சுப்பராயலு: இந்திய அரசியல்வாதி

திவான் பகதூர் மலைய பெருமாள்அகரம் சுப்பராயுலு ரெட்டியார் (1855 – 1921) சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர் அல்லது பிரதமர் ஆவார்.

சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறையின் கீழ் நடத்தப்பட்ட முதல் சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்ற பின், மாகாணத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏழு மாத காலமே பதவியில் இருந்த அவர் ஜூலை 1921 இல் உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.

அகரம் சுப்பராயுலு ரெட்டியார்
சென்னை மாகாணத்தின் பிரதமர்
பதவியில்
டிசம்பர் 17, 1920 – ஜூலை 11, 1921
ஆளுநர்ஃப்ரீமன் ஃப்ரீமன்-தாமஸ் (வில்லிங்டன் பிரபு)
முன்னையவர்பதவி உருவாக்கபட்டது
பின்னவர்பனகல் அரசர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 15, 1855
இந்தியா இந்தியா
இறப்புநவம்பர் 1921 (வயது 66)
சென்னை
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிநீதிக்கட்சி
தொழில்வழக்கறிஞர்

பிறப்பும் படிப்பும்

சுப்பராயுலு ரெட்டியார் 1855 ஆம் வருடம் அக்டோபர் 15 ஆம் நாள் சென்னை மாகாணத்தில், தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரது தாய் மொழி தெலுங்கு. இருப்பினும் தமிழ் மொழி மீது பற்று கொண்டவர், செல்வச் செழிப்பு மிக்க விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று சட்டப் படிப்பு படித்தார்.

ஆரம்ப கால அரசியல் வாழ்க்கை

சுப்பராயுலு 1912 ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட வாரியத்தின் தலைவராகப் பதவி வகித்தார். ஆரம்ப காலத்தில் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்த அவர் 1916 ஆம் ஆண்டு காங்கிரசை விட்டு விலகினார். 1917 ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்ட வாரியத்தின் தலைவரானார். தியாகராய செட்டி, டி. எம். நாயர் ஆகியோர் தொடங்கிய நீதிக் கட்சியில் இணைந்தார். வகுப்பு வாரி இட ஒதுக்கீடு கோரி சென்னை ஆளுநர் வில்லிங்டன் பிரபுவுடன் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப் பட்ட நீதிக் கட்சி குழுவில் இடம் பெற்றிருந்தார். இவர் கடலூர் மாவட்டம் மலையபெருமாள் அகரம் எனும் சிறு கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார் இவரதுு இல்லம் இன்னும் இந்த கிராமத்தில் உள்ளது இவரது பெயருக்கு முன்னால் அகரம் எனும் பெற்றுக்கொண்டுள்ளார் அது எதற்காக என்று இன்றைய வரைக்கும் எவராலும் கண்டுபிடிக்கவில்லை இவரது நினைவாக கடலூரில் சுப்பராயலு ரெட்டியார் எனும் பெயரில் ஒரு மண்டபம் உள்ளதாக குறிப்பிடத்தக்கது

