பருத்தித்துறை (Point Pedro, சிங்களம்: පේදුරු තුඩුව) இலங்கையின் வடபகுதி அந்தலையில் உள்ள ஒரு நகரமாகும்.
இது யாழ்ப்பாணத்தின் வடமராட்சி வலயத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டு மையமாகும். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தையும் இது கொண்டுள்ளது. 1995 இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இந்த நகரம் இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. பருத்தித்துறை தமிழர்கள் வாழும் நகரமாகும். ஈழப்போர்க் காலத்தில் உயர் பாதுகாப்பு வலயத்துள் அமைந்திருந்த நகரின் பெரும்பகுதிகள் 2009 இல் போர் நிறைவடைந்ததை அடுத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டன. 2004 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் இந்த நகரம் பாதிக்கப்பட்டது. இலங்கையின் புகழ் பெற்ற ஹாட்லிக் கல்லூரி இங்கு அமைந்துள்ளது. பருத்தித்துறையானது அதிகளவு பாடசாலைகளின், கோவில்கள் நீதிமன்றம், மின்சாரசபையையும், அரச தனியார் போக்குவரத்து சபையை, ஆதார வைத்தியசாலை, நகரசபை, பிரதேச செயலகம், பிரதேச சபை, வலயக்கல்வி அலுவலகம், சுற்றுலா மற்றும் மீன்பிடி கடற்கரை, வெளிச்சவீடு, உள்ளூர், வெளிமாவட்ட போக்குவரத்து வசதி, வங்கிகள், திரையரங்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஐந்து முக்கிய நகரங்களுக்குச் செல்லும் வீதிகள் (காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், கொடிகாமம், சாவகச்சேரி, மருதங்கேணி) சந்திக்கும் இடமாகவும் உள்ளது.
பருத்தித்துறை | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 9°49′0″N 80°14′0″E / 9.81667°N 80.23333°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ.பிரிவு | வடமராட்சி வடக்கு |
அரசு | |
• வகை | பருத்தித்துறை நகரசபை |
• தலைவர் | சபாநாயகம் இரவீந்திரன் (த.தே.கூ) |
பரப்பளவு | |
• மொத்தம் | 11.65 km2 (4.50 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 31,351 |
• அடர்த்தி | 1,044/km2 (2,700/sq mi) |
நேர வலயம் | இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30) |
ஆரம்ப காலங்களில் பருத்தி ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக தொழிற்பட்டது. இதனால் பருத்தித்துறை என பெயர் பெற்றது. இதே வேளை ஒல்லாந்த மாலுமியான பெட்ரே இலங்கையின் கரையோரப் பிரதேசம் ஊடாகப் பயணிக்கும் போது இலங்கையின் வட முனையாக இந்த நகரம் இருப்பதைப் புரிந்துகொண்டார். இதன் பின்னர் இந்த நகரத்துக்கு பொயின்ட் பெட்ரோ (Point Pedro) எனப் பெயரிட்டார். இந்தப் பெயரே இன்று ஆங்கிலத்தில் புழங்கி வருகின்றது.
காலம் காலமாக இவ்வூரில் உள்ள பிரபலமான பாடசாலையான ஹாட்லிக் கல்லூரி பல மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வருகின்றது. ஆரம்ப காலங்களில் தென்னிலங்கையில் இருந்து சிங்கள மாணவர்கள் இந்தக் கல்லூரியில் படிப்பதற்காக இந்த நகரிற்கு வந்தனர். ஆயினும் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக இந்தப் பாடசாலை தனது செல்வாக்கை இழந்தது. ஆயினும் தொடர்ந்தும் இந்தப் பாடசாலையின் மாணவர்கள் கணிதத் துறையில் அகில இலங்கை ரீதியில் சாதனை புரிந்து வருகின்றனர்.
ஆதி காலத்தில் தென்னிந்திய நகரங்களுக்கு பருத்தி ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக விளங்கிய பருத்தித்துறை துறைமுகம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் யாழ் குடாநாடு இருந்த போது யாழ் குடாநாட்டிற்கான கடல்வழிப் போக்குவரத்து இந்த துறைமுகம் ஊடாக நடந்தது. திருகோணமலையில் இருந்து பருத்தித்துறைக்கு பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 1995இல் இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து பருத்தித்துறை நகரைக் கைப்பற்றியபோது இந்தத் துறைமுகமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. போர் முடிந்த பிறகு, சில கட்டுப்பாடுகளுடன் பொது மக்களை இந்த துறைமுகத்தைப் பாவிக்க இராணுவம் அனுமதித்தது.
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்த துறைமுகம் பரபரப்பான ஒரு துறைமுகமாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பருத்தித்துறையில் உள்ள மாதனைப் பகுதியில் பிரசித்திபெற்ற கொட்டகைக்கூத்து, இசைநாடகக் கலைஞர்கள் இருந்தார்கள். காத்தவராயர் என்னும் கூத்து தற்போதும் நடைபெற்று வருகின்றது.
இங்குள்ள ஆலயங்களில் சில:
This article uses material from the Wikipedia தமிழ் article பருத்தித்துறை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.