கிறித்தோபர் வான் பியூரர் ஐமண்டார்ப் ( Christoph von Fürer-Haimendorf 22 சூன் 1909–11 சூன் 1995) என்பவர் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த மாந்தவியல் ஆய்வறிஞர் மற்றும் நூலாசிரியர் ஆவார்.
கிறித்தோபர் வான் பியூரர் ஐமண்டார்ப் | |
---|---|
பிறப்பு | 22 சூன் 1909 வியன்னா |
இறப்பு | 11 சூன் 1995 (அகவை 85) |
பணி | மானிடவியலர், பல்கலைக்கழகப் பேராசிரியர் |
வேலை வழங்குபவர் |
|
ஆத்திரியாவில் வளமான குடும்பத்தில் பிறந்த கிறித்தோபர் மாந்தவியல் மற்றும் புதைபொருள் ஆய்வியல் ஆகியவற்றை இளமையில் கற்றார். இரவீந்திரநாத் தாகூர் பற்றிய வாழ்க்கை வரலாறு அவருடைய படைப்புகள் ஆகியவற்றைப் படித்தார்.
1936 இல் இந்தியாவுக்கு வந்து நாகர்கள் வாழ்க்கை மொழி நாகரிகம் போன்றவற்றை ஆய்வு செய்தார். இதன்பொருட்டு அந்தப் பகுதி நாகர்களுடன் வாழ்ந்து பழகி அவர்களுடைய மொழியையும் கற்றுக் கொண்டார்.
மேலும் வடகிழக்கு இந்தியாவிலும் தெலுங்கானாவிலும் நேப்பாளத்திலும் தங்கி அந்தப் பகுதி மலைவாழ் மக்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.
அசாம் மக்களின் வாழ்க்கை, அங்குள்ள சமூக இயக்கங்கள் பற்றியும் ஆய்வுகள் செய்தார்.
This article uses material from the Wikipedia தமிழ் article கிறித்தோபர் வான் பியூரர் ஐமண்டார்ப், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.