சிந்தியா (Scindia/[[Shinde) மராத்திய அரச குலங்களில் ஒன்றாகும்.
மராத்திய அரச குலங்கள் சிந்தியா அல்லது சிண்டே – (शिंदे) | |
குலப் பெயர் | சிந்தியா அல்லது சிண்டே |
Caste | 96k Maratha |
வம்சம் | நாகர் வம்சத்தின் கிளை |
Heraldic Title: | பிரபாகர வர்மா |
சமயம்: | இந்து |
Original kingdom | ரந்தம்பூர் |
பிற இராச்சியங்கள் | குவாலியர், உஜ்ஜைன், |
தலைநகரங்கள் | சாத்தாரா |
நிறம் | சிவப்பு |
சின்னம் | பாம்புக் கொடி |
குல தெய்வம் | மகாதேவர் |
குல தேவதை | துளஜா பவானி |
குரு | கௌண்டின்யர். |
கோத்திரம் | கௌண்டின்ய கோத்திரம் |
வேதம் | ரிக் வேதம் |
மந்திரம் | காயத்திரி மந்திரம் |
பிரவார் | ஆங்கீரசர், பிரகஸ்பதி மற்றும் கௌண்டின்யர் |
வெற்றிக்கான ஆயுதம் | வாள் |
குஹ்யசூத்திரம் | பராஸ்கா |
வாழ்விடங்கள் | மகாராட்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் இராஜஸ்தான் |
மொழிகள் | மராத்தி, குஜராத்தி, இந்தி மற்றும் சமஸ்கிருதம் |
மராத்திய சிந்திய வம்சத்தவர்கள், மராத்திய கூட்டமைப்பு பகுதிகளில் ஒன்றான குவாலியர், மால்வா மற்றும் உஜ்ஜைன் பகுதிகளைக் கொண்ட குவாலியர் அரசை 1731 முதல் 1948 முடிய ஆண்டனர்.
1817 – 1818ல் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாம் ஆங்கிலேய-மராட்டியப் போரில், குவாலியர் படைகளுடன், போன்சலே, ஓல்கர் மற்றும் கெயிக்வாட் வம்ச மன்னர்களின் படைகளும் கலந்து கொண்டனர். இப்படைகள் கிழக்கிந்தியக் கம்பெனி படைகளிடம் தோற்றது. பின்னர் ஆங்கிலேயர்கள் வகுத்த துணைப்படைத் திட்டத்தை சிந்தியா வம்சத்தவர்கள் ஏற்றுக் கொண்டு, 1818 முதல் சுதேச சமஸ்தான மன்னர்களாக தங்கள் நாட்டை ஆண்டனர். பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948ல் இந்தியாவுடன் சிந்தியா வம்சத்தின் குவாலியர் அரசு இணைக்கப்பட்டது.
சிந்தியா வம்சத்தை நிறுவியவர் மராத்தியப் பேரரசின் படைத்தலைவர் ரானோஜி சிந்தியா ஆவார். மராத்தியப் பேரரசை விரிவாக்கம் செய்வதற்கு பேஷ்வா பாஜிராவின் ஆனையின் படி, 1726ல் மால்வாவைக் கைப்பற்றி உஜ்ஜைன் நகரத்தை 1731ல் தலைநகராகக் கொண்டு குவாலியர் அரசை நிறுவினார். மூன்று ஆங்கிலேய-மராட்டியப் போர்களை சந்தித்த, சிந்தியா வம்சத்தவர்கள், மேற்கிந்தியா, வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் இராஜபுத்திர மன்னர்களை வென்று மராத்தியப் பேரரசை விரிவாக்கியவர்கள்
1818ல் நடைபெற்ற மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில், கிழக்கிந்திய கம்பெனியிடம் தோல்வி கண்ட சிந்தியா வம்ச மன்னர் தௌலத்ராவ் சிந்தியா, அஜ்மீரை ஆங்கிலேயருக்கு வழங்கி, கம்பெனி ஆட்சியிடம் அடங்கி நடக்கும் சுதேச சமஸ்தான மன்னராக குவாலியர் அரசை ஆண்டார். 1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர் சிந்தியா வம்சத்தினர் ஆண்ட குவாலியர் அரசு, 1948ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
மராத்திய சிந்தியா குல குவாலியர் இராச்சிய மன்னர்கள் தங்களை மகாராஜாக்கள் என அழைத்துக் கொண்டனர்.
This article uses material from the Wikipedia தமிழ் article சிந்தியா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.