லெவியாதன் அல்லது பொதுநலவாய சமயம் மற்றும் குடிமையின் பொருள், வடிவம் மற்றும் அதிகாரம் (Leviathan or The Matter, Forme and Power of a Common Wealth Ecclesiasticall and Civil) — பொதுவாக லெவியாதன் எனக் குறிப்பிடப்படும்— நூல் தாமசு ஆபீசால் (1588–1679) எழுதப்பட்டு 1651இல் பதிப்பிக்கப்பட்டதாகும்.
இதன் தலைப்பு விவிலிய லெவியாதனிடமிருந்து பெறப்பட்டது. இந்த நூல் சமூக கட்டமைப்பையும் சட்டபூர்வ அரசையும் குறித்தானது;இது சமூக உடன்பாட்டுக் கொள்கைக்கான மிகத் தொன்மையான, மிகுந்த தாக்கமுள்ள எடுத்துக்காட்டாக கருதப்படுகிறது. லெவியாதன் பன்னாட்டு உறவில் அதிகாரம் குறித்த செவ்வியல் மேற்கத்திய படைப்பாக நிக்கோலோ மாக்கியவெல்லியின் தி பிரின்சுக்கு இணையாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்து உள்நாட்டுப் போரின் போது (1642–1651) எழுதப்பட்ட லெவியாதன் சமூக உடன்பாட்டிற்காகவும் முழுமையான இறையாண்மையுள்ள அரசால் ஆளப்படும் தேவையையும் வாதிடுகிறது. உள்நாட்டுப் போர் மற்றும் அதனால் எழுந்த வன்முறை இயல்நிலையும் ("அனைவரும் அனைவருடனும் சண்டை") வலுவான பிளவற்ற அரசால் தவிர்க்க முடியும் என எழுதினார்.
Frontispiece of "Leviathan," by Abraham Bosse, with input from Hobbes. | |
நூலாசிரியர் | தாமசு ஆபீசு |
---|---|
நாடு | இங்கிலாந்து |
மொழி | ஆங்கிலம், இலத்தீன் |
வெளியிடப்பட்ட நாள் | 1651 |
ஊடக வகை | தாள் |
This article uses material from the Wikipedia தமிழ் article லெவியாதன் (நூல்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.