2000கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலப்பகுதி 2000ஆம் ஆண்டு ஆரம்பித்து 2009-இல் முடிவடையும்.
இக்காலப்பகுதி பொதுவாக பல்வேறு தரப்பட்ட தாக்கங்களைக் கொண்டிருந்தது. பொருளாதாரத்தில் ஆசிய நாடுகளின் வளர்ச்சி, முக்கியமாக சீனா, மற்றும் இந்தியாவின் மாபெரும் பொருளாதார வளர்ச்சி உலக வர்த்தகத்தில் தாக்கத்தை உண்டுபண்ணியது.
அரசியலில் முக்கியமாக இக்காலப்பகுதியில் பயங்கரவாதத்திற்கெதிரான போர் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 11, 2001 தாக்குதல் பின்னர் ஈராக் போருக்கு வழிகோலியது.
ஜனவரி 15: முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசேனின் உறவினர் பர்சான் இப்ராகிம், முன்னாள் ஈராக்கிய பிரதம நீதிபதி அவாட் ஹமெட் ஆகியோர் 1982 ஆம் ஆண்டில் 148 ஷியைட் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் உடந்தையாக இருந்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.
ஜனவரி 6: இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.
ஜனவரி 5: இலங்கை, கொழும்பிலிருந்து 36கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
ஜனவரி 2: இலங்கை, மன்னார் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 40 பேர் படுகாயமும் அடைந்தனர்.
மார்ச் 1 - இலங்கை விமானப் படையின் பிரி-06 ரக பயிற்சி விமானம் அநுராதபுரம் அருகில் வீழ்ந்து நொருங்கியதில் அதன் பயிற்சியாளரும் பயிற்சி பெற்ற விமானியும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 7 - தமிழ்நாட்டில் செந்தூரில் நெடுஞ்சாலை அமைப்புக்கென கொண்டுசெல்லப்பட்ட வெடிபொருட்கள் அடங்கிய வாகனம் ஒன்று வெடித்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 12 - இந்தியா அக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
ஏப்ரல் 16 - ஐக்கிய அமெரிக்காவின்வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் இனந்தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 33 பேர் படுகொலை செய்யப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.
மே 2007
மே 1 - மெல்பேர்னில்விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவரை அவ்வமைப்புக்கு நிதி சேகரித்து அனுப்பியமைக்குக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டனர்.
சூன் 11 - வங்காள தேசத்தில் கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் 118 பேர் கொல்லப்பட்டனர்.
சூன் 11 - தெற்குசீனாவில் வெள்ளம் காரணமாக 66 பேர் பலியாயினர். 600,000 பேர் வீடுகளை இழந்தனர்.
சூன் 14 - காசாப் பகுதி தமது முழுக்கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்தது. பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அமைச்சரவையைக் கலைத்து நாட்டில் அவசரகாலநிலையை அமுல் படுத்தினார்.
சூலை 11 - பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள செம்மசூதிக்குள் இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றும் முகமாக இராணுவத்தினர் மசூதியின் மீது தாக்குதல் நடத்தியதில் மசூதியின் மதகுரு அப்துல் காஸி உட்பட குறைந்தது 50 பேர் பலியாகினர்.
சூலை 17 - பிறேசிலில்சாவோ பவுலோ என்ற இடத்தில் பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்த 176 பேர் உட்பட 200 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
ஆகத்து 4 - நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய்க்கோளில் அடுத்த ஆண்டில் தரையிறக்கி ஆய்வுகள் மேற்கொள்ளவென பீனிக்ஸ் என்னும் கலத்தை விண்ணுக்கு ஏவியது.
ஆகத்து 4 - இந்தியா, வங்காள தேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் பெரும் வெள்ளப் பெருக்கால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
ஆகத்து 15 - பெருவின் தலைநகர் லீமாவில் இருந்து 300 கிமீ தொலவில் 8.0 ரிக்டர் அளவுநிலநடுக்கம் ஏற்பட்டதில் பலத்த சேதம் ஏற்பட்டது. குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
ஆகத்து 25 - இந்தியா, ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
செப்டம்பர் 26 - வியட்நாமில் பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 60 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
அக்டோபர் 18 - கராச்சி நகரில் எட்டு ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை ஏற்றிச் சென்ற பார ஊர்தி அருகே இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 138 பேர் கொல்லப்பட்டு 600 பேர் படுகாயமடைந்தனர்.
அக்டோபர் 22 - தெற்குகலிபோர்னியாவில் பரவிய பெரும் காட்டுதீயினால் 500,000 பேர் இடம்பெயர்ந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாயின.
அக்டோபர் 24 - சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் 'சாங்-ஒன்று' தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
நவம்பர் 3 - இலங்கையில் இருந்து இரகசியமாக லண்டனுக்கு சென்ற துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணா, போலி கடவுச் சீட்டு வைத்திருந்ததாக லண்டனில் கைது செய்யப்பட்டார்.
