கமலினி செல்வராஜன்

கமலினி செல்வராஜன் (1954 - 7 ஏப்ரல் 2015) இலங்கைத் தமிழ் நாடக, திரைப்பட நடிகையும், வானொலி ஒலிபரப்பாளரும் ஒளிபரப்பாளரும் ஆவார்.

இவர் கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவி ஆவார்.

கமலினி செல்வராசன்
கமலினி செல்வராஜன்
பிறப்புகமலினி கணபதிப்பிள்ளை
1954
புலோலி, யாழ்ப்பாணம்
இறப்பு7 ஏப்ரல் 2015 (அகவை 60–61)
கொழும்பு
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்விகளனிப் பல்கலைக்கழகம்
பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலை
அறியப்படுவதுநாடகத், திரைப்பட நடிகை, ஒலி, ஒளிபரப்பாளர்
சமயம்இந்து
பெற்றோர்மு. கணபதிப்பிள்ளை
(பண்டிதர், தமிழறிஞர்)
தனபாக்கியம்
வாழ்க்கைத்
துணை
சில்லையூர் செல்வராசன் (இ. 14-10-1995)
பிள்ளைகள்அதிசயன்

வாழ்க்கைக் குறிப்பு

கமலினி இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை, வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். கொள்ளுப்பிட்டி சென். அந்தனிஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பின்னர் பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார். களனிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார். தந்தை மு. கணபதிப்பிள்ளை இலங்கை வானொலியில் இலக்கியப் பங்களிப்பு வழங்கியபோது அவரது நண்பராக இருந்த கவிஞர் சில்லையூர் செல்வராசனைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டார். செல்வராசனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஜெரல்டின் ஜெசி என்ற மனைவியும் திலீபன், பாஸ்கரன், முகுந்தன், யாழினி ஆகிய பிள்ளைகளும் இருந்தனர்.

வானொலியில்

சில்லையூர் செல்வராசன் எழுதிய 'தணியாத தாகம்' வானொலித் தொடர் நாடகத்தில், குடும்பத்தின் இளைய மகளாக 'கமலி' பாத்திரத்தில் இவர் நடித்தார். இலங்கை வானொலியில் 'கலைக்கோலம்' முதலான சஞ்சிகை நிகழ்ச்சிகள் பலவற்றை தயாரித்து வழங்கியிருக்கிறார்.

தொலைக்காட்சியில்

ரூபவாகினியில் ஒளிபரப்பான அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், கே. எஸ். பாலச்சந்திரன் எழுதிய 'திருப்பங்கள்', எஸ். ராம்தாசின் 'எதிர்பாராதது', எஸ். எஸ். கணேசபிள்ளை எழுதிய 'சமூக சேவகி' போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். ரூபவாகினியிலும், ஐ.ரி. என் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி வந்தார்.

திரைப்படங்களில்

இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற கோமாளிகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆதர கதாவ என்ற சிங்களத் திரைப்படத்தில் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திரமேற்று நடித்திருந்தார் கமலினி செல்வராஜன்.

விருதுகள்

  • நாட்டுக்கூத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக கலாசார அமைச்சின் விருது (1995)
  • கொழும்பு றோயல் கல்லூரி நாடகத் துறைக்காக ஆற்றிய பங்களிப்புக்காக கொழும்பு றோயல் கல்லூரியின் விருது (2008)
  • நோர்வே கலை மன்றம் நாட்டுக்கூத்து பாரம்பரியத்தை பேணி வளர்ப்பதில் காட்டிய ஆர்வத்திற்கான கெளரவ விருது (2010)
  • 35 ஆண்டு கலைச் சேவையைப் பாராட்டி கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில் இளைஞர் நற்பணி மன்றம் விருது வழங்கி கெளரவித்தது.

இறுதிக் காலம்

1995 ஆம் ஆண்டில் கணவர் செல்வராசனின் இறப்பை அடுத்து கொழும்பில் தனது ஒரே மகன் அதிசயனுடன் வசித்து வந்த கமலினி கடுமையான சுகயீனமுற்றிருந்த நிலையில் 2015 ஏப்ரல் 7 அன்று கொழும்பில் காலமானார்.

மேற்கோள்கள்

Tags:

கமலினி செல்வராஜன் வாழ்க்கைக் குறிப்புகமலினி செல்வராஜன் வானொலியில்கமலினி செல்வராஜன் தொலைக்காட்சியில்கமலினி செல்வராஜன் திரைப்படங்களில்கமலினி செல்வராஜன் விருதுகள்கமலினி செல்வராஜன் இறுதிக் காலம்கமலினி செல்வராஜன் மேற்கோள்கள்கமலினி செல்வராஜன்இலங்கைத் தமிழர்சில்லையூர் செல்வராசன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வ. உ. சிதம்பரம்பிள்ளைமனித உரிமைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்விரை வீக்கம்இந்திய புவிசார் குறியீடுசோழர்மயக்கம் என்னமூசாகிரியாட்டினைன்தமிழர்சத்ய ஞான சபைசிலம்பம்ஆற்றுப்படைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திருச்சிராப்பள்ளிஈழை நோய்அய்யா வைகுண்டர்சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்பாண்டியர்ராதிகா சரத்குமார்சேவல் சண்டைவைரமுத்துமுகம்மது இசுமாயில்வேல ராமமூர்த்திடங் சியாவுபிங்பிரம்மம்ஏறுதழுவல்இரைப்பை அழற்சிவீரமாமுனிவர்உலக நாடக அரங்க நாள்நிணநீர்க்கணுஜலியான்வாலா பாக் படுகொலைஇயற்கைஸ்ரீகிருட்டிணன்குடிப்பழக்கம்சுற்றுலாவேளாளர்சைவத் திருமுறைகள்விலங்குபெரியபுராணம்யானைசிறுதானியம்வறுமைதமிழர் நிலத்திணைகள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தொலைக்காட்சிமழைநீர் சேகரிப்புதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மோசேபழனி முருகன் கோவில்குறிஞ்சி (திணை)மலேசியாரேஷ்மா பசுபுலேட்டிஇந்து சமயம்இசுலாத்தின் புனித நூல்கள்பதினெண் கீழ்க்கணக்குபாலை (திணை)பாதரசம்திருவிளையாடல் புராணம்இதயம்சிங்கப்பூர்எஸ். பி. பாலசுப்பிரமணியம்மருதம் (திணை)தாவரம்மலைபடுகடாம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்அதிமதுரம்அதியமான் நெடுமான் அஞ்சிஇந்தியாவின் பண்பாடுவேற்றுமையுருபுசீனாமுருகன்நற்றிணைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்🡆 More