பகாருயோங் அல்லது மலையபுரம் ஆங்கிலம்: Pagaruyung; Malayapura; Malayupura) மினாங்கபாவு: Karajaan Pagaruyuang; Pagaruyung Dārul Qarār) என்பது 18-ஆம் நூற்றாண்டில் சுமத்ரா தீவில் இருந்த ஒரு பேரரசு ஆகும்.
மேற்கு சுமத்ராவின் மினாங்கபாவ் மன்னர்களின் வசிப்பிடமாகவும்; ஓர் இராச்சியமாகவும் இருந்தது. முந்தைய மலையபுரம் அரசு, தற்போது இந்தோனேசியாவில் பகாருயோங் என்று அழைக்கப்படுகிறது.
மலையபுரம் Malayapura Pagaruyung ملاياڤورا Pagaruyung Dārul Qarār | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1347–1833 | |||||||||||
தலைநகரம் | பத்து சங்கார், பகாருயோங் | ||||||||||
பேசப்படும் மொழிகள் | சமசுகிருதம், மினாங்கபாவு, மலாய் | ||||||||||
சமயம் | இந்து-பௌத்தம் (முதல் காலக்கட்டம்), (ஆன்ம வாதம், இசுலாம் (கடைசி காலக்கட்டம்) | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
சுல்தான் மகாராஜா | |||||||||||
• 1347–1375 (முதல் அரசர்) | ஆதித்தியவர்மன் (Adityawarman) | ||||||||||
• 1789–1833 கடைசி அரசர்) | சுல்தான் தங்கால் ஆலாம் | ||||||||||
வரலாறு | |||||||||||
• தொடக்கம் | 1347 | ||||||||||
• பாட்ரி போர் | 1833 | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தோனேசியா |
தற்போதைய காலத்தில் பகாருயோங் என்பது இந்தோனேசியா, பத்துசங்கார், தானா டாத்தார் பிராந்தியத்தின் தஞ்சோங் இமாஸ் துணை மாவட்டத்தில் ஒரு கிராமமாக உள்ளது.
பகாருயோங் நிறுவப்படுவதற்கு முன்பு, பகாருயோங் இராச்சியம் மலையபுரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அமோகபாசா கல்வெட்டு (Amoghapasa inscription) பதிவுகளின்படி சுவர்ணபூமி என்று முன்பு அழைக்கப்பட்ட சுமத்திரா நிலப்பகுதியில் பகாருயோங் இராச்சியத்தை ஆதித்தியவர்மன் என்பவர் தோற்றுவித்ததாக அறியப்படுகிறது.
14-ஆம் நூற்றாண்டில், ஆதித்தியவர்மன் எனும் சாவக அரசர், ஜாவாவை ஆட்சி செய்த சிங்காசாரி, மஜபாகித் பேரரசுகளுடன் நட்புறவு கொண்டிருந்தார். அதன் பின்னணியில் ஜாவா தீவின் மேற்குப் பகுதியில் மினாங்கபாவு பேரரசை தோற்றுவித்தார். மினாங்கபாவ் பீடபூமியில் மினாங்கபாவு பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆதித்யவர்மன், 1347-ஆம் ஆண்டில் இருந்து 1375-ஆம் ஆண்டு வரை 28 ஆண்டுகள் மினாங்கபாவு பேரரசை ஆட்சி செய்தார்.
மத்திய சுமத்திராவில் ஒரு மாநிலமாக இருந்த மலையபுரத்தின் அரசராக இருந்தவர் ஆதித்தியவர்மன். இந்த மலையபுரம் (Malayapura), தற்போது பகாருயோங் (Pagarruyung) என்று அழைக்கப்படுகிறது.
1309-இல் இருந்து 1328 வரை, மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த ஜெயநகாரா என்பவரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆதித்தியவர்மன். இவர் திரிபுவன இராஜா எனும் பேரரசரின் பேரனும் ஆவார். மஜபாகித் பேரரசின் மூத்த அமைச்சராக ஆதித்தியவர்மன் இருந்த போதுதான் மினாங்கபாவு பேரரசைத் தோற்றுவித்தார்.
ஆதித்தியவர்மன் மறைந்த பிறகு, மினாங்கபாவு பேரரசு மூன்று சிற்றரசுகளாகப் பிரிந்து போயின. மூன்று அரசர்கள் தனித்தனியாக ஆட்சி செய்தனர். இராஜா ஆலாம், இராஜா ஆடாட், இராஜா இபாடாட் எனும் மூன்று அரசர்கள். சுருக்கமாக இராஜா தீகா செலோ (Rajo Tigo Selo) என்று அழைக்கப் பட்டார்கள்.
This article uses material from the Wikipedia தமிழ் article பகாருயோங், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.