திருத்தந்தை புனித முதலாம் ஃபெலிக்ஸ் (Pope Saint Felix I) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 269 சனவரி 5ஆம் நாளிலிருந்து 274 திசம்பர் 30ஆம் நாள் வரை ஆட்சி செய்தார்.
அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை தியோனீசியுஸ். திருத்தந்தை புனித முதலாம் ஃபெலிக்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் 26ஆம் திருத்தந்தை ஆவார்.
திருத்தந்தை புனித முதலாம் ஃபெலிக்ஸ் Pope Saint Felix I | |
---|---|
26ஆம் திருத்தந்தை | |
ஆட்சி துவக்கம் | சனவரி 5, 269 |
ஆட்சி முடிவு | திசம்பர் 30, 274 |
முன்னிருந்தவர் | தியோனீசியுஸ் |
பின்வந்தவர் | யுட்டீக்கியன் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ஃபெலிக்ஸ் |
பிறப்பு | தெரியவில்லை உரோமை; உரோமைப் பேரரசு |
இறப்பு | உரோமை; உரோமைப் பேரரசு | திசம்பர் 30, 274
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | திசம்பர் 30 |
ஃபெலிக்ஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தை முதலாம் ஃபெலிக்ஸ் பற்றிய வரலாற்றுச் செய்திகள் மிகக் குறைவே. அவரது ஆட்சிக் காலம் உறுதியாகத் தெரிகிறது. அவர் காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகள் பற்றியும் தெளிவாகத் தெரிகிறது.
"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் பண்டைய ஏடு, திருத்தந்தை முதலாம் ஃபெலிக்ஸ் உரோமையைச் சார்ந்தவர் என்று குறிப்பிடுகிறது. ஆனால் அவர் மறைச்சாட்சியாக இறந்தார் என்பதற்கு வரலாற்று ஆதாரம் இல்லை.
அந்தியோக்கியா நகரில் நிகழ்ந்த சங்கம் சாமொசாத்தா நகர் பவுல் (Paul of Samosata) என்னும் ஆயர் மூவொரு இறைவன் பற்றித் தவறாகப் போதித்தார் என்பதற்காக அவரைப் பதவியிறக்கம் செய்து, உரோமைத் திருத்தந்தைக்குத் தகவல் அனுப்பியது. அப்போது திருத்தந்தையாக இருந்த தியோனீசியுஸ் என்பவர் அக்கடிதம் வந்துசேர்வதற்கு முன்னால் இறந்துவிட்டதால் திருத்தந்தை ஃபெலிக்சிடம் அக்கடிதம் வந்து சேர்ந்தது. சங்கத்தின் முடிவையும் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயரையும் திருத்தந்தை ஃபெலிக்ஸ் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
ஆனால் பதவியிறக்கம் செய்யப்பட்ட ஆயர் பவுல் தம் இருப்பிடத்திலிருந்து போக மறுத்தார். எனவே, திருச்சபை அதிகாரிகள் பேரரசன் அவுரேலியனிடம் முறையிட்டனர். ஆயர் பவுல் தம் இருப்பிடத்தை விட்டுச் செல்லவேண்டும் என்றும், கோவிலுக்குச் சொந்தமான இடங்கள் "இத்தாலிய மற்றும் உரோமை நகர ஆயர்களோடு ஒன்றிப்பு உறவில் நிலைத்திருப்போரிடம்" ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அரசன் ஆணை பிறப்பித்தார்.
கிபி மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மறைச்சாட்சிகள் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைப் பகுதியில் திருப்பலி நிறைவேற்றும் பழக்கம் இருந்தது. அப்பழக்கம் திருத்தந்தை ஃபெலிக்சின் காலத்திலும் தொடர்ந்தது.
திருத்தந்தை முதலாம் ஃபெலிக்ஸ் 274ஆம் ஆண்டு, திசம்பர் 30ஆம் நாள் இறந்தார். அவர்தம் உடல் உரோமை நகரில் ஆப்பிய நெடுஞ்சாலையில் அமைந்த கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
புனித முதலாம் ஃபெலிக்சின் திருவிழா அவர் இறந்த திசம்பர் 30ஆம் நாளில் கொண்டாடப்படுகிறது.
This article uses material from the Wikipedia தமிழ் article முதலாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.