அகிம்சை, அல்லது அஹிம்சை (ⓘ) (சமக்கிருதம்: अहिंसा, ஆங்கிலம்: Ahimsa, பாளி: ‘காயப்படுத்தாமை' அல்லது ‘இரக்க உணர்வு' என்று பொருள்படும்) இந்திய சமயங்களில் ஒரு முக்கிய ஒழுக்கத்தைக் குறிக்கிறது.
“ஹிம்சை” என்பது ‘காயம்’ அல்லது ‘தீங்கு’ ஆகும். ‘அஹிம்சை’ இதற்கு எதிா்மாறான பொருள் கொண்டது. அதாவது "காயம் ஏற்படுத்தாதீா்கள்", “தீங்கு செய்யாதீா்கள்” என்பது பொருள். அகிம்சை என்பது அறப் போராட்டத்தையும் குறிக்கும். அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும் என்று இந்திய மதங்கள் குறிப்பிடுகின்றன.
சைனம், இந்து சமயம், பௌத்தம் ஆகியவற்றில் ‘அகிம்சை’ என்பது ஒரு முக்கிய அம்சமாகும். அகிம்சை என்பது பல பரிமாணக் கருத்துகளைக் கொண்டது. பிறரின் காயத்தைத் தடுக்க, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல் என்றும் பொருள்படும். இந்து மதத்தின் பண்டைய அறிஞா்கள், அகிம்சைக் கொள்கைகளில் முன்னோடியாக இருந்தனா். காலப்போக்கில் அகிம்சை கொள்கைகளை பூா்த்தி செய்தனா். அகிம்சை, ஜைனத்தின் நெறிமுறை தத்துவத்தில் ஒரு அசாதாரண நிலையை அடைந்துள்ளது. பொ.ஊ.மு. முதலாம் நூற்றாண்டுக்கும் பொ.ஊ. 5-ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்த தமிழ்ப் புலவரான வள்ளுவர் அகிம்சை மற்றும் புலால் மறுத்தலை தனிநபர் நற்பண்புகளாக வலியுறுத்தி அவற்றை தனது நூலின் மைய போதனைகளாக அமைத்தார். மிகப் பிரபலமாக, மகாத்மா காந்தி அகிம்சை கொள்கையில் உறுதியாக இருந்தாா். ‘காயப்படுத்தாமை‘ என்பது ஒருவரின் சொல், செயல், வாா்த்தை மற்றும் எண்ணம் இவை அனைத்தையும் உள்ளடக்கியது.
This article uses material from the Wikipedia தமிழ் article அகிம்சை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.