துரை வைகோ அல்லது கோபால்சாமி துரை வையாபுரி என்பவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளராவார் இவர் மதிமுக பொதுச்செயலாளார் வை.
கோபால்சாமியின் மகனாவார்.
துரை வையாபுரி | |
---|---|
பிறப்பு | 1972 |
தேசியம் | இந்தியர் |
பணி | அரசியல்வாதி |
அரசியல் கட்சி | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை | கீதா |
பிள்ளைகள் |
|
இவர் 1972 ஆம் ஆண்டு வைகோ மற்றும் ரேணுகாதேவி ஆகிய தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார். சென்னை சின்மயா வித்யாலயா பள்ளி மற்றும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தார்
இவர் மதிமுக கட்சியின் முக்கியத் தேர்தல் பரப்புரையாளர்களுள் ஒருவராக இருந்தார். மதிமுக கட்சியின் இணையத்தளப் பிரிவிலும் இயங்கி வருபவர். 2014 இந்தியப் பொதுத் தேர்தலின் போது பா.ஜ.க. கட்சிக்கு ஆதரவாகவும் தே.மு.தி.க. கட்சிக்கு ஆதரவாகவும் தேர்தல் பரப்புரையில் இறங்கியவர். இவர் 2014இல் பட்டாசு தொடர்பாக இந்திய மத்திய அரசு விடுத்த புதிய சட்டத்தை எதிர்த்து, சிவகாசியில் உந்துருளி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். இவர் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் மதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை ஆற்றினார். 2021 அக்டோபரில் மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராகப் பதவியேற்றார்.
இவர் "இந்திய புகையிலை குழுமம்" என்னும் நிறுவனத்தில் பங்குத்தொகை வைத்திருக்கிறார். இந்த பங்குத்தொகை விவகாரம் மதிமுகவின் எதிர்த்தரப்புக் கட்சிக்காரர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது. மேலும் இவர் வீ இரியாலிட்டி (V Realty) தனியார் வரையறுக்கப்பட்டது என்ற நிறுவனத்துக்கு இயக்குநராகவும் உள்ளார்.
This article uses material from the Wikipedia தமிழ் article துரை வையாபுரி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.