இரட்டை ஆட்சி முறையில்

1919 ஆம் ஆண்டு மொன்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சட்ட சீர்திருத்தங்களின் விளைவாக, இந்திய அரசாங்கச் சட்டம் (1919) பிரித்தானிய அரசாங்கத்தால் இயற்றப் பட்டது. இச்சட்டத்தின் விளைவாக, இந்தியாவில் மத்திய அரசிலும், மாகாணங்களிலும், இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள் துறை முதலிய முக்கிய துறைகள் பிரித்தானிய ஆளுனரின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசவையின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. சென்னை மாகாணத்தில சட்ட சபை விரிவு படுத்த்தப்பட்டு மொத்தமுள்ள 134 உறுப்பினர்களில் 98 பேர் நேரடி தேர்தலின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இம்முறையின் கீழ் சென்னை சட்டமன்றத்திற்கு நவம்பர் 1920 இல் முதல் தேர்தல் நடத்தப் பட்டது. நீதிக்கட்சி பெருவாரியான இடங்களை பிடித்தது. ஆளுனர் வில்லிங்டன் நீதிக்கட்சித் தலைவர் தியாகராய செட்டியை ஆட்சி அமைக்க அழைத்தார். ஆனால் செட்டி தனக்கு பதிலாகத் தன் கல்லூரித் தோழரான சுப்பராயுலுவை பரிந்துரை செய்தார். இதனால் டிசம்பர் 17, 1920 இல் சுப்பராயுலு சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரானார். கல்வி, சுங்கம், பொதுப் பணிகள் ஆகிய துறைகளுக்கு அவரே அமைச்சரானார். இவரது அமைச்சரவையில் இடம் பெற்ற மற்ற அமைச்சர்கள் பனகல் அரசர் ராமராயநிங்கர் (உள்ளாட்சித் துறை), கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு (வளர்ச்சித் துறை). பதவியேற்ற ஏழு மாத காலத்திற்குள் சுப்பராயுலுவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. எனவே ஜூலை 11, 1921 இல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதில் பனகல் அரசர் முதல்வரானார்.

மரணம்

சுப்பராயுலு ரெட்டியார் நவம்பர் 1921 இல் மரணமடைந்தார்.

மேற்கோள்கள்

Tags:

சுப்பராயலு பிறப்பும் படிப்பும்சுப்பராயலு ஆரம்ப கால அரசியல் வாழ்க்கைசுப்பராயலு இரட்டை ஆட்சி முறையில்சுப்பராயலு மரணம்சுப்பராயலு மேற்கோள்கள்சுப்பராயலுசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1920சென்னை மாகாணம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்திவான் பகதூர்நீதிக்கட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருப்பூர் மக்களவைத் தொகுதிநான்மணிக்கடிகைதண்டியலங்காரம்ஓம்நாயன்மார் பட்டியல்தைப்பொங்கல்வாழைப்பழம்மார்ச்சு 28கே. மணிகண்டன்திருவிளையாடல் புராணம்ஆசாரக்கோவைஇரட்சணிய யாத்திரிகம்நம்ம வீட்டு பிள்ளைபெரம்பலூர் மக்களவைத் தொகுதிதொல். திருமாவளவன்ஆரணி மக்களவைத் தொகுதிஅயோத்தி தாசர்ஐரோப்பாதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சரண்யா துராடி சுந்தர்ராஜ்சைவ சமயம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்குடும்பம்பங்குச்சந்தைகலைஞர் மகளிர் உரிமைத் தொகைமாநிலங்களவைபல்லவர்பிரேசில்செண்டிமீட்டர்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)ஐஞ்சிறு காப்பியங்கள்பிள்ளைத்தமிழ்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பச்சைக்கிளி முத்துச்சரம்சுபாஷ் சந்திர போஸ்லைலத்துல் கத்ர்ராச்மாவரைகதைபொறியியல்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சுப்பிரமணிய பாரதிநபிதமிழக வெற்றிக் கழகம்திரிசாபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்தமிழக மக்களவைத் தொகுதிகள்முக்கூடற் பள்ளுமீரா சோப்ராஅதிதி ராவ் ஹைதாரிநெசவுத் தொழில்நுட்பம்நீக்ரோஇரட்டைக்கிளவிபரிபாடல்விளம்பரம்இயேசு காவியம்குறிஞ்சிப் பாட்டுதிருத்தணி முருகன் கோயில்மயக்கம் என்னகிரிமியா தன்னாட்சிக் குடியரசுலோகேஷ் கனகராஜ்மயில்நுரையீரல் அழற்சிஎஸ். ஜெகத்ரட்சகன்வரலாறுசூரியக் குடும்பம்தங்கர் பச்சான்சப்ஜா விதைஅருந்ததியர்சைவத் திருமுறைகள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்நம்மாழ்வார் (ஆழ்வார்)தமிழ்தமிழ்ஒளிமதுராந்தகம் தொடருந்து நிலையம்சிதம்பரம் நடராசர் கோயில்மூசா🡆 More