பௌண்டர நாடு (Pundra kingdom), பரத கண்டத்தின் கிழக்கில் தற்கால மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசம் ஆகியவற்றின் பகுதிகளைக் பகுதிகளைக் கொண்டிருந்தது.
பௌண்டர நாடு | |
---|---|
கிமு 1280–கிமு 300 | |
தலைநகரம் | மகாஸ்தான்கர் |
பேசப்படும் மொழிகள் | சமசுகிருதம் பாளி மொழி |
சமயம் | வேத சமயம் இந்து சமயம் |
அரசாங்கம் | முடியாட்சி |
வரலாற்று சகாப்தம் | இரும்புக் காலம் |
• தொடக்கம் | கிமு 1280 |
• முடிவு | கிமு 300 |
தற்போதைய பகுதிகள் | வங்காளதேசம் ( தினஜ்பூர் மாவட்டம்) இந்தியா (உத்தர தினஜ்பூர் மாவட்டம் & தெற்கு தினஜ்பூர் மாவட்டம், (மேற்கு வங்காளம்) |
ஜராசந்தனின் கூட்டாளியான பௌண்டர நாட்டு மன்னர், கிருஷ்ணரைப் போன்று வேடம் தரித்து, தானே உண்மையான பௌண்டர வாசுதேவன் எனக் கூறிக்கொண்டான். பின்னர் இம்மன்னர் ஒரு போரில் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான்.
மகத நாட்டின் கௌதம தீர்க்கதமஸ் எனும் முனிவரின் மகனான பாலியின் வழித்தோன்றல்களே பௌண்டர நாடு, அங்க நாடு, வங்க நாடு, கலிங்க நாடு மற்றும் சுக்மா நாடுகளின் மன்னர்கள் ஆவார்.
தருமரின் இராசசூய வேள்வியின் போது, பௌண்டர நாட்டு மன்னர் வங்க நாடு மற்றும் கலிங்க நாட்டு மன்னர்களுடன் காணப்பட்டார் எனச் சபா பருவம், அத்தியாயம் 33-இல் குறித்துள்ளது.
குருச்சேத்திரப் போரில் பௌண்டர நாட்டுப் படைகள் கௌரவர் அணியில் சேர்ந்து, பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டனர். (மகாபாரதம் 7:20) ஆயிரக்கணக்கான பௌரண்ட நாட்டுப் படைகள் அருச்சுனனை எதிர்த்துப் போரிட்டது.
This article uses material from the Wikipedia தமிழ் article பௌண்டர நாடு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.