ஏரெழுபது என்பது, வேளாண் தொழிலின் சிறப்புப் பற்றிக் கம்பர் எழுதிய நூலாகும்.
உழுகருவி, வேளாண்மையில் எருதுகளின் பயன்பாடு, வேளாண்மைச் செயற்பாடுகள், சோழ மண்ணின் சிறப்பு, வேளாளர்கள் சிறப்பு என்று பல்வேறு வகையான செய்திகளை இந்த நூல் கூறுகிறது.
இந்நூல் வேளாண்மையின் அறுபத்தி ஒன்பது சிறப்புகள் பற்றிக் கூறுகிறது.
ஏர் எழுபது என்ற நூல் கம்பரால் எழுதப்பட்டது ஆகும். இதில் ஏர்த்தொழில் பற்றி 70 செய்யுட்கள் உள்ளது. இந்நூலுக்கு முன் `ஏர்த்தொழில்’ பற்றிய நூல் இல்லை. எனவே `ஏர்த்தொழில்’ குறித்து எழுந்த முதல் நூல் `ஏர் எழுபது’ ஆகும். இந்நூல் சடையப்ப வள்ளலின் முன்னிலையில் 12-ஆம் நூற்றாண்டில் கம்பரால் அரங்கேற்றப்பட்டது. உழவுத் தொழிலின் மேன்மை உழவர் பண்பாடு, உழவரின் சிறப்பு, உழவியல் முறைகள், உழவியல் குறிப்புகள், சமுதாய நிலை, கருவிகள் முதலியவற்றை விளக்கிக் கூறுவதால், இந்நூல் `பயன் இலக்கியத்தைச் சார்ந்தது ஆகும்.
செங்கோலை நடத்தும் கோல் ஏரடிக்கும் சிறுகோலே; ஏர் நடக்குமெனில் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்; உலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே; மன்னன், மக்கள், கலை, பண்பாடு போன்றவை உழவுத்தொழிலைச் சார்ந்துள்ளது; ஏரில்லையெனில் போரில்லை; உழவரின் நாற்றுமுடியே மன்னரின் மணிமுடி; போரில் வெற்றி தோல்விகள் உண்டு, உழவரின் களத்தில் தோல்வி என்பதே கிடையாது; சிவனது கழுத்து கறையினும், எருத்தின் கழுத்துத் தழும்பே பெருஞ்சிறப்புடையது; ஞாயிறு, திங்களின் கதிர்கள் உயிர்களை வளர்ப்பதில்லை ஆனால் நெற்கதிர்களோ உயிரை வளர்க்கிறது; உணவால் பசி ஒழிந்தால் மொழி, அறிவு வளரும்; நாடு சிறப்பெய்தும் போன்ற கருத்துகள் `ஏர் எழுபதில்’ உள்ளன.
This article uses material from the Wikipedia தமிழ் article ஏர் எழுபது, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.