சர்வபள்ளி கோபால் (தெலுங்கு: సర్వేపల్లి గోపాల్) (23 ஏப்ரல் 1923 – 20 ஏப்ரல் 2002) ஒரு இந்திய வரலாற்று ஆய்வாளராவார்.
இவர் தெலுங்கு நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாக கொண்டவர். இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகனாவார்.
இவர் தன்னுடைய பட்டப்படிப்பை சென்னை பிரசிடன்சி கல்லூரியிலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய தத்துவ பட்டத்தினை பெற்றார். (D.Phil)
இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இயக்குநாராகவும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் இணைந்து பணியாற்றினார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் செயின்ட் அந்தோனி கல்லூரியின் இந்திய வரலாற்றுப் பிரிவின் வாசகராக இருந்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது உருவாக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை தலைவராக நியமிக்கப்பட்டார்.
இவர் புது தில்லியில் இயங்கும் தேசிய புத்தக அறக்கட்டளையின் தலைவராக 1970-களில் பதவி வகித்தார்.
சர்வபள்ளி கோபால் காவேரி என்கிற இந்திரா ராமசுவாமியை 1949-ம் ஆண்டு மணந்தார்.
1999-ம் ஆண்டு இவர் இந்திய வரலாற்றிற்கு அளித்த பங்களிப்பிற்காக பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது.
This article uses material from the Wikipedia தமிழ் article சர்வபள்ளி கோபால், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.