நவம்பர் 7 - பின்லாந்து, ஹெல்சிங்கி நகரில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற சூட்டு நிகழ்வில் 8 பேர் கொல்லப்பட்டுப் பலர் படுகாயமடைந்தனர்.
நவம்பர் 23 - அன்டார்ட்டிக் பெருங்கடல் பகுதியில் 150 சுற்றுலா பயணிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற "எக்ஸ்புளோரர்" என்ற கனேடியக் கப்பல் ஆர்ஜெண்டீனாவின் தெற்கு செட்லாண்ட் தீவு பகுதியில் பனிப்பாறையில் மோதியதில் கப்பல் மூழ்கியது. பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
டிசம்பர் 5 - அநுராதபுரத்தில் கெப்பிட்டிகொல்லாவ என்ற இடத்தில் பயணிகள் பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டு 23 பேர் படுகாயமடைந்தனர்.
டிசம்பர் 11 - மன்னாரில்இலங்கைப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற மோதலில் 20 இராணுவத்தினரும் 3 புலிகளும் கொல்லப்பட்டனர்.
டிசம்பர் 12 - ஊக்க மருந்து உட்கொண்டதை ஒப்புக் கொண்ட அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை மரியன் ஜோன்சின் 5 சிட்னி ஒலிம்பிக் விருதுகள் திரும்பப் பெறப்பட்டன்.
டிசம்பர் 17 - பொலீவியாவின் நிர்வாகப் பகுதிகாளான பெனி, பாண்டோ, சாண்டா குரூஸ், தரிஜா ஆகியன நடுவண் அரசிலிருந்து சுயாட்சி மாகாணங்களாகத் தம்மை அறிவித்தன.
டிசம்பர் 20 - 81 ஆண்டுகள், 7 மாதங்கள், 29 நாட்களை நிறைவு செய்து பிரித்தானியாவை ஆட்சிசெய்த மன்னர்கள், மகாராணிகளில் மிகவும் வயது முதிர்ந்தவரென்ற பெருமையை மகாராணி இரண்டாம் எலிசபெத் பெற்றார்.
டிசம்பர் 21 - பாகிஸ்தானில் பெஷாவார் நகரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.
டிசம்பர் 29 - மன்னாரில்இலங்கைப் படையினரின் பாரியளவிலான முன்நகர்வு நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற சமரில் 20-க்கும் மேற்பட்ட படையினரும் 3 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டதாக புலிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் டிசம்பர் 2007 நிகழ்வுகளுக்கு..
2008
==== ஜனவரி 2008 ====
ஜனவரி 1 - மேற்கு கென்யாவில் தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் கலவரங்களின் போது இடம்பெயர்ந்திருந்த 50 பேர் கொல்லப்பட்டனர்.
ஜனவரி 16 - டஹினா ஸ்பெக்டாபிலிஸ் (Tahina spectabilis) என்ற பூத்தவுடனே இறக்கும் ஒரு தென்னை போன்ற தாவரம் வடக்கு மடகஸ்காரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 3 - கொழும்புகோட்டைதொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டு 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பெப்ரவரி 19 - 51 ஆண்டுகள் கியூபாவின் ஜனாதிபதியாகவும் இராணுவத் தலைவராகவும் இருந்த பிடெல் காஸ்ட்ரோ தனது பதவிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பெப்ரவரி 21 - விண்ணிலிருந்து பூமியை நோக்கி வீழ்ந்து கொண்டிருந்த அமெரிக்க உளவு செய்மதியான யூஎஸ்ஏ 193ஐ அமெரிக்கக் கடற்படையினர் சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் பூமிக்கு அதனால் எவ்வித ஆபத்தும் இனி இல்லை எனவும் அமெரிக்கா அறிவித்தது.
மார்ச் 15 - சீனாவின் திபெத் சுயாட்சிப் பிரிவில் திபெத்தின் விடுதலையை வேண்டி ஒரு வாரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது காவல்துறையினர் சுட்டதில் 30 முதல் 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.
மார்ச் 22 - முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் அதிவேக டோறா பீரங்கிப்படகு ஒன்று கடற்புலிகளினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 16 கடற்படையினரில் 6 பேர் காப்பாற்றப்பட்டதாக அரசு தெரிவித்தது.
ஏப்ரல் 20 - வட கிழக்கு மனித உரிமைகள் செயலகப் பணிப்பாளர் வண. கருணாரத்தினம் அடிகள் வன்னியில் அம்பல்குளம் என்ற இடத்தில் கிளைமோர்த் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார்.
ஏப்ரல் 23 - கிளாலி முதல் முகமாலை வரை 7 கிமீ முன்னரண் பகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு படையினர் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 25 - கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பேருந்து ஒன்றினுள் குண்டு வெடித்ததில் 24 பொதுமக்கள் கொல்லப்பட்டு, 52 பேர் படுகாயமடைந்தனர்.
ஏப்ரல் 27 - மணலாறு இராணுவ முகாம்களின் மீது வான்புலிகள் விமானத் தாக்குதலை மேற்கொண்டனர்.
மே 12: சீனாவின் சிச்சான் மாநிலத்தின் வென்சுவா மாவட்டத்தில் 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 70,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
மே 16 - கொழும்பு மத்தியில் வான்படையினரின் சோதனை நிலையம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 7 காவல்துறையினர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டு 90 பேர் காயமடைந்தனர்.
மே 18: மன்னார், கருங்கண்டல்குளம் அணை ஊடாக வண்ணாங்குளம் நோக்கி இலங்கைப் படையினர் மேற்கொண்ட நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு, 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மே 23 - கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டி அக்கராயன் வீதியில் இலங்கைப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
மே 23: பத்து பூத்தே தீவு (Pedra Branca) மீதான அரசுரிமையை அனைத்துலக நீதிமன்றம்சிங்கப்பூருக்கு வழங்கியது. சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் இருந்த 28 ஆண்டுக்கால சர்ச்சை முடிவுக்கு வந்தது. இத்தீவுக்குச் சற்றுத் தள்ளியுள்ள இரண்டு சிறிய தீவுத்திட்டுகள் - மிடல் ரோக்ஸ், சவுத் லெட்ஜ் ஆகியவை மலேசியாவுக்குச் சொந்தமானவை என முடிவு செய்தது.
மே 26: கொழும்பில் இருந்து பாணந்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டு 73 பேர் படுகாயமடைந்தனர்.
மே 29 - யாழ்ப்பாணம்மண்டைதீவுக்கு அருகில் உள்ள சிறுத்தீவு கடற்படைத்தளம் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ தாக்குதல் அணியினரால் தாக்கியழிக்கப்பட்டதில் 13 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
மேலும் மே 2008 நிகழ்வுகளுக்கு..
ஜூன் 2008
ஜூன் 6 - கொழும்பின் புறநகர்ப்பகுதியான மொறட்டுவவில் பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டு 47 பேர் காயமடைந்தனர்.
ஜூன் 11 - கியூபாவில் ஒரே தொழில் செய்பவர்கள் சமமான ஊதியம் பெறும் முறை ஒழிக்கப்பட்டு அவர்களின் உற்பத்தித்திறனுக்கு ஏற்ப ஊதியம் பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜூன் 22 - சிம்பாப்வேயில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளை அடுத்து ஜூன் 27 இல் இடம்பெறவிருக்கும் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மோர்கன் சங்கிராய் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஆகத்து 8 - முல்லைத்தீவு மருத்துவமனையினுள் இலங்கைப் படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஒரு வயது குழந்தை கொல்லப்பட்டது. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் உட்பட 16 பேர் காயமடைந்தனர்.
ஆகத்து 26 - பீகார் மாநிலத்தில் கோசி ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் ஏற்பட்டதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
ஆகத்து 26 - திருகோணமலை துறைமுகத்தின் மீது வான்புலிகளின் வானூர்தி தாக்குதல் நடத்தியதில் இலங்கைக் கடற்படையினர் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர்.
ஆகத்து 30 - கிளிநொச்சி புதுமுறிப்புப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீது படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட ஐவர் கொல்லப்பட்டு மூவர் காயமடைந்தனர்.
செப்டம்பர் 20 - பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாதில் "மேரியாட்" விடுதி மீது நடந்த தானுந்து குண்டுவெடிப்பில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டு 100 பேர் படுகாயம் அடைந்தனர்.
செப்டம்பர் 25 - சீனா தனது சென்ஷோ 7 என்ற விண்கலத்தை மூன்று விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு அனுப்பியது. முதற்தடவையாக தனது வீரரை விண்ணில் நடக்க வைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
செப்டம்பர் 27 - கிளிநொச்சி நகர் இரத்தினபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு, கைக்குழந்தையுடன் மூன்று சிறார்கள் உட்பட எட்டு பேர் படுகாயமடைந்தனர்.
நவம்பர் 11 - எகிப்தின் அரசி செசெஷெட்டுக்குச் சொந்தமான 4,300 ஆண்டுகள் பழமையான பிரமிட் ஒன்றைத் தான் கண்டுபிடித்திருப்பதாக எகிப்தின் வரலாற்றாய்வாளர் சாகி ஹவாஸ் அறிவித்தார்.
நவம்பர் 22 - கொலம்பியாவில் நெவாடோ டெல் ஹுயிலா எரிமலை வெடித்ததில் 10 பேர் கொல்லப்ப்பட்டனர். 12,000 பேர் இடம்பெயர்ந்தனர்.
நவம்பர் 23 - கினி-பிசாவு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததை அடுத்து அங்கு இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது. ஒருவர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர்.
நவம்பர் 29 - கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது இலங்கை வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
டிசம்பர் 27 - காசா பகுதியில் இஸ்ரேல் குண்டுகளை வீசியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 225 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
டிசம்பர் 28 - கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 படையினர் உட்பட 19 பேர் காயமடைந்தனர்.
This article uses material from the Wikipedia தமிழ் article 2000கள், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses. ®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.