பதான் அரண்மனை சதுக்கம் (Patan Durbar Square) நேபாள நாட்டில் அமைந்த மூன்று அரண்மனை சதுக்கங்களில் ஒன்றானது.
இது காத்மாண்டு சமவெளியில் பதான் நகர மையத்தில் அமைந்துள்ளது. இவ்வரண்மனை சதுக்கம், யுனோஸ்கோ நிறுவனத்தால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றானது. இச்சதுக்கம் லலித்பூரை தலைநகராகக் கொண்ட நேபாள மல்ல மரபு மன்னர்களின் அரண்மனை எதிரில் கட்டப்பட்டதாகும்.
இவ்வரண்மனை சதுக்கம், நேபாள நாட்டு கட்டிடப்பாணியில் கட்டப்பட்டதாகும். இவ்வரண்மனை சதுக்கத்தின் தரை செங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டதாகும். பதான் அரணமனை சதுக்கம் பல கோயில்களும், சிற்பங்களும் கொண்டது. கோயில்களின் நுழைவாயில்கள் அரண்மனையை நோக்கி கிழக்கு முகமாக கட்டப்பட்டுள்ளது.
பதான் அரண்மனை சதுக்கத்தில் கிருஷணன் கோயில், பீமன் கோயில், விசுவநாதர் கோயில், துளஜா பவானி கோயில், கேசவ நாராயணன் சதுக்கம், மூல் சதுக்கம் மற்றும் சுந்தரி சதுக்கங்கள் அமைந்துள்ளது.
25 ஏப்ரல் 2015 நிலநடுக்கத்தின் போது பதான் அரண்மனை சதுக்கம் கடுமையாக சேதமடைந்தது.
This article uses material from the Wikipedia தமிழ் article பதான் அரண்மனை சதுக்கம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.