2022 அபுதாபி தாக்குதல் (2022 Abu Dhabi attack) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள வானூர்தி நிலையத்தில் திடீரென வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதைக் குறிக்கிறது.
2022 ஆம் ஆண்டு 17 ஆம் தேதியன்று புதிதாகக் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த வானூர்தி நிலையப் பகுதியில் ஆளில்லா வானூர்தி மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 3 எரிபொருள் கலன்கள் சேதமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
2022 அபுதாபி தாக்குதல் 2022 Abu Dhabi attack | |
---|---|
ஏமனில் ஔதியாளர்கள் கிளர்ச்சியின் ஒரு பகுதி | |
இடம் | அபுதாபி (நகரம்), ஐக்கிய அரபு அமீரகம் |
நாள் | 17 சனவரி 2022 14:29 – 14:50 (UTC+4:00) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | எண்ணெய் எரிபொருள் நிரப்பும் சரக்கு வண்டிகள் மற்றும் விமானநிலைய உட்கட்டமைப்பு |
தாக்குதல் வகை | ஆளில்லா விமானம் Motive: தெரியவில்லை |
இறப்பு(கள்) | 3 |
காயமடைந்தோர் | 6 |
தாக்கியோர் | ஔதி கிளர்ச்சியாளர்கள் |
அன்சர் அல்லா என்றழைக்கப்படும் ஔதி இசுலாமிய கிளர்ச்சியாளர்கள் அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றதாக அறியப்பட்டது. முசாஃபாவில் உள்ள மூன்றாவது தொழிற்சாலை நகரத்தில் உள்ள அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் எரிபொருள் நிரப்பும் சரக்கு வண்டிகள், சேமிப்பு வசதிகள் மற்றும் விமானநிலைய உட்கட்டமைப்பு போன்றவற்றுக்கு எதிராக இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் குறித்து வெளியான தகவலின்படி 2 இந்தியர்கள் மற்றும் பாக்கித்தானைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
This article uses material from the Wikipedia தமிழ் article 2022 அபுதாபி தாக்குதல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.