இயேசுவின் பிறப்பு

இயேசுவின் பிறப்பு என்பது இயேசுவின் பிறப்பு குறித்த லூக்கா நற்செய்தி, மத்தேயு நற்செய்தி மற்றும் சில திருமுறையினை சேரா நூல்களில் விவரிப்பினைக்குறிக்கும்.

லூக்கா மற்றும் மத்தேயு நற்செய்திகள் யூதேயா நாட்டின் பெத்லகேம் ஊரில் இயேசு ஒரு கன்னியிடம் பிறந்தார் என குறிக்கின்றது.

இயேசுவின் பிறப்பு
"இடையர் இயேசுவை வணங்குதல்" ஓவியர்: Gerard van Honthorst, 1622

லூக்கா நற்செய்தியின்படி அகுஸ்து சீசரின் கட்டளைப்படி மக்கள் தொகையைக் கணக்கில் தன் குடும்பத்தை பதிவு செய்ய தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், அவருக்கு மண ஒப்பந்தமான மரியாவும் நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றனர். அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்து, பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். இதன்பின் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களுக்கு வானதூதர் தோன்றி அவர்களிடம், 'இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.' எனக்கூறி இயேசுவின் பிறப்பை அவர்களுக்கு அறிவித்தனர். அவர்கள் சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டு வணங்கினர்.

மத்தேயு நற்செய்தி விண்மீன் ஒன்றின் வழிகாட்டுதலால் கிழக்கிலிருந்து ஞானிகள் சிலர் வந்து இயேசுவை வணங்கினர் என்று குறிக்கின்றது. இதன்பின் ஏரோது குழந்தையை கொல்லத் தேடுவான் என கணவில் யோசேப்பு எச்சரிக்கப்பட்டதால், அவர்கள் மூவரும் எகிப்துக்குத் தப்பி ஓடிச் சென்றனர். ஏரோது காலமானதும், எகிப்திலிருந்து திரும்பி வந்து நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார்.

இந்த நிகழ்வு பல கிறித்தவ பிரிவுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. கத்தோலிக்க திருச்சபை உட்பட்ட சில சபைகளில் கிறித்துமசு அன்று திருவிழிப்பு ஆராதனையோடு இவ்விழா சிறப்பிக்கப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு மரபுவழி திருச்சபையின் இவ்விழாவுக்கு முன் 40 நாட்கள் நோன்பிருப்பது (Nativity Fast) வழக்கில் உள்ளது. கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் முதலிய பல பிரிவுகளில் இவ்விழாவுக்கு முன் வரும் நான்கு ஞாயிருகளை திருவருகைக் காலம் என வைத்து இவ்விழாவுக்கு ஆயத்தம் செய்கின்றனர்.

கிறித்தவ இறையியலில் வாக்கு மனிதரான நிகழ்வாக இது கருதப்படுகின்றது. ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சியால் விளைந்த பாவத்தைப்போக்க கடவுளின் திருவுளப்படி அவரின் ஒரே மகன் இயேசு மனிதனாகப்பிறந்ததாக நம்பப்படுகின்றது. 4ம் நூற்றாண்டு முதல் கிறித்தவக் கலையில் இன்நிகழ்வு முக்கிய பங்கு வகிக்கின்றது. 13ம் நூற்றாண்டு முதல் கிறித்துமசு குடில் அமைத்து இவ்விழாவை கிறித்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

மேற்கோள்கள்

Tags:

இயேசு கிறித்துஇயேசுவின் கன்னிப்பிறப்புநற்செய்திகள்பெத்லகேம்மத்தேயு நற்செய்திலூக்கா நற்செய்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சைவத் திருமுறைகள்மாரியம்மன்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைபௌத்தம்நான்மணிக்கடிகைகம்பர்தமிழில் சிற்றிலக்கியங்கள்தேவேந்திரகுல வேளாளர்வாற்கோதுமைஇந்தியாவில் இட ஒதுக்கீடுஉத்தரகோசமங்கைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இரட்சணிய யாத்திரிகம்அறுபடைவீடுகள்யாழ்இணையம்சிவனின் 108 திருநாமங்கள்அடல் ஓய்வூதியத் திட்டம்தமிழ்நாடு காவல்துறைமுல்லை (திணை)உயிர்மெய் எழுத்துகள்பிரசாந்த்தாஜ் மகால்வ. உ. சிதம்பரம்பிள்ளைஇந்திய நிதி ஆணையம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கீர்த்தி சுரேஷ்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)சன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழ்நாடுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சென்னைஇதயம்இந்திய வரலாறுஇயேசுசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்இந்தியாவின் பசுமைப் புரட்சிசின்ன வீடுசெக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)திட்டக் குழு (இந்தியா)மகரம்பிரகாஷ் ராஜ்தமிழச்சி தங்கப்பாண்டியன்இரட்டைக்கிளவிமு. க. ஸ்டாலின்தமிழர் நெசவுக்கலைசபரி (இராமாயணம்)ஆழ்வார்கள்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)நேர்பாலீர்ப்பு பெண்தன்னுடல் தாக்குநோய்அக்கிபாசிசம்நிர்மலா சீதாராமன்திருநெல்வேலிதிரு. வி. கலியாணசுந்தரனார்விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்கணியன் பூங்குன்றனார்கும்பகோணம்பஞ்சாங்கம்ஜிமெயில்சிதம்பரம் நடராசர் கோயில்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புபதினெண்மேற்கணக்குசென்னையில் போக்குவரத்துவேலைக்காரி (திரைப்படம்)கனடாஇராவணன்சித்தர்கள் பட்டியல்சூல்பை நீர்க்கட்டிசேக்கிழார்நீர்ப்பறவை (திரைப்படம்)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)வேதாத்திரி மகரிசி🡆 More