கர்ணன் (ⓘ 1938 - சூலை 20, 2020) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார்.
இவர் சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். மதுரையில் வசித்து வந்த இவர் எழுதிய "அவர்கள் எங்கே போனார்கள்?" எனும் நூல் தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிற சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
கர்ணன் | |
---|---|
பிறப்பு | 1938 செல்லூர், மதுரை மாவட்டம் |
இறப்பு | சூலை 20, 2020 (அகவை 81–82) மதுரை |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
பெற்றோர் | பரஞ்சோதி, செல்லம்மாள் |
வாழ்க்கைத் துணை | ரஞ்சிதம் |
கர்ணன் 1938 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் என்னும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கர்ணன் பரஞ்சோதி, செல்லம்மாள் தம்பதியினரின் புதல்வர். இவர், தொழில் ரீதியாக தையற்கலைஞர் ஆவார். கர்ணன் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டுக் கால் ஊனமானவர்.
கர்ணன் 2020 சூலை 20 அன்று மதுரையில் காலமானார். இவரது மனைவி ரஞ்சிதம் 2012 இல் காலமானார். போலியோவால் பாதிக்கப்பட்டுக் கால் ஊனமான கர்ணன் மதுரை அருகே செல்லூரில் ஒரு வாடகை வீட்டில் வசித்துவந்தார். தமிழக அரசு இவருக்கு மாதம் மூவாயிரன் ரூபாய் உதவித்தொகை வழங்கி வந்தது. அவருடன் அவரது இரண்டு வாய்பேச முடியாத சகோதரிகள் வசித்தார்கள்.
This article uses material from the Wikipedia தமிழ் article கர்ணன் (எழுத்தாளர்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.