ஜார்ஜ் பிரடெரிக் சாமுவேல் ராபின்சன் (1827 அக்டோபர் 24 - 1909 ஜூலை 9).1859 ல் ரிப்பன் பிரபு மற்றும் ஏர்ல் டி சாம்பல் என்று அழைக்கப்படுபவர்.
பிரிடிஷ் லிபரல் அமைச்சரவை பணியாற்றிய பிரித்தானிய அரசியல்வாதி. இந்தியாவில், சென்னையில் "ரிப்பன் எங்கள் அப்பன்" என்றழைக்கப்படுபவர். பிரித்தானிய இந்தியாவின் வைசிராயாக 1880-1884 கால கட்டத்தில் பணிபுரிந்தவர்.
ரிப்பன் பிரபு | |
---|---|
இந்திய வைஸ்ராய் ரிப்பன் பிரபு 1880-1884 | |
குழுத்தலைவர் | |
பதவியில் 9 திசம்பர் 1868 – 9 ஆகத்து 1873 | |
ஆட்சியாளர் | விக்டோரியா |
பிரதமர் | வில்லியம் கிளாட்ஸ்டோன் |
முன்னையவர் | ஜான் ஸ்பென்சர் சர்ச்சில் |
பின்னவர் | ஹென்றி புரூஸ் |
இந்தியத் தலைமை ஆளுநர் | |
பதவியில் 1880–1884 | |
ஆட்சியாளர் | விக்டோரியா |
முன்னையவர் | லிட்டன் பிரபு |
பின்னவர் | பிரடெரிக் ஹமில்டன் |
பிரபுக்கள் அவையின் தலைவர் | |
பதவியில் 1905–1908 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் ஏழாம் எட்வர்டு |
பிரதமர் | சர் ஹென்றி கேம்பல் |
பின்னவர் | [ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 டவுனிங் தெரு, இலண்டன் | 24 அக்டோபர் 1827
இறப்பு | 9 சூலை 1909 | (அகவை 81)
தேசியம் | பிரித்தானியர் |
அரசியல் கட்சி | லிபரல் கட்சி (ஐக்கிய இராச்சியம்) |
துணைவர்(s) | ஹென்றியெட்டா வைனர் (1833–1907) |
ரிப்பன், 10 டவுனிங் தெரு, லண்டன் மாநகரில் பிறந்தார். அவர் பள்ளியோ அல்லது கல்லூரியோ செல்லவில்ல, தனியாகவே கல்வி பயின்றார். அவருக்கு 1870 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்தியாவில் இருவேறு வகையான சட்டத்தை நீக்குவதற்கு ரிப்பன் முயற்சி எடுத்தார். இந்தியாவிலிருந்த சட்ட அமைப்பின்படி ஒரு ஐரோப்பியர் குறித்த வழக்கை ஐரோப்பிய நீதிபதி மட்டுமே விசாரிக்க முடியும். இந்திய நீதிபதி விசாரிக்க முடியாது. நீதிமன்றங்களில் பதவியிலிருந்த இந்திய நீதிபதிகளுக்கு இந்த சட்டப்பாகுபாடு பெருத்த அவமானத்தை அளிப்பதாக இருந்தது. சட்ட உறுப்பினரான சி.பி. இல்பர்ட் 1883ல் நீதித்துறையில் காணப்பட்ட இந்த பாகுபாட்டைப் போக்குவதற்காக ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார். ஆனால், ஐரோப்பியர்கள் இம்மசோதாவை கடுமையாக எதிர்த்தனர். இம்மசோதாவை எதிர்த்துப் போராட பாதுகாப்பு சங்கம் ஒன்றை அமைத்த அவர்கள் போராட்ட நிதியாக ஒன்றரை லட்ச ரூபாயையும் திரட்டினர். ஆங்கிலேயரை இந்திய நீதிபதிகளின் விசாரணைக்கு உட்படுத்துவதைவிட, இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை முடிவுக்கொண்டு வருவதே மேல் என்று அவர்கள் கூறினர். இங்கிலாந்து பத்திரிக்கைகளும் அவர்களுக்கு ஆதரவு அளித்தன. எனவே இங்கிலாந்திலும் இந்தியாவிலும் இருந்த ஆங்கிலேயரை திருப்திப்படுத்துவதற்காக ரிப்பன் இம்மசோதாவில் திருத்தம் கொண்டு வந்தார். இல்பர்ட் மசோதா குறித்த சர்ச்சை இந்திய தேசியம் வளருவதற்கு பெரிதும் உதவியது. இந்திய தேசிய இயக்கத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இந்த சர்ச்சையால் பெரிதும் மனமுடைந்த ரிப்பன், தனது பதவியைத் துறந்துவிட்டு இங்கிலாந்து திரும்பினார். இந்த நிகழ்வின் உடனடி விளைவாக, 1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.
இந்தியாவிற்கு இங்கிலாந்து அனுப்பிவைத்த வைஸ்ராக்களிலேயே மிகவும் புகழ்மிக்கவர் ரிப்பன் பிரபு ஆவார். இந்தியர்களின் பிரச்சினைகளை கனிவுடனும், பரிவுடனும் கையாண்ட காரணத்தால் அவரை 'ரிப்பன் தி குட்' (ரிப்பன் எங்கள் அன்பன்) என்று இந்திய மக்கள் போற்றிப் புகழ்ந்தனர். நீதித்துறையில் நிலவிய இனப்பாகுபாட்டை ஒழிக்க முயற்சியெடுத்தது, நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தை திரும்பப் பெற்றது, தல சுய ஆட்சியை அறிமுகப்படுத்தியது, மைசூரைத் திரும்பி வழங்கியது போன்ற நடவடிக்கைகள் இந்தியர்களிடையே அவரது புகழை மேலும் உயர்த்தியது. அவரது செயல்பாடுகளை நன்றியுடன் போற்றிய இந்தியர்கள் ரிப்பன் பதவி விலகியதற்காக மிகவும் வருத்தப்பட்டனர்.
1913ல் கட்டப்பட்ட சென்னை மாநகராட்சியின் கட்டிடத்திற்கு, ரிப்பன் பிரபுவை கௌரவப்படுத்தும் விதமாக ரிப்பன் கட்டிடம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
This article uses material from the Wikipedia தமிழ் article ரிப்பன் பிரபு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.