நான்காம் மிண்டோ பிரபு, கில்பர்ட் ஜான் எலியட்-முறே-கினின்மௌன்டு (Gilbert John Elliot-Murray-Kynynmound, 4th Earl of Minto, 1845 - 1914), ஐக்கிய இராச்சியத்தின் தலைமைப் படைத்தலைவர்களில் ஒருவரான இவர், பிரித்தானிய இந்தியாவின் 17-வது வைஸ்ராயாக 18 நவம்பர் 1905 முதல் 23 நவம்பர் 1910 முடிய பணியாற்றியவர்.
மேலும் இவர் கனடாவின் 8-வது தலைமை ஆளுநராக 12 நவம்பர் 1898 முதல் 10 டிசம்பர் 1904 வரை பணியாற்றியவர்.
1909ல் மிண்டோ-மார்லி ஆகியவர்களின் பரிந்துரைகளின் படி இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டம், 1909 , இந்திய மாகாணச் சட்டமன்றங்களுக்கு, இந்திய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் முறை முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் சட்டமன்றங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் விரிவுபடுத்தப்பட்டு இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. சட்டமன்றங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் முசுலிம்களுக்கு தனி இடங்கள் (25%) ஒதுக்கப்பட்டன. முசுலிம் உறுப்பினர்களை முசுலிம்களே தேர்ந்தெடுக்க தனித்தொகுதிகளும் உருவாக்கப்பட்டன. தலைமை ஆளுனர் மற்றும் மாநில ஆளுனர்களின் நிருவாகக் குழுக்கள் விரிவுபடுத்தப்பட்டு அதில் சில இந்தியர்களுக்கும் இடமளிக்கப்பட்டது.
This article uses material from the Wikipedia தமிழ் article நான்காம் மிண்டோ பிரபு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.