என்.
ரமணி (15 அக்டோபர் 1934 - 9 அக்டோபர் 2015) தமிழ்நாட்டைச் சேர்ந்த புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஆவார்.
என். ரமணி N. Ramani | |
---|---|
பிறப்பு | 15 அக்டோபர் 1934 |
பிறப்பிடம் | திருவாரூர், தமிழ்நாடு |
இறப்பு | 9 அக்டோபர் 2015 | (அகவை 80)
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | கருநாடக வாத்தியக் கலைஞர் |
இசைக்கருவி(கள்) | புல்லாங்குழல் |
இசைத்துறையில் | 1939–2015 |
தமிழ்நாடு திருவாரூரில் 1934 ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது தாத்தா ஆழியூர் நாராயணசாமி ஐயரிடம் புல்லாங்குழல் இசையைக் கற்கத் தொடங்கினார். ரமணியின் முதல் கச்சேரி சிக்கில் சிங்காரவேலர் ஆலயத்தில் நடந்தது. அதன்பின்னர் 1950ஆம் ஆண்டில் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். தனது உறவினரான புல்லாங்குழல் கலைஞர் டி. ஆர். மகாலிங்கத்திடம் மாணவராக இசை பயின்றார்.
அனைத்திந்திய வானொலியில் இசை நிகழ்ச்சிகளை செய்துள்ளார். வெளிநாடுகள் பலவற்றிலும் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் என நான்கு குழந்தைகள். இவரின் மகன் தியாகராஜனும், பேரன் அதுல் குமாரும் புல்லாங்குழல் இசைக் கலைஞர்கள் ஆவர்.
புற்றுநோய் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ரமணி 9 அக்டோபர் 2015 அன்று காலமானார்.
This article uses material from the Wikipedia தமிழ் article என். ரமணி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.