2002 ஆம் ஆண்டு நேர்வே அரசின் அணுசரையுடன் விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை அரசுக்கும் ஒரு போர் நிறுத்த உடன்படிக்கை செய்யப்பட்டது.
அப்போது ஈழப்பிரச்சினை ஒரு தீர்வை நோக்கி வரும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 2008 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சித் தலைமையில் அமைந்த இலங்கை அரசு அந்த உடன்படிக்கையில் இருந்து உத்யோகபூர்வமாக விலகிக் கொண்டது. இதைத் தொடர்ந்டு உக்கிரமடைந்த் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மே 19, 2009 கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து 300 000 வரையான தமிழ் மக்கள் வன்னி தடுப்பு முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.
2008 ஆண்டு தமிழ்நாட்டின் 100% மாணவர்கள் ஆரம்ப கல்வி பெறும் வசதி பெற்றனர், இருப்பினும் படிப்பறிவு ~74 மட்டுமே இருந்தது.
2000 களின் தொடக்கத்தில் தமிழ் திரையிசையில் ஏ. ஆர். ரகுமான் முன்னிலையில் இருந்தார். தமிழ் ராப் இசை வடிவம் கண்டது.
சதுரங்கத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஆனந் உலக வெற்றிவீரர் ஆனார். .
இளவழகி, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த உலக கேரம் விளையாட்டு வீரர் ஆவார். பெப்ரவரி 17, 2008ல் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஐந்தாவது உலக கேரம் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.
நகைச்சுவைத் நிகழ்ச்சிகள் அறிமுகமாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றன. கலக்கப் போவது யாரு, அசத்தப்போவது யாரு ஆகியவை பல தமிழ் stand up நகைச்சுவையாளர்களை அறிமுகப்படுத்தின.
This article uses material from the Wikipedia தமிழ் article 2000கள் தமிழர் பார்வையில், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.