எடுவர்டு பூக்னர் (Eduard Buchner, மே 20, 1860 – ஆகஸ்ட் 13, 1917) ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியல் அறிஞரும் நொதியியல் (zymologist) அறிஞரும் ஆவார்.
இவர் நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே நொதிக்கச் செய்யும் முறையைக் கண்டதற்காக, 1907 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
எடுவர்டு பூக்னர் Eduard Buchner | |
---|---|
பிறப்பு | 20 மே 1860 மியூனிக் |
இறப்பு | 13 ஆகத்து 1917 (அகவை 57) போக்சனி |
படிப்பு | பேராசிரியர் |
படித்த இடங்கள் |
|
பணி | பல்கலைக்கழகப் பேராசிரியர் |
வேலை வழங்குபவர் |
|
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு |
எடுவர்டு பூக்னர் ஜெர்மனியில் மியூனிக் நகரில் பிறந்தார். இவருடைய தந்தையார் மருத்துவராகவும் குற்றவியலில் துப்பு கண்டுபிடிக்கும் மருத்துவராகவும் இருந்தார். எடுவர்டு பூக்னர் அவர்கள் 1884ல் மியூனிக் நகரில் அடால்ஃப் வான் பேயரிடம் (Adolf von Baeyer ) வேதியியலும் பேராசிரியர் சி. வான் நேகெலி (C. von Naegeli) அவர்களிடம் தாவரவியலும் பயிலத் தொடங்கினார். இவர் 1888ல் பெர்லின் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
This article uses material from the Wikipedia தமிழ் article எடுவர்டு பூக்னர், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.