ராமேச்சாப் மாவட்டம் (Ramechhap District) (நேபாளி: रामेछाप जिल्लाⓘ), தெற்காசியாவில் உள்ள நேபாள நாட்டில் பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும்.
அமைந்துள்ளது. இம்மாவட்டம், நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மந்தலி நகரம் ஆகும்.
ஜனக்பூர் மண்டலத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் பரப்பளவு 1,546 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ராமேச்சாப் மாவட்டத்தின் மக்கள் தொகை 2,02,646 ஆகும். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 137.4 வீதம் உள்ளனர். இம்மாவட்டத்தின் குசுந்தா இன மக்கள் தொகை அழிவின் விளிம்பு நிலையில் உள்ளது. இம்மாவட்டத்தில் நேபாள மொழி, சுனுவார் மொழி, தாமாங் மொழி, நேவாரி மொழி மற்றும் ஹாயு மொழிகள் பேசப்படுகிறது.
இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 5,000 மீட்டர் உயரத்தில் இமயமலை வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஐந்து நிலைகளில் காணப்படுகிறது.
ராமேச்சாப் மாவட்டம் நாற்பத்தி ஆறு கிராமிய நகராட்சிகளும், மந்தலி மற்றும் ராமேச்சாப் என இரண்டு நகரபுற நகராட்சிகளையும் கொண்டுள்ளது.
This article uses material from the Wikipedia தமிழ் article ராமேச்சாப் மாவட்டம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.