இந்தியா தேசிய போர் நினைவுச்சின்னம்

தேசிய போர் நினைவுச்சின்னம் (National War Memorial) என்பது இந்திய பாதுகாப்புப் படைகளை ஏனெனில் கௌரவிப்பதற்காக புது தில்லி இந்தியா வாயிலின் அருகே இந்திய அரசு கட்டிய நினைவுச்சின்னமாகும்.

இந்த நினைவுச்சின்னம் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. இந்தியா வாயில் அருகே தற்போதுள்ள விதானத்தைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. நினைவுச் சுவர் தரையிலும், இருக்கும் அழகியலுடன் இணக்கமாகவும் உள்ளது. 1947-48 இந்திய-பாக்கித்தான் போர், 1961 (கோவாபடையெடுப்பு), 1962 (சீனப்போர்), இந்தியா-பாகிஸ்தான் போர், 1965, 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர், 1987 (சியாச்சின்), 1987-88 (இலங்கை), 1999 (கார்கில்) மற்றும் பிற ஆயுத மோதல்களின் போது தியாகிகளான ஆயுதப்படை வீரர்களின் பெயர்கள் 'ஆபரேஷன் ரக்சக்' போன்ற செயல்பாடுகள் நினைவுச் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன.

தேசிய போர் நினைவுச்சின்னம்
राष्ट्रीय समर स्मारक
இந்தியா தேசிய போர் நினைவுச்சின்னம் இந்தியா
இந்தியா தேசிய போர் நினைவுச்சின்னம்
இந்தியா தேசிய போர் நினைவுச்சின்னம்
இந்தியா தேசிய போர் நினைவுச்சின்னம்
(கடிகார் எதிர் சுற்றில் மேலிருந்து) தூபியில் அழியாத சுடர், வீரமரணமடைந்த போர்வீரர்கள் பெயர் பொறிக்கப்பட்ட தியாகச் சக்கரத்தின் ஒரு பகுதி, பரம் வீர் சக்ரா பகுதியில் வீரர் ஒருவரின் மார்பளவு சிலை
போரில் இறந்த இந்திய ராணுவவீரர்களுக்காக க்கு
நிறுவப்பட்டதுசனவரி 2019
திறப்பு25 February 2019
அமைவிடம்28°36′46″N 77°13′59″E / 28.612772°N 77.233053°E / 28.612772; 77.233053
C Hexagon, Gate Circle, புது தில்லி, இந்தியா
வடிவமைப்புயோகேஷ் சந்திரகாசன், வீபீ வடிவமைப்பு ஆய்வகம், சென்னை
கல்வெட்டு
இந்தியா தேசிய போர் நினைவுச்சின்னம்
अमर जवान
शहीदों की चिताओं पर जुड़ेंगे हर बरस मेले
वतन पर मिटने वालों का यही बाकी निशाँ होगा Fares will be held everyyear on the pyres of martyrs,this will be the mark of those who perish on their homeland (தாய்நாட்டிற்காக உயிர் நீத்த போர்வீரர்கள் நினைவாக ஆண்டுதோறும் கண்காட்சி நடத்தப்படும்)
(English: "Immortal soldier"
தமிழ்: அழிவில்லா வீரர்)
புள்ளிவிவரங்கள்
ஆதாரம்: Official government website

அமைவிடம்

அருகிலுள்ள இளவரசி பூங்கா பகுதியில் ஒரு தேசிய போர் அருங்காட்சியகமும் கட்டப்பட்டுள்ளது. இளவரசி பூங்கா இந்தியா நுழைவாயிலுக்கு வடக்கே 14 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது கட்டப்பட்ட பாராக் போன்ற தங்கும் வசதிகள் உள்ளன. 1947 முதல், புதுதில்லியில் உள்ள சேவை தலைமையகத்தில் பணியமர்த்தப்பட்ட நடுத்தர அளவிலான ஆயுதப்படை அதிகாரிகளுக்கு இது குடும்பங்கள் தங்குமிடமாக செயல்பட்டு வருகிறது. முன்மொழியப்பட்ட தேசிய போர் அருங்காட்சியகம் மற்றும் தேசிய போர் நினைவுச்சின்னம் மெட்ரோ மூலம் இணைக்கப்பட்டுள்ளது. போர் நினைவு மற்றும் அருங்காட்சியகத்தின் கட்டுமானத்திற்கு 500 கோடி (அமெரிக்க $ 70 மில்லியன்) செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு

இதன் கட்டமைப்ப்பிற்காக உலகளாவிய வடிவமைப்பு போட்டி நடத்தப்பட்டது. இதன் முடிவு 2017 ஏப்ரல் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. சென்னை கட்டடக்கலை நிறுவனமான வெபே வடிவமைப்பு என்ற நிறுவனம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. அதன்படி கட்டடக்கலை வடிவமைப்பின் கருத்துருவாக்கம் மற்றும் திட்டத்தின் கட்டுமானத்தை ஒருங்கிணைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டது. தேசிய போர் நினைவுச்சின்னத்தின் பிரதான கட்டிடக் கலைஞர் சென்னை வீபே வடிவமைப்பு ஆய்வகத்தின் யோகேஷ் சந்திரகாசன் என்பவராவார். திட்டத்தை வடிவமைத்த சந்திரகாசன் கூறினார்:

“முழு கருத்தும் யுத்த நினைவுச்சின்னம் நாம் மரணத்தை துக்கப்படுத்தாத இடமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே, வீரர்களின் வாழ்க்கையை கொண்டாடுங்கள். அவர்கள் செய்த தியாகங்களுக்கு மரியாதை செலுத்துங்கள்."

தேசிய போர் நினைவு மற்றும் அருங்காட்சியகம் ஒரு சிறப்பு திட்டமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதன் "சரியான நேரத்தில் நிறைவேற்றப்படுவதற்கான" பணி தலைமை நிர்வாக அதிகாரி (பாதுகாப்பு அமைச்சகம்) மற்றும் ராணுவ பொறியாளர் சேவைகளின் கீழ் ஒரு சிறப்பு திட்டங்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது.

நினைவுச் சின்னம்

நினைவுச்சின்னம் நான்கு செறிவான வட்டங்களையும் ஒரு மைய சதுரத்தையும் கொண்டுள்ளது. அதன் அடிப்பகுதியில் அழியாத சிப்பாயை (அமர் ஜவான்) குறிக்கும் ஒரு 'நித்திய சுடர்' எரிகிறது. செறிவு வட்டங்கள் பின்வருமாறு அழைக்கப்படுகின்றன:

  • அமர் சக்கரம் (அழியாத வட்டம்)
  • வீர்தா சக்கரம் (துணிச்சல் வட்டம்)
  • தியாக சக்கரம் (தியாக வட்டம்)
  • ரக்சக் சக்கரம் (பாதுகாப்பு வட்டம்)
இந்தியா தேசிய போர் நினைவுச்சின்னம் 
தேசிய போர் நினைவுச்சின்னத்தின் பரம் வீர் சக்ரரம் பிரிவு (பரம் யோத தளம்). படத்தில் மேஜர் சோம்நாத் சர்மா, பி.வி.சி.

இந்த நான்கு செறிவான வட்டங்களும் ஒரு பண்டைய இந்திய யுத்த உருவாக்கம் சக்ர வியூகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மிக உயர்ந்த இராணுவ கௌரவமான பரம் வீர் சக்கரத்தின் 21 பெறுநர்களின் மார்பளவு சிலைகளை பரம் யோதா தளம் கொண்டுள்ளது.

காலம்

  • 1960-இந்திய ஆயுதப்படைகள் முதலில் ஒரு தேசிய போர் நினைவுச்சின்னத்தை முன்மொழிகின்றன.
  • 2006-ஒரு போர் நினைவுச்சின்னத்திற்கான ஆயுதப்படைகள் மற்றும் வீரர்களின் தொடர்ச்சியான கோரிக்கையை எதிர்கொண்டுள்ள நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசாங்கம் கோரிக்கையை ஆராய அமைச்சர்கள் குழுவை (பிரணாப் முகர்ஜி தலைமையில்) அமைத்தது. 2006 ஆம் ஆண்டில், பாதுகாப்பு அமைச்சகம் இந்தியா வாயில் அருகே போர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்த்தது. ஆனால் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்புகள் இது ஒரு பாரம்பரிய பகுதி என்றும் அதை கட்டக்கூடாது என்றும் கூறுகின்றன.
  • 2012 அக்டோபர் 20, அன்று 50 ஆண்டுகளுக்குப் பிறகு, 1962ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி இந்திய எல்லை பாதுகாப்புக்கு எதிராக சீன மக்கள் விடுதலைப்படை நடத்திய தாக்குதலின் ஆண்டு நிறைவை அரசாங்கம் குறிக்கிறது. 1962ஆம் ஆண்டு போரில் கொல்லப்பட்ட இந்திய வீரர்களை கௌரவிப்பதற்காக அமர் ஜவான் ஜோதியில் நடைபெற்ற ஒரு விழாவில், அ. கு. ஆண்டனி (பாதுகாப்பு அமைச்சர்) ஒரு தேசிய போர் நினைவுச்சின்னத்திற்கான இந்திய ஆயுதப்படைகளின் நீண்டகால கோரிக்கையை அரசாங்கம் ஒப்புக் கொண்டதாகவும், அது இந்தியா வாயில் அருகே கட்டப்படும் என்றும் அறிவித்தார். அமைச்சர்கள் குழு இந்த விவகாரத்தில் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைத்துள்ளதாகவும், ஆயுதப்படைகள் இறுதியாக அவர்களின் விருப்பத்தை பெறும் என்றும் அவர் கூறுனார். தில்லி முதல்வர் சீலா தீக்சித் இந்த திட்டத்தை எதிர்த்தார்.
  • பிப்ரவரி 2014-2014 மக்களவைத் தேர்தலையொட்டி, போர் நினைவுச்சின்னத்தை நிர்மாணிக்க முந்தைய அரசாங்கம் எவ்வாறு தவறிவிட்டது என்பது பற்றி நரேந்திர மோதி பேசுகிறார்.
  • 7 அக்டோபர் 2015-போர் நினைவுச்சின்னத்தை கட்டும் திட்டத்தை மத்திய அமைச்சரவை நிறைவேற்றியது. இது நினைவு மற்றும் அருங்காட்சியகத்திற்கு ₹500 கோடியையும், நினைவுச் சின்னத்திற்கு மட்டும் 6,176 கோடியையும் அனுமதிக்கிறது.
  • மே 2016-இளவரசி பூங்கா வளாகம் தேசிய போர் அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க ஏற்ற இடமாக இருக்கும் என்று அதிகாரமளிக்கப்பட்ட அப்பெக்ஸ் வழிநடத்தல் குழு எடுத்த முடிவை மத்திய அமைச்சரவை அறிவிக்கிறது. அக்டோபர் 2015-ல் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தபடி தேசிய போர் நினைவுச் சின்னம் 'சி' அறுகோணத்தில் கட்டப்பட்டது.
  • 30 ஆகத்து 2016-MyGov.in வலை இணையதளத்தில் தேசிய போர் நினைவு மற்றும் அருங்காட்சியகத்திற்கான உலகளாவிய வடிவமைப்பு போட்டி தொடங்கப்பட்டது.
  • ஏப்ரல் 2017-உலகளாவிய வடிவமைப்பு போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை சார்ந்த எஸ்.பி + ஒரு ஸ்டுடியோவின் திட்டம் தேசிய போர் அருங்காட்சியகத்தின் வடிவமைப்பில் வெற்றி பெறுகிறது. நினைவுச்சின்னத்தை வடிவமைப்பதில் சென்னையைச் சேர்ந்த வெபே வடிவமைப்பு நிறுவனத்தின் திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. "தேசிய போர் நினைவுக்கான உலகளாவிய வடிவமைப்பு போட்டிக்கு" மொத்தம் 427 சமர்ப்பிப்புகள் பெறப்பட்டன. மேலும் "இந்திய தேசிய போர் அருங்காட்சியகத்திற்கான உலகளாவிய கட்டடக்கலை போட்டிக்கு" 268 சமர்ப்பிப்புகள் பெறப்பட்டன. இதன் நடுவராக கட்டிடக் கலைஞரும் திட்டமிடுபவருமான கிறிஸ்டோபர் பென்னிங்கர் தலைமை தாங்கினார்.
  • 15 ஆகத்து 2018-தேசிய போர் நினைவுச்சின்னம் அதன் தொடக்கத்திற்கான முதல் காலக்கெடுவை தவறவிட்டது.
  • 1 சனவரி 2019-தேசிய போர் நினைவுச்சின்னத்தின் கட்டுமானம் முடிந்தது (அருங்காட்சியகம் அல்ல).
  • 25 பிப்ரவரி 2019-தேசிய போர் நினைவுச்சின்னம் திறக்கப்பட்டது.
  • 30 மே 2019 - நரேந்திர மோதி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் முன் தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்று இந்தியாவின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
  • 15 ஆகத்து 2019 - 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதன்முறையாக இந்தியாவின் வாயிலுக்குப் பதிலாக ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த இந்திய குடியரசுத் தலைவர் தேசிய போர் நினைவகத்தில் மலர்வளையம் வைத்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.
  • 26 சனவரி 2020 - குடியரசு தினத்தன்று முதன்முறையாக 71வது குடியரசு தின அணிவகுப்பு தொடங்கும் முன் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோதி, தேசிய போர் நினைவகத்தில் மலர்வளையம் வைத்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.
  • 26 ஜூலை 2020 - கார்கில் விஜய் திவாஸின் 21வது ஆண்டு நினைவு தினம், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர், ராஜ்நாத் சிங், முப்படைத் தலைவர்களுடன் அஞ்சலி செலுத்தினார்.
  • 16 திசம்பர் 2020 - பிரதமர் நரேந்திர மோதி தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதுடன், அமர் ஜவான் ஜோதியிலிருந்து ஸ்வர்னிம் விஜய் மஷால் (தங்க வெற்றி ஜோதி) ஏற்றி, பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய வெற்றியின் பொன்விழா ஆண்டைக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

மேற்கோள்கள்

Tags:

இந்தியா தேசிய போர் நினைவுச்சின்னம் அமைவிடம்இந்தியா தேசிய போர் நினைவுச்சின்னம் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்புஇந்தியா தேசிய போர் நினைவுச்சின்னம் நினைவுச் சின்னம்இந்தியா தேசிய போர் நினைவுச்சின்னம் காலம்இந்தியா தேசிய போர் நினைவுச்சின்னம் மேற்கோள்கள்இந்தியா தேசிய போர் நினைவுச்சின்னம்1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்இந்திய அரசுஇந்திய சீனப் போர்இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948இந்தியப் பாதுகாப்புப் படைகள்இந்தியா-பாகிஸ்தான் போர், 1965இந்தியாவின் வாயில்கார்கில் போர்கோவா படையெடுப்புபவான் நடவடிக்கைபிலாபாண்ட் லா கணவாய்புது தில்லி

🔥 Trending searches on Wiki தமிழ்:

களப்பிரர்கபிலர் (சங்ககாலம்)மாமல்லபுரம்வன்னியர்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370வளையாபதிகஞ்சாபள்ளுதஞ்சைப் பெருவுடையார் கோயில்தொழினுட்பம்கார்லசு புச்திமோன்நிறைவுப் போட்டி (பொருளியல்)விளையாட்டுசிதம்பரம் நடராசர் கோயில்காடுவெட்டி குருதினமலர்சே குவேராஅகநானூறுதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்குறவஞ்சிஅயோத்தி தாசர்பர்வத மலைபாண்டியர்கூத்தாண்டவர் திருவிழாஅரிப்புத் தோலழற்சிசச்சின் டெண்டுல்கர்இந்திய உச்ச நீதிமன்றம்தனுசு (சோதிடம்)சித்திரைத் திருவிழாநாயன்மார்வைதேகி காத்திருந்தாள்வாசுகி (பாம்பு)செவ்வாய் (கோள்)சிவாஜி (பேரரசர்)திருமுருகாற்றுப்படைகேள்விமலையாளம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)பால்வினை நோய்கள்ஈ. வெ. இராமசாமிஆங்கிலம்வெண்பாநீரிழிவு நோய்மறைமலை அடிகள்முதலாம் உலகப் போர்சங்கம் (முச்சங்கம்)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்முக்கூடற் பள்ளுதமிழக மக்களவைத் தொகுதிகள்திரைப்படம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்நயன்தாராஆசிரியர்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)முக்குலத்தோர்வேலுப்பிள்ளை பிரபாகரன்கடலோரக் கவிதைகