பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வு வாரியம் (Public Enterprises Selection Board), இந்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளைத் தேர்வு செய்யும் அமைப்பாகும்.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கான சிறந்த நிர்வாகக் கொள்கையை உருவாக்கும் நோக்கத்துடன், அவற்றின் உயர் நிர்வாகப் பதவிகளுக்கான நியமனங்கள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக இத்தேர்வு வாரியம் 1987ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் கீழ் இத்தேர்வு வாரியம் செயல்படுகிறது.
இத்தேர்வு வாரியத்தின் தலைவர்/உறுப்பினர்கள், அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் அல்லது அவர் 65 வயதை அடையும் வரையில் எது முந்தையதோ அதுவரை பதவியில் இருப்பர். 65 வயது வரம்புக்கு உட்பட்டு, இரண்டாவது தவணை மறு நியமனத்தைப் பரிசீலிக்க ஒருவர் தகுதியுடையவர். இதன் தலைவர் மற்றும் இயக்குநர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் கொண்டவர்களாக இருப்பர்.
பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகளில் பின்வருவன அடங்கும்:
This article uses material from the Wikipedia தமிழ் article பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வு வாரியம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.