கமலினி செல்வராஜன் (1954 - 7 ஏப்ரல் 2015) இலங்கைத் தமிழ் நாடக, திரைப்பட நடிகையும், வானொலி ஒலிபரப்பாளரும் ஒளிபரப்பாளரும் ஆவார்.
இவர் கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவி ஆவார்.
கமலினி செல்வராசன் | |
---|---|
பிறப்பு | கமலினி கணபதிப்பிள்ளை 1954 புலோலி, யாழ்ப்பாணம் |
இறப்பு | 7 ஏப்ரல் 2015 (அகவை 60–61) கொழும்பு |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | களனிப் பல்கலைக்கழகம் பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலை |
அறியப்படுவது | நாடகத், திரைப்பட நடிகை, ஒலி, ஒளிபரப்பாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | மு. கணபதிப்பிள்ளை (பண்டிதர், தமிழறிஞர்) தனபாக்கியம் |
வாழ்க்கைத் துணை | சில்லையூர் செல்வராசன் (இ. 14-10-1995) |
பிள்ளைகள் | அதிசயன் |
கமலினி இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை, வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். கொள்ளுப்பிட்டி சென். அந்தனிஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பின்னர் பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார். களனிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார். தந்தை மு. கணபதிப்பிள்ளை இலங்கை வானொலியில் இலக்கியப் பங்களிப்பு வழங்கியபோது அவரது நண்பராக இருந்த கவிஞர் சில்லையூர் செல்வராசனைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டார். செல்வராசனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஜெரல்டின் ஜெசி என்ற மனைவியும் திலீபன், பாஸ்கரன், முகுந்தன், யாழினி ஆகிய பிள்ளைகளும் இருந்தனர்.
சில்லையூர் செல்வராசன் எழுதிய 'தணியாத தாகம்' வானொலித் தொடர் நாடகத்தில், குடும்பத்தின் இளைய மகளாக 'கமலி' பாத்திரத்தில் இவர் நடித்தார். இலங்கை வானொலியில் 'கலைக்கோலம்' முதலான சஞ்சிகை நிகழ்ச்சிகள் பலவற்றை தயாரித்து வழங்கியிருக்கிறார்.
ரூபவாகினியில் ஒளிபரப்பான அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், கே. எஸ். பாலச்சந்திரன் எழுதிய 'திருப்பங்கள்', எஸ். ராம்தாசின் 'எதிர்பாராதது', எஸ். எஸ். கணேசபிள்ளை எழுதிய 'சமூக சேவகி' போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். ரூபவாகினியிலும், ஐ.ரி. என் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி வந்தார்.
இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற கோமாளிகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆதர கதாவ என்ற சிங்களத் திரைப்படத்தில் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திரமேற்று நடித்திருந்தார் கமலினி செல்வராஜன்.
1995 ஆம் ஆண்டில் கணவர் செல்வராசனின் இறப்பை அடுத்து கொழும்பில் தனது ஒரே மகன் அதிசயனுடன் வசித்து வந்த கமலினி கடுமையான சுகயீனமுற்றிருந்த நிலையில் 2015 ஏப்ரல் 7 அன்று கொழும்பில் காலமானார்.
This article uses material from the Wikipedia தமிழ் article கமலினி செல்வராஜன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.