அதிகரித்தது. இந்தக் கடன் உறைவு உலக நிதியமைப்பை வீழ்ச்சியின் விளிம்புக்குக் கொண்டு வந்தது. இச் சூழ்நிலையில் அமெரிக்க மைய வங்கி, ஐரோப்பிய மைய வங்கிமற்றும் பிற மைய வங்கிகளின் பதில் நடவடிக்கை உடனடியானது மற்றும் குறிப்பிடும்படியானது. 2008 ஆம் ஆண்டின் கடைசி காற்பகுதியில் இந்த வங்கிகள் US$2.5 டிரில்லியன் அரசு கடன் மற்றும் சிக்கலுக்குள்ளான தனியார் சொத்துக்களை வங்கிகளிடமிருந்து வாங்கின. இது கடன் சந்தையில் பணத்தை சூழ்நிலை அழுத்தம் காரணமாக பெருமளவு செலுத்தவும், உலக வரலாற்றில் மிகப்பெரிய பொருளியல் கொள்கை நடவடிக்கையாகவுமிருந்தது. ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் மற்றும் அமெரிக்காவும் நாட்டு வங்கியமைப்பின் மூலதனத்தை தங்களது பெரிய வங்கிகளின் வெளியிடப்பட்ட புதிய விருப்ப பங்குகளை வாங்குவதன் மூலமாக $1.5 டிரில்லியன் உயர்த்தின.

இருப்பினும், சில பொருளியலாளர்கள் மூன்றாம் உலக நாடுகள் பிரேசில் மற்றும் சீனா போன்றவை நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல அதிகளவு பாதிக்கப்படாது எனக் கூறினர்.

எதிர்வினைகள்

2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் சிக்கல் தெளிவாகத் தெரியத் துவங்கியபின் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில், உலக நிதிச் சந்தைகளில் நிலவிய பெரிய நிலையற்றத்தன்மையானது விழிப்புணர்வையும், சிக்கலுக்கான கவனத்தையும் அதிகரித்தது. பல்வேறு முகைமைகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள், அரசியல் அதிகாரிகள், கூடுதலான, மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளை சிக்கலைக் கையாளுவதற்குத் துவங்கினர்.

இன்றைய தேதிவரை, பல்வேறு அரசு முகமைகள் கடன்கள், சொத்து வங்குகதல்கள், உத்தரவாதங்கள் மற்றும் நேரடிச் செலவு ஆகியவற்றில் டிரில்லியன் கணக்கான டாலர்களை ஒதுக்கியுள்ளன அல்லது நேரடியாக செலவழித்துள்ளன. சிக்கல் சம்பந்தமாக அமெரிக்க அரசின் நிதி ஒப்புதல்கள் மற்றும் முதலீடுகள் பற்றிய சுருக்கத்திற்கு, CNN-Bailout Scorecard ஐ காண்க.

அமெரிக்க மைய வங்கி மற்றும் மைய வங்கிகள்

அமெரிக்காவின் மைய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், உலகின் பிற மைய வங்கிகளுடன் இணைந்து சிக்கலைச் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2008 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மைய வங்கித் தலைவர் பென் பெர்னான்கே கூறினார்:"விரிவாக, மைய வங்கியின் எதிர்வினை இருத் தடங்களைப் பின்பற்றியது: சந்தைப் பாய்வுத் தன்மை மற்றும் செயல்பாடு ஆகியவற்றை ஆதரிக்க தேவையான முயற்சிகள் மற்றும் பணக் கொள்கையின் வாயிலாக பேரளவு பொருளியல் நோக்கங்களை முயற்சிப்பது." மைய வங்கி பின்வரும் செயல்களைச் செய்தது:

  • மைய இருப்பு நிதி விகிதஇலக்கை 5.25% லிருந்து 2$ மாகவும், கழிவு விகிதத்தை 5.75% லிருந்து 2.25% கவும் குறைத்தது. இது ஆறு கட்டங்களாக , 2007 செப்டம்பர் 18 மற்றும் 2008 ஏப்ரல் 30 இடையில் நிகழ்ந்தது, மைய வங்கி மைய நிதி விகித இலக்கை 0-0.25% இடைப்பட்டதாகக் கொண்டது (25 அடிப்படைப் புள்ளிகள்).
  • உறுப்பினர் வங்கிகள் பணப் புழக்கமுடையதாக இருப்பதை உறுதிசெய்ய, பிற மைய வங்கிகளுடன் இணைந்து வெளிச் சந்தை நடவடிக்கைகளை எடுத்தது. இவை அரசு பங்குகள் உடனொத்த முறையில் உறுப்பினர் வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட ஆற்றல் மிக குறுகிய கால கடன்களாகும். மைய வங்கிகளும் வட்டி விகிதங்களை குறைத்தன(கழிவு விகிதமெனஅமெரிக்காவில் அழைக்கப்பட்டது) அவை உறுப்பினர் வங்கிகளுக்கு குறுகிய-கால கடன்களுக்கு கட்டணம் விதித்தன.
  • மைய வங்கி நேரடியாக வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிறுவனங்களுக்கு கடனளிக்க பல்வகையான கடனளிக்கும் வசதிகளை உருவாக்கியது, இது குறிப்பிட்ட வகைகளான உடனொத்த கடன் தரங்களின் மாறுபட்ட தன்மைக்கு எதிரானது. இவை கால ஏல வசதி(TAF) மற்றும் கால சொத்து ஆதரவுள்ள கடனீடுகள் கடன் வசதி(TALF) ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • 2008 ஆம் ஆண்டு நவம்பரில், மைய வங்கி GSE ன் MBS களை வாங்கி குறை அடமான விகிதங்களுக்குதவ $600 பில்லியன் திட்டத்தை அறிவித்தது.
  • 2009 ஆம் ஆண்டு மார்ச்சில், FOMC மைய வங்கி, கூடுதலாக $750 பில்லியன் (GSE) முகமை அடமான அடிப்படை பங்குகளை வாங்குவதன் மூலம் இருப்புநிலைக் குறிப்பை மேலும் அதிகரிக்கச் செய்ய முடிவு செய்தது. இதன் மூலம் இந்த ஆண்டு மொத்த பங்கு வாங்குதல்களை $1.25 டிரில்லியன் வரை அதிகரிக்கவும், இந்த ஆண்டு முகமை கடன்களை $100 பில்லியன்களாக அதிகரித்து வாங்கி மொத்தம் $200 பில்லியன்களாக்க முடிவு செய்தது. மேலும், தனியார் கடன் சந்தைகளில் சூழ்நிலைகளை மேம்படுத்த, குழுவானது 2009 இல் நீண்டக் கால கருவூல பத்திரங்களை $300 பில்லியன்கள் வரை வாங்க முடிவு செய்தது.

பென் பெர்னான்கேயின் கூற்றுப்படி, மைய இருப்புநிலைக்குறிப்பின் விரிவு என்பது மைய வங்கி மின்னணு முறையில் பணத்தை உருவாக்குவது தேவையே"... ஏனெனில் நமது பொருளாதாரம் மிக பலவீனமாகவும் பணவீக்கமானது மிகக் குறைவாகவும் உள்ளது. பொருளாதாரம் மீண்டு வரும் போது, அச்சமயத்தில் இத்தகைய திட்டங்களை நாம் நிறுத்தி வைக்கலாம், வட்டி விகிதத்தை உயர்த்தலாம், பண அளிப்பை குறைக்கலாம், மற்றும் பண வீக்கமற்ற மறுமீட்பைப் பெற்றோம் உறுதி செய்யலாம்."

பொருளாதாரத் தூண்டுதல்கள்

2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 திகதியில், அதிபர் புஷ் $168 பில்லியன் பொருளாதாரத் தூண்டி திட்டத்தை சட்டமாகக் கையொப்பமிட்டார். அது முக்கியமாக வருமான வரிச்சலுகை காசோலைகள் வடிவத்தில் நேரடியாக வரி கட்டுவோருக்கு சென்றடையும்படியான வடிவத்தில் அமைந்தது. 2008 ஆம் ஆண்டின் ஏப்ரல் 28 இல் வாரத் துவக்கத்தில் காசோலைகள் அஞ்சல் செய்யப்பட்டன. இருப்பினும், இந்தச் சலுகை எதிர்பாராத பெட்ரோல் மற்றும் உணவு விலையேற்றத்துடன்இணை நிகழ்வானது. இந்த இணை நிகழ்வானது சிலரை இந்தப் பொருளாதார தூண்டித் திட்டம் உள்ளார்ந்த பலனைத் தருமா எனவும், அல்லது நுகர்வோர் அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலைகளைச் சமாளிக்க செலவு செய்வார்களா என எண்ண வைத்தது.

2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 திகதியில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க மறுமீட்பு மற்றும் மறுமுதலீட்டு சட்டம் 2009 ஐ, விரிவான செலவு மற்றும் வரி வெட்டு பார்வைகளுடன் $787 பில்லியன் தூண்டி திட்டத்தில் கையொப்பமிட்டார்.

வங்கிக் கடன்தீர்வுத்திறம் மற்றும் முதலீட்டு மீட்பு

இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் 
பெரிய அமெரிக்க வங்கிகளின் மொத்த சொத்து விகிதங்களின் பொதுவான பங்கு

கடன் அடிப்படையிலான கடனீடுகள் மற்றும் கடன் வாங்கிய பணத்தால் வாங்கிய பிற சொத்துக்களிலான இழப்புகள் அதிரடியாக நிதி நிறுவனங்களின் முதலீட்டு அடிப்படையை குறைத்தது, பலரை திவாலாகச் செய்தது அல்லது குறைவாகக் கடன் அளிக்க வழிகோலியது. அரசுகள் வங்கிகளுக்கு நிதியுதவி செய்தன. சில வங்கிகள் குறிப்பிடத்தக்க தனியார் வளங்களிலிருந்து கூடுதல் மூலதனத்தைப் பெற நடவடிக்கைகள் எடுத்தன.

2008 ஆம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்க அரசு 2008 ஆம் ஆண்டின் அவசர பொருளாதார நிலைப்படுத்தல் சட்டத்தை(EESA அல்லது TARP) நிறைவேற்றியது. இச்சட்டம் "சிக்கலுக்குள்ளான சொத்து மீட்புத் திட்டத்திற்கு" (TARP) $700 பில்லியன் நிதியுதவி செய்தது, இது பரிமாற்றமாக பங்கு-தரும் விருப்பப் பத்திரங்களுக்கு பரிமாற்றாக வங்கிகளுக்கு நிதி வழங்கப் பயன்படுத்தப்பட்டது.

அடமான சம்பந்தமான சொத்துக்களுக்கு ஈடாக அரசு மற்றும் தனியார் முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது வங்கிகளுக்கு மறு முதலீடுகளைப் பெற மற்றொரு வழியாக இருந்தது (அதாவது, "நச்சு" அல்லது "மரபுரிமைப்பேற்று" சொத்துக்கள்) இது வங்கிகளின் நிதி நிலையை அவற்றின் நிச்சயமற்ற தன்மையை குறைப்பதன் மூலம் மூலதனத்தின் தரத்தை உயர்த்தக்கூடியதாக இருந்தது. அமெரிக்க கருவூலச் செயலர் டிமோதி கீத்னர் மார்ச் 2009 இல் "மரபுரிமைப்பேற்று" அல்லது "நச்சு" சொத்துக்களை வங்கிகளிடமிருந்து வாங்கும் திட்டத்தை அறிவித்தார். அரசு-தனியார் கூட்டு முதலீட்டு திட்டமானது அரசு கடன்கள் மற்றும் உத்தரவாதங்களைக் கொண்டு தனியார் முதலீட்டாளர்களை நச்சு சொத்துக்களை வங்கிகளிடமிருந்து வாங்குவதற்கான ஊக்குவிப்புகளை உள்ளடக்கியிருந்தது.

அமெரிக்க அரசின் நிதி ஒப்புதல்கள் மற்றும் முதலீடுகள் பற்றிய சுருக்கத்திற்கு, CNN-Bailout Scorecard ஐக் காண்க.

டிசம்பர் 2008 வரை அமெரிக்க வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட TARP நிதி பற்றிய சுருக்கத்திற்கு Reuters-TARP Funds ஐக் காண்க

நிதிமீட்புதவிகளும் நிதி நிறுவனங்களின் தோல்வியும்

இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் 
மக்கள் நார்த்தென் ராக் வங்கிக் கிளை பிர்மிங்ஹாம், இங்கிலாந்து செப்டம்பர் 15, 2007, அவர்களது சேமிப்பை இரண்டாம் நிலை அடமான சிக்கல் காரணத்தால் வரிசையில் நின்றனர்.

தோல்வியடைந்த பல பெரிய நிதி நிறுவனங்கள், அரசினால் உதிவிசெய்யப்பட்டன அல்லது மற்றொரு நிறுவனத்துடன் (தன்னிச்சையாகவோ அல்லது வேறுவிதமாகவோ) சிக்கல் காலத்தில் இணைய முற்பட்டன. குறிப்பிட்ட சூழ்நிலைகள் பல்வேறு விதமாக இருந்த நிலையில், பொதுவாக அடமான அடிப்படை கடனீடுகளின் மதிப்பு வீழ்ச்சியால், அவற்றை வைத்திருந்த நிறுவனங்கள் நிதிப்பற்றாக்குறையில் தள்ளப்பட்டன, இது முதலீட்டாளர்கள் நிதியை அவற்றிலிருந்து வெளியில் எடுத்ததால் இது வங்கி முதல் மீட்புக்கு சமமானதாக இருந்தது, அல்லது கடன் சந்தையில் புதிய நிதியைப் பாதுகாக்க இயலாமல் போனது. இத்தகைய நிறுவனங்கள், அவற்றின் நிதி அல்லது பங்கு மூலதனங்களுடன் ஒப்பிடுகையில் அதிக அளவிலான பணத்தை கடன் பெற்றன மற்றும் முதலீடு செய்திருந்தன, அதாவது அவை அதிகபட்சமாக துணை வலுவுடனும் இருந்தன, மேலும் எதிர்பாராத கடன் சந்தை இடைஞ்சல்களினால் பாதிக்கப்படும் சாத்தியம் இருந்தது.

அமெரிக்காவின் பெரிய முதலீட்டு வங்கிகள் 2008 ஆம் ஆண்டில் $4 டிரில்லியன் கூட்டு பொறுப்புகள் அல்லது கடன்களுடன் ஒன்று திவாலாகின (லெக்மான் பிரதர்ஸ்)பிற நிறுவங்களால் எடுத்துக் கொள்ளப்பட்டன (பியர் ஸ்டெர்ன்ஸ்மற்றும் மெரில்லிஞ்)அல்லது அமெரிக்க அரசால் நிதியுதவி வழங்கப்பட்டன (கோல்ட்மேன் சாஸ்மற்றும் மார்கன் ஸ்டேன்லி). அரசு-ஆதரவு நிறுவனங்கள் (GSE)ஃபென்னி மே மற்றும் பெரெட்டி மாக் 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் அதே போன்ற அரசு உதவியை எதிபார்க்கின்றசூழலில் பலவீனமான மூலதன அடிப்படையைக் கொண்டு ஒன்று நேரடியாக உறுதியளிக்கப்பட்டன அல்லது கிட்டத்தட்ட $5 டிரில்லியன் அடமான பொறுப்புகளுக்காகப் பெற்றன. அளவீடாக, இந்த $9 டிரில்லியன் கடன் பொறுப்புகள் ஏழு அதிகமானத் துணை வலுவுடன் கூடிய நிறுவனங்களில் குவிந்திருந்தது அமெரிக்க $14 டிரில்லியன் பொருளாதாரத்தின் (GDP)அல்லது செப்டம்பர் 2008 இல் இருந்த மொத்த தேசிய கடன் $10 டிரில்லியனோடும் ஒப்பிடக்கூடியது.

உலகம் முழுவதுமான பெரிய வைப்பு வங்கிகள் முதலீட்டு விகித கட்டுப்பாடுகளை மீறிச் செல்ல முதலீட்டு வழிமுறைகளை அமைத்திருந்தவற்றின் வாயிலாக நிதி கண்டுபிடிப்புகளைக் கொண்டிருந்தன. குறிப்பிடத்தக்க உலக அளவிலான சிதைவுகளில் நார்த்தென் ராக் £87 பில்லியன் ($150 பில்லியன்) மதிப்பு செலவில் தேசியமயமாக்கப்பட்டது, உள்ளடங்கியுள்ளது. அமெரிக்காவில், வாஷிங்டன் ம்யூச்சுவல் செப்டம்பர் 2008 இல் அமெரிக்க சிக்கன மேற்பார்வை அலுவலகத்தால் (OTS) கைப்பற்றப்பட்டது. அமெரிக்காவின் டஜன் வங்கிகள் TARP ன் ஒரு பகுதியாக அல்லது $700 பில்லியன் நிதி உதவியின் மூலம் பெற்றன.

2008 ஆம் ஆண்டின் நிதி சிக்கலின் விளைவாக, இருபத்தைந்து அமெரிக்க வங்கிகள் திவாலாயின, மேலும் FDIC மூலம் கைக்கொள்ளப்பட்டன.. ஆகஸ்ட் 14, 2009 இல் கூடுதலாக 77 வங்கிகள் திவாலாயின. 1993 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட 50 வங்கிகளை விட இந்த ஏழு மாத கணக்கு தாண்டிச் சென்றது, ஆனாலும் 1990, 1991 மற்றும் 1992 ஆகியவற்றின் சிதைந்த வங்கிகளோடு ஒப்பிட்டால் இது சிறியது. அமெரிக்கா 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் துவங்கிய பொருளாதார வீழ்ச்சி ஆரம்பத்திலிருந்து 6 மில்லியன் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளது.

FDIC வைப்புக் காப்பீடு நிதி, காப்பீடு செய்யப்பட்ட வங்கிகளின் மூலமான கட்டணத்தினால் ஆதரிக்கப்பட்டது, 2009 ஆம் ஆண்டின் முதற் காற்பகுதியில் $13 பில்லியன் வீழ்ந்தது. 1993 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து இது குறைவான மொத்தத்தொகையாகும்.

வீட்டு உரிமையாளர் உதவி

கொடுப்போரும் வாங்குவோரும் முன்கூட்டியே கடன் திருப்புதலைச் தவிர்ப்பதால் செலவு பிடிக்கக் கூடிய, நீண்ட செயல்பாடுகளைத் தவிர்க்க முடியும். சில கடன் அளிப்போர் சிக்கலுக்குள்ளான கடனாளிகளுக்கு ஆதரவான அடமான காலக்கெடுக்களை வழங்கினர் (அதாவது, மறு நிதியளித்தல், கடன் மறுசீரமைப்பு அல்லது நஷ்டத்தின் கடுமையைக் குறைத்தல்). கடனாளிகள் தங்களது கடன் அளிப்போரை சந்தித்து மாற்று வழிவகைகளைக் காண ஊக்குவித்தது.

தி இகானமிஸ்ட் இந்த விஷயத்தை இவ்வாறு விவரித்தது: " நிதி சிக்கலின் எந்தவொரு பகுதியும் இந்த அளவிற்கு கவனத்தைப் பெறவில்லை, அமெரிக்கா முழுதும் வீட்டுக் கடன் முன்கூட்டியே திருப்புவது கடலலையாக அடித்துச் சென்றபோது அதற்குக் குறைவான கவனமே கொடுக்கப்பட்டது. அரசு திட்டங்கள் நல்ல விளைவுத்திறனுடையதாக இல்லை, மேலும் தனியார் முயற்சிகளும் அதைவிட நன்கமையவில்லை." 2009-2011 காலகட்டத்தில் 9 மில்லியன் வீடுகள் முன்கூட்டியே திருப்பித் தரும் சூழ்நிலையில் நுழையும் நிலை இருந்தது, இது வழக்கமான வருடத்தில் ஒரு மில்லியன் மட்டுமே இருப்பதற்கெதிரானது. 2006 சிகாகோ மைய இருப்பு வங்கி கணக்கெடுப்பு ஒன்றின்படி கடன் முன்கூட்டியே முடித்தல் ஒன்றுக்கு சுமார் $50,000 என்ற வீதத்தில், 9 மில்லியன் கடன் முன்கூட்டியே திருப்பித் தருவது $450 பில்லியன்களை நஷ்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்தது.

2007-2009 ஆம் ஆண்டில் பல்வேறு தனியார் மற்றும் அரசு நிர்வாக அல்லது ஆதரவுப் பெற்ற திட்டங்கள் மூலம் வீட்டு உரிமையாளர்கள் தனித் தனியாக அடமானக் கடன் விஷயத்தில் கடன் முன் கூட்டியே திருப்புவது சிக்கல் அமெரிக்காவை விழுங்கி வநதபோது உதவி செய்யப்பட்டனர். ஓர் எடுத்துக்காட்டு, ஹோப் ஹௌ அலையான்ஸ் என்ற அமெரிக்க அரசு மற்றும் தனியார்த் துறை ஒத்துழைப்பு முயற்சியானது ஒரு சில இரண்டாம் நிலை அடமானக் கடனாளிகளுக்குதவ நடத்தப்பட்டது. பிப்ரவரி 2008 இல், 2007 இன் இரண்டாம் பாதியில், 545,000 இரண்டாம் நிலை அடமானக் கடன்தாரர்கள் கடன் நிலையற்றதன்மையால் இருந்தவர்களுக்கு உதவியது, அல்லது செப்டம்பர் 2007 இல் 7.1 மில்லியன் இரண்டாம் நிலை கடன் நிலுவைகளில் 7.7% வீதத்தினருக்கு உதவியது. அலையான்ஸின் செய்தித் தொடர்பாளர் மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டார்.

2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியின் போது, பெரிய வங்கிகள் மற்றும் ஃபென்னி மே மற்றும் பெரெட்டி மாக் தாமதங்களை முன்கூட்டியே கடன் திருப்புதல்கள் மீது நிறுவினர், இது வீட்டு உரிமையாளர்கள் மறு நிதியுதவிக்கு நேரமளிக்கவே செய்யப்பட்டது.

விமர்சகர்கள், தனித் தனியான கடன் மறுசீரமைப்பு முறை பலனளிக்கவில்லை, அதனுடன் மிகச் சில வீட்டு உரிமையாளர்களே கடன் முன்கூட்டியே திருப்புவது மீதான உதவியைப் பெற்றனர் மேலும் கிட்டத்தட்ட 40% உதவி பெற்ற வீட்டு உரிமையாளர்கள் மீண்டும் எட்டு மாதத்திற்குள் கடன் திருப்பத் தவறினர் என வாதிட்டனர். 2008 ஆம் ஆண்டு டிசம்பரில், அமெரிக்க FDIC, 2008 ன் முதல் பாதியில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட அடமானங்கள் மீண்டும் கடன் திருப்பத் தவறின, இவற்றில் பல தவணைத் தொகை குறைக்கப்படாதது அல்லது அடமானக் கடன் மன்னிக்கப்படவில்லை என அறிவிக்கையிட்டது. ஒரு கொள்கைக் கருவியாகக் தனித்தனி மறு சீரமைப்பு பலனளிக்கவில்லை என்று நிரூபிக்க மேலும் ஒரு சான்றாகும்.

2009 ஆம் ஆண்டு பிப்ரவரியில், பொருளாதார நிபுணர்கள் நூரியேல் ரொளபினி மற்றும் மார்க் சாண்டி ஆகியோர் "அனைத்து தரப்பு" (அமைப்பு ரீதியான)அசல் நிலுவையில் 20-30% அதிகமான குறைப்பை பரிந்துரைத்தனர். அடமான நிலுவையில் குறைப்பது, மாதத் தவணையை குறைக்க உதவும், மேலும் மதிப்பிடப்பட்ட 20 மில்லியன் வீட்டு உரிமையாளர்கள் நிதி ஊக்குவிப்பு பெற்று தன்னிச்சையாக கடன் முன் திருப்புதலுக்கு முன்வர அழைக்கும் ஏனெனில் அவர்கள் "நீரில் மூழ்கியுள்ளனர்" ( அதாவது, அடமான நிலுவை வீட்டின் மதிப்பை விட அதிகமாக இருத்தல்).

பாஸ்டன் மைய வங்கியின் ஆய்வு ஒன்று வங்கிகள் கடன்களை மறு சீரமைக்க தயங்குகின்றன எனக் குறிப்பிட்டது. 2008 ஆம் ஆண்டில் கடன் அளிக்கத் தவறிய 3% மட்டுமே தங்களது அடமானத் தவணைகளை குறைக்கப் பெற்றனர். அத்தோடு, MBS வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் அடமான மறு சீரமைப்பில் கருத்து சம்மதம் உள்ளோர் குறிப்பிடத்தகுந்த தடையாக இருக்கமாட்டார்கள்; கடன் வங்கியாலோ அல்லது முதலீட்டாளர்களாலோ கட்டுப்படுத்தப்பட்டாலும் அதற்கிடையே எந்த வேறுபாடும் இல்லை எனக் கண்டறிந்தது. ஆய்வைப் பற்றி விமர்சிக்கும், பொருளாதார நிபுணர்கள் டீன் பேக்கர்மற்றும் பால் வைல்லன் இருவரும் வங்கிகளுக்கு பதிலாக வீட்டு உரிமையாளர்களுக்கு நேரடியாக நிதியை வழங்குவதற்கு ஆதரவு தந்தனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை ஒரு ஆய்வின் முடிவுகளை வெளியிட்டது, அதில் உயர் கடன் புள்ளிகளைப் பெற்ற வீட்டு உரிமையாளர்கள் அடமானத்தில் உள் நுழையும்போது 50% அதிகமாக- கீழ் புள்ளிகளைப் பெறும் கடனாளிகளை விட "செயல்முறையில் கடன் திருப்பத் தவறுதலை செய்கின்றனர்- வேண்டுமென்றே திடீரென தொடர்ந்து செலுத்தாமல் கைவிடுகின்றனர். அத்தகைய செயல்தந்திர கடன் திருப்பத் தவறுதல் சந்தையில் கடுமையாக மிகுந்த விலை வீழ்ச்சியுடன் குவிந்துள்ளது. மதிப்பிடப்பட்ட 588,000 செயல்தந்திர கடன் திருப்பத் தவறுதல்கள் நாடு முழுதும் 2008 ஆம் ஆண்டில் , 2007 ன் மொத்தத்தை விட இரு மடங்கு அதிகமாக நேர்ந்தன. அவை கவலையளிக்கக் கூடிய மொத்த கடன் திருப்பத் தவறுதல்களில் 18% பிரதிநிதித்துவப்படுத்தின, அவை 2008 ன் நான்காம் காற்பகுதியில் 60 நாட்களையும் தாண்டி நீடித்தது.

வீட்டு உரிமையாளர்களின் நிதித் திறன் மற்றும் நிலைத்தன்மைத் திட்டங்கள்

2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 திகதியில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒன்பது மில்லியன் வீட்டு உரிமையாளர்கள் கடன் முன் கூட்டியே முடித்தலைத் தவிர்க்க உதவ ஒரு $73 பில்லியன் திட்டத்தை அறிவித்தார். ஃபான்னி மே மற்றும் பிரெட்டி மாக்ஆகிய நிறுவனங்களுக்கு அடமானங்களை வாங்கவும் அவற்றிற்கு எளிதாக மறு நிதியளிப்பு செய்யவும் வழங்கப்பட்ட நிதியுடனான கூடுதல் நிதியாக $200 பில்லியன் வழங்கப்பட்டது. இத் திட்டம் EESA வின் $700 பில்லியன் நிதியுதவி நிதியத்திலிருந்து பெரும்பாலும் நிதியுதவி செய்யப்பட்டது. இது கடன் கொடுப்போர், வீட்டு உரிமையாளர்களின் மாதத் தவணையை மாத வருமானத்தில் 31% ஆகக் குறைக்க ஊக்கப்படுத்த, செலவு பங்களிப்பு மற்றும் ஊக்கச் சலுகைகளைப் பயன்படுகிறது. இத் திட்டத்தின் கீழ், ஒரு கடன் கொடுப்பவர் கடனாளியின் மாத வருமானத்தில் 38% ற்கு மிகாமல் மாதத் தவணையைக் குறைக்க வேண்டும், மேலும் இதனுடன் அரசு இணைந்து 31% மாக செலவை மேலும் வெட்டிப் பகிர்ந்து கொள்ள பொறுப்பேற்கலாம். திட்டம் கடனாளியின் அடமான நிலுவையின் ஒரு பகுதியை மன்னிக்கும் அம்சத்தையும் உள்ளடக்கியது. நிறுவனங்கள் அடமான சேவையளிப்பவர்கள் கடனை மறு சீரமைப்புச் செய்து வீட்டு உரிமையாளரை தொடர்ந்து தக்கவைக்க ஊக்கமளிக்கப்படுகின்றனர்.

கட்டுப்பாடு தொடர்பான பரிந்துரைகளும் நீண்டக் கால தீர்வுகளும்

அதிபர் பராக் ஒபாமா மற்றும் முக்கிய ஆலோசகர்கள் 2009 ஆம் ஆண்டு ஜூனில் கட்டுப்பாட்டு பரிந்துரைகளை வரிசையாக அறிமுகப்படுத்தினர். இந்தப் பரிந்துரைகள் நுகர்வோர் பாதுகாப்பு, செயலதிகாரிகளின் சம்பளம், வங்கி நிதி முட்டுக்கள் அல்லது மூலதன தேவைகள், நிழல் வங்கியமைப்புமற்றும் வழிப்பொருள்களின் விரிவாக்கப்பட்ட கட்டுப்பாட்டமைப்பு மற்றும் முக்கிய நிறுவனங்களை படிப்படியாக பாதுகாப்பாக மூட மைய வங்கிக்கான அதிகரிக்கப்பட்ட அதிகாரம் மேலும் பிறவற்றையும் அணுகுகின்றது.

ஒரு சில வகை கட்டுப்பாட்டு மாற்றங்களைப் பற்றிய பொருளாதார நிபுணர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், மற்றும் வர்த்தகத் தலைவர்கள் ஆகியோரது பரிந்துரை தற்போதைய சிக்கலின் பாதிப்பை குறைப்பது மற்றும் மீண்டும் ஏற்படாமல் தவிர்ப்பதுமாகும். இருப்பினும், 2009 ஜூன் வரை, பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகள் பல இன்னும் அமல்படுத்தப்படவில்லை. பின்வருவனவும் இவற்றில் உள்ளடங்கும்:

  • பென் பெர்னான்கே: நிழல் வங்கியமைப்பிலுள்ள நிதி நிறுவனங்களை, சிக்கலில் மாட்டிய முதலீட்டு வங்கிகள் மற்றும் கைகாப்பு இழப்பு நிதி போன்றவையை மூடும் வழிமுறைகள் தீர்மானங்களை நிறுவுவது.
  • ஜோசப் ஸ்டிக்லிட்சு: நிதி நிறுவனங்கள் அமைக்கக்கூடிய துணை வலுவைக் குறைப்பது. அதிகாரிகளின் சம்பளம் நீண்ட கால செயல்பாட்டைப் பொருத்து அமையுமாறு நிர்ப்பந்தப்படுத்த. 1933 ன் க்ளாஸ்-ஸ்டீகல் சட்டத்தின் படி நிறுவப்பட்ட வணிக (பங்கு வைப்பு)மற்றும் முதலீட்டு வங்கி பிரித்தலை பின்னர் 1999 ன் க்ராம்-லீச்-ப்ளைலி சட்டத்தின் படி நீக்கப்பட்டதை மறுபடியும் தக்க ஒழுங்கு நிலைக்கு கொண்டுவர வேண்டும்.
  • சிம்சன் ஜான்சன்: அமைப்பு ரீதியிலான சிக்கல்களைக் கட்டுப்படுத்த"இன்றியமையாத" நிறுவனங்களை பல சிறு பகுதிகளாக்க வேண்டும்.
  • பால் கிரக்மேன்: "வங்கிகள் போல் செயல்படும்" நிறுவனங்களை வங்கிகள் போலவே ஒழுங்குபடுத்த வேண்டும்.
  • ஆலன் கிரீன்சுபன்: வங்கிகள் வலுவான முதலீட்டு முட்டுக்களை, அத்தோடு குறிப்பிட்ட படிநிலை வீதப்படி கட்டுப்படுத்தப்பட்ட முதலீட்டு தேவைகளையும் (அதாவது,முதலீட்டு விகிதங்கள் வங்கியின் அளவைப் பொருத்து அதிகரிக்க), "அவற்றின் போட்டியிடும் அனுகூலத்தை அவை பெரியதாக மாறி இழப்பதை ஊக்குவிக்காத அளவு" வைத்திருக்க வேண்டும்.
  • வாரன் பபெட்: வருமானத்தைச் சரி பார்த்தலும் 10% குறைந்தபட்ச முதல் தவணையும் வீட்டு அடமானங்களுக்குத் தேவை.
  • எரிக் டினாலோ: எந்தவொரு நிதி நிறுவனமும் அவசியப்படும் தங்களது நிதிப் பொறுப்புகளை ஆதரிக்கும் அளவிற்கு மூலதனம் வைத்திருக்க வேண்டும். கடன் வழிப்பொருள்களைக் கட்டுப்படுத்தியும் அவை வலுவான முதலீட்டைக் கொண்ட மாற்றுப் பங்குகளோடு எதிர்தரப்பு சிக்கலைக்குறைக்கும் விதமாக வியாபாரம் செய்வதையும் உறுதிப்படுத்துக.
  • ரகுராம் ராஜன்: நிதி நிறுவனங்கள் போதுமான அளவு "மூலதனப் படை" (அதாவது, காப்பீட்டு தவணைகளை பூரிப்பு காலத்தில் செலுத்தி வந்து வீழ்ச்சி காலங்களில் நிவாரணத்தை மாற்றாகப் பெறக் கொடுப்பது.)
  • ஏ.மைக்கேல் ஸ்பென்ஸ்மற்றும் கார்டன் பிரவுன்: முன்னெச்சரிக்கை அமைப்பொன்றை அமைப்பு ரீதியிலான சிக்கல்களை கண்டறிய உதவ நிறுவவேண்டும்.
  • நியால் பெர்கூசன்மற்றும் ஜெப்ரி சாச்ஸ்: பங்கு வைத்திருப்போர் மற்றும் எதிர் தரப்பினர் மீது வரி செலுத்துவோரின் பணத்தை நிதியுதவிகளுக்கு பயன்படுத்தும் முன்பாக "சிகை வெட்டல்" ஒன்றை சுமத்த வேண்டும்.
  • நூரியல் ரோபினி: திவாலான வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும். சமப்பங்குகளின் சமப்பரிமாற்றத்துக்கு ஈடாக கடன்கள் வழங்கி நிதியமைப்பு முழுதும் கடன் அளவை குறைக்க வேண்டும். அடமான நிலுவைகளை குறைத்து வீட்டு உரிமையாளர்களுக்குதவ எதிர் கால வீட்டு விலையேற்றத்தில் கடன் அளிப்பவர்களுக்கு பங்களிக்கலாம்.
  • பால் மக்கல்லே "மனித இயல்பை ஒழுங்குபடுத்தும் எதிர் அணுகுமுறை சுழற்சி கட்டுபாட்டுக் கொள்கைக்காக வாதிட்டார். பொருளாதார நிபுணர் ஹைமான் மின்ஸ்கியின் படைப்பை அவர் குறிப்பிட்டார், அவர் மனித நடத்தையானது, பூரிப்பு மற்றும் வெடிப்புகளின் நீட்டிப்பை பெருக்கும் என்பதே அவர் உருவாக்கிய கருத்தாகும். வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால் மனிதர்கள் கணப்பொழுதில் முதலீடு செய்பவர்கள், மதிப்பின் அடிப்படையில் அல்ல. எதிர்-சுழற்சி கொள்கைகள் மூலதனத் தேவைகளை பூரிப்பு காலத்தில் அதிகரிக்கும் மற்றும் வெடிப்பு காலத்தில் குறைக்கும்.

அமெரிக்க கருவூல செயலர் டிமோதி கீத்னர் 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 29 தேதி சாட்சியமளித்தார். அவரது சாட்சியம் சீர்திருத்தத்திற்கு முக்கியமானவை என ஐந்து கூறுகளை அவர் குறிப்பிட்டார்: 1) FDICவங்கி தீர்மானத்தின் செயற்கூறுகளைவங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கும்நீட்டிப்பது; 2) ஒரு நிறுவனமானது ஒழுங்கு வரிசையில் சிதைவடைய அனுமதிக்கப்பட வேண்டும் "காப்பாற்றப்படக்" கூடாது; 3) நஷ்டம் ஏற்படின் வரி செலுத்துவோர் மீது சுமையேற்றக் கூடாது, நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மீது செலுத்தியும் பெரிய நிதி நிறுவனங்களின் மூலமாக பணக் குளம் ஒன்றையும் உருவாக்க வேண்டும்; 4) FDIC மற்றும் மைய வங்கிகளின் மீது பொருத்தமான ஆய்வுகளையும் சமநிலைகளையும் இத் தீர்மான காலத்தில் செலுத்த வேண்டும்; 5) நிதி நிறுவனங்களுக்கும் சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு ஆணையங்களுக்கும் வலுவான மூலதன மற்றும் பண நிலைமைகளை கையாளுதலில் தேவைப்படும்.

பிற எதிர்வினைகள்

குறிப்பிடத்தக்க சட்ட அமலாக்க நடவடிக்கை மற்றும் வழக்குகள் இச்சிக்கலுக்குப் பிறகு ஏற்பட்ட எதிர்வினைகளாகும். அமெரிக்க புலனாய்வுத் துறை அடமான நிதி நிறுவனங்களான ஃபென்னி மே, ப்ரெட்டி மாக் மற்றும் லெக்மான் பிரதர்ஸ் மற்றும் அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் ஆகியவற்றின் மோசடி சாத்தியங்களைக் காண முயன்றது. நியூயார்க் அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரூ கூமோ லாங்க் அய்லாண்ட்டை தலைமையிடமாகக் கொண்ட அமெரிமோட் நாட்டின் பெரிய கடன் மறு சீரமைப்பு நிறுவனம் மீதும், இதே போன்ற பிற நிறுவனங்கள் மீதும் 14 சம்மன்களை அனுப்பியும் வழக்கிட்டது. அமெரிக்க புலானாய்வுத் துறை அடமானங்கள் தொடர்பான குற்றங்களுக்காக மேலும் பல முகவர்களை அனுமதித்தது அதனால் வழக்குச் சுமை கடுமையாக உயர்ந்தது. கண்டிரிவைட் நிறுவனத்தின் மீது அமெரிக்க புலனாய்வுத் துறை மார்ச் 2008 இல் ஒரு விசாரணையை பங்கு மற்றும் கடன் வழங்கும் மோசடிகளின் சாத்தியங்களைப் பற்றி துவங்கியது.

2007 ஆம் ஆண்டில் இரண்டாம் நிலை அடமானம் தொடர்பான 250 க்கும் மேற்பட்ட உரிமையியல் வழக்குகள் மைய நீதி மன்றங்களில் பதிவானது. மாகாண நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் கணக்கிடப்படவில்லை ஆயினும் கணிசமானவை என்று நம்பப்படுகின்றது.

உணர்த்தல்கள்

பாதிப்புகளின் மதிப்பீடுகள் தொடர்ந்து அதிகரித்தன. 2008 ஆம் ஆண்டு ஏப்ரலில், சர்வதேசய நாணய நிதியம் (IMF) உலக அளவில் நிதி நிறுவங்களின் மதிப்பிடப்பட்ட இழப்புகள் $1 டிரில்லியன்களாக இருக்கலாம் என மதிப்பிட்டது. ஓராண்டு கழித்து, IMF வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் கூட்டு இழப்புகள் உலகளவில் $4 டிரில்லியன்களை கடந்திருக்கும். இது அமெரிக்காவின் தலா 200,000,000 மக்களுக்கு $20,000 க்குச் சமமாகும்.

பிரான்சிஸ் பூகுயாமா வாதிட்டது என்னவென்றால் இச்சிக்கல் நிதித் துறையில் ரீகனிசத்தின் முடிவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது,இது லேசான கட்டுப்பாடுகள், குறைக்கப்பட்ட அரசு ஆதரவு மற்றும் குறைவான வரிகள் ஆகியவற்றை குணாம்சங்களாக கொண்டது. குறிப்பிடத்தக்க நிதித் துறை கட்டுப்பாட்டு மாற்றங்கள் இச்சிக்கலின் விளைவாக எதிர்பார்க்கப்பட்டன.

பரீத் சகாரியா இச்சிக்கல் அமெரிக்கர்களையும் அவர்களது அரசையும் அவர்களது வருமான வரம்பிற்குள் வாழ நிர்ப்பந்திக்கும் என நம்புகிறார். மேலும், ஒரு சில சிறந்த அறிவுடையோர் நிதித் துறையில் இயங்குவதிலிருந்து வேறிடம் பெயர்ந்து மேன்மையான மதிப்புகள் கொண்ட வணிக நடவடிக்கைகளை, அல்லது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணிகளுக்கோ போகலாம்.

ரோஜர் ஆல்ட்மான் எழுதினார் "அமெரிக்க நிதியமைப்பின் மீது 2008 ஆம் ஆண்டின் சிதறல் ஆழமான இழப்புகளை பதித்தது, அதன் பொருளாதாரம், உலகின் அதன் நிலை; சிக்கல் ஒரு முக்கிய புவி அரசியல் பின்னடைவு...சிக்கல் வரலாற்று சக்திகளால் அமெரிக்காவிலிருந்து ஏற்கனவே நகர்த்தப்பட்டு வரும் உலகின் கவனத்துடன் இணை நிகழ்வாகவுள்ளது. இடைக்காலத்தைத் தாண்டி, அமெரிக்கா சிறியதொரு உலகத் தளத்திலிருந்து செயல்பட வேண்டியிருக்கும்- பிறர், குறிப்பாக சீனா, வேகமாக எழும் வாய்ப்புக் கொண்டுள்ளது.

GE தலைமை நிர்வாக அதிகாரி ஜெப்ரி இம்மெல்ட் அமெரிக்காவின் அயல் வர்த்தக பற்றாக்குறை மற்றும் நிதிநிலை பற்றாக்குறை ஆகியவை நீடித்திருக்கக்கூடியவை அல்ல என வாதிட்டார். அமெரிக்கா தனது போட்டியிடும் திறனை புதிய கண்டுபிடிப்புகள் மூலமும், உழைப்பாளர்களை பயிற்சி கொடுப்பதன் மூலமும் மற்றும் வணிக தலைமை மூலமும் மீண்டும் பெற வேண்டும். அவர் வாதிடுவது எரிசக்தித் துறை பாதுகாப்பு அல்லது சுதந்திரம், குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள், உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்பின் விரிவு, உபரி ஏற்றுமதியாளர் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்ட தேசிய இலக்குகளாகக் தொடர்புபடுத்திக் கொள்வதையே."உலகம் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தை வெல்ல நாம் கடும் அமெரிக்க மறு மீட்பை வழிநடத்த வேண்டும்." மிகவும் அவசியமான முக்கியத்துவத்தில், அவர் கூறினார், தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறையிலும் கவனம் செலுத்த வேண்டும். "பலருக்கு தோன்றிய கருத்தானது, அமெரிக்கா தொழில்நுட்பம் சார்ந்த, ஏற்றுமதி - அடிப்படை வலுச்சக்தியாகவிருந்து சேவை வழிநடத்தும், நுகர்வு அடிப்படையான பொருளாதாரமாக-மேலும் எப்படியோ இன்னும் வளம் பெறுமென எதிபார்க்கின்றனர்," என ஜெப் கூறுகிறார். "அந்தக் கருத்து மிகவும் தவறானது."

பொருளாதார நிபுணர் பால் க்ரூக்மான் 2009 ஆம் ஆண்டில் எழுதினார்: "சில வருடங்களுக்கு முன்னாலான சுபிட்சம் -இலாபங்கள் மிகையாக, கூலிகள் மிக அதிகமாக இல்லை - வீட்டுத் துறையில் பெரியக் குமிழியைச் சார்ந்திருந்தது, முன்பிருந்த பங்குகளிலிருந்த குமிழிகளை மாற்றியமைத்தது. வீட்டுக் குமிழி மீண்டும் வராததால், சிக்கலுக்கு முன்பிருந்த ஆண்டுகளில் பொருளாதாரத்தை நிலை நிறுத்திய செய்யப்பட்ட செலவும் திரும்ப வரவில்லை." நியால் பெர்கூசன் கூறியது வீட்டு பங்கு உறுஞ்சுதல் விளைவைத் தவிர்த்துப் பார்த்தால், அமெரிக்க பொருளாதாரம் புஷ் வருடங்களில் 1% விகிதத்தில் வளர்ந்துள்ளது. Microsoft தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் வாதிட்டார். கீழ் நிலையில் நடைபெறும் பொருளாதார மறு உருவாக்கம், சரிவை விட மேலானது, அதாவது வீழ்ச்சிக்கு முந்தைய நிலைகளின் விரைவான மீட்சிகளை எதிர்பார்க்க முடியாது.

அமெரிக்க மைய அரசின் உலக நிதியமைப்பிற்கான உதவும் முயற்சியின் விளைவாக 2008 ஆம் ஆண்டு நவம்பரில் மொத்தமாக $7 டிரில்லியன் மதிப்புள்ள குறிப்பிடப்பட்ட புதிய நிதி பொறுப்புகள் செயல்படுத்தப்பட்டன. இந்தப் பொறுப்புகள், கடன்கள், கடன் உத்தரவாதங்கள், நேரடியான செலவுகளாக கருதப்படுவதை விட முதலீடுகளாக குணாம்சப்படுத்தப்பட்டுள்ளவை. பல சந்தர்ப்பங்களில் உறைந்த சந்தையில் பண விநியோகத்தை அதிகரிக்க, வணிகத் தாள்கள், அடமான அடிப்படையிலான கடனீடுகள் போன்ற நிதி சொத்துகள் அல்லது பிற வகையான சொத்து அடிப்படையிலான தாள்களை அரசு வாங்கியது. சிக்கல் வளர்ந்து வந்தபோது, மைய வங்கி அது கடன் அளிக்க விரும்புகிற மிகைச் சிக்கல் சொத்துக்களையும் உள்ளடக்கியவற்றுக்கு இணை உத்தரவாதத்தை நீடித்தது.

தி இகானமிஸ்ட் எழுதியது: "அவர்களது வங்கிகளை மீட்டுதவி செய்ய பெருஞ்செல்வத்தை செலவழித்துள்ள, மேலை அரசுகள் அக் கடன்களின் மீதான வட்டியை சந்திக்க அதிக வரிகள் வடிவத்தில் ஒரு விலையைக் கொடுக்க வேண்டும். வர்த்தகம் மற்றும் நிதிப் பற்றாக்குறையை உடைய (பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற) நாடுகளில், அத்தகைய உயர் வரிகள் அயல் நாட்டு கடன்தாரர்களின் கோரிக்கைகளை சந்திக்கத் தேவை. அத்தகைய சிக்கன முறை தொடர்பான அரசியல் செயல்படுத்தல்கள் அமலாக்கப்பட்ட நிலையில், மறைத்து வைப்பது மற்றும் நாணயங்களின் மதிப்பைக் குறைப்பதன் மூலம் கடன் திருப்பத் தவறத்தோன்றும் உந்தலாகவே இருக்கும். முதலீட்டாளர்கள் அதிகரித்து வரும் இந்த அபாயத்தை அறிந்துள்ளனர்..."

இச்சிக்கல் ஆலன் கிரீன்ஸ்பான் என்கிற அமெரிக்க மைய வங்கித் தலைவரின் 1986 முதல் ஜனவரி 2006 வரையிலான மரபின் மீது சந்தேகம் படிய வைத்துள்ளது. செனட் உறுப்பினர் கிறிஸ் டாட், கிரீன்ஸ்பான் " நிறைவான புயலொன்றை" உண்டாக்கியிருப்பதாக விவரித்தார். இச்சிக்கலைப் பற்றி கருத்துரையளிக்கும் படி கேட்ட போது, கிரீன்ஸ்பான் கீழ்க் கண்டவாறு பேசினார்:

The current credit crisis will come to an end when the overhang of inventories of newly built homes is largely liquidated, and home price deflation comes to an end. That will stabilize the now-uncertain value of the home equity that acts as a buffer for all home mortgages, but most importantly for those held as collateral for residential mortgage-backed securities. Very large losses will, no doubt, be taken as a consequence of the crisis. But after a period of protracted adjustment, the U.S. economy, and the world economy more generally, will be able to get back to business.

மேற் குறிப்புகள்

கூடுதல் வாசிப்பு

புற இணைப்புகள்

இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mortgage crisis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


}

Tags:

இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் பின்னணியும் நிகழ்வின் காலக்கோடும்இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் காரணங்கள்இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் பாதிப்புகள்இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் எதிர்வினைகள்இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் கட்டுப்பாடு தொடர்பான பரிந்துரைகளும் நீண்டக் கால தீர்வுகளும்இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் உணர்த்தல்கள்இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் மேற் குறிப்புகள்இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் கூடுதல் வாசிப்புஇரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் புற இணைப்புகள்இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பால்வினை நோய்கள்போயர்கன்னியாகுமரி மாவட்டம்சூல்பை நீர்க்கட்டிபிரேசில்பண்பாடுஇரசினிகாந்துஅப்துல் ரகுமான்ஆடு ஜீவிதம்விளையாட்டுராதாரவிகொல்கொதாவேலூர் மக்களவைத் தொகுதிஇந்திய தேசிய காங்கிரசுவ. உ. சிதம்பரம்பிள்ளைமருதமலைமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்இயேசு காவியம்டார்வினியவாதம்பொதுவாக எம்மனசு தங்கம்நீர் விலக்கு விளைவுயானைபெங்களூர்மாதேசுவரன் மலைசிலுவைப் பாதைபால் கனகராஜ்கோயம்புத்தூர் மாவட்டம்சட் யிபிடிதெலுங்கு மொழிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிநற்கருணைஅகநானூறுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சுற்றுலாவரைகதைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)மேழம் (இராசி)மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்சவூதி அரேபியாதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்ஜெயகாந்தன்ஐ (திரைப்படம்)இந்தோனேசியாஹதீஸ்இயேசு பேசிய மொழிமூவேந்தர்எஸ். ஜெகத்ரட்சகன்தமிழச்சி தங்கப்பாண்டியன்காப்பியம்ம. பொ. சிவஞானம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்மீன்திருத்தணி முருகன் கோயில்சிதம்பரம் நடராசர் கோயில்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்எம். ஆர். ராதாநம்ம வீட்டு பிள்ளைஇலவங்கப்பட்டைஇந்தியக் குடியரசுத் தலைவர்நீரிழிவு நோய்புலிமயங்கொலிச் சொற்கள்இராமர்தமிழ் எண்கள்இயேசுமாலைத்தீவுகள்சாகித்திய அகாதமி விருதுஅறுசுவைஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)திருநெல்வேலிவேலுப்பிள்ளை பிரபாகரன்திருப்பூர் மக்களவைத் தொகுதிஇயேசுவின் உயிர்த்தெழுதல்மரகத நாணயம் (திரைப்படம்)கனிமொழி கருணாநிதிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கை🡆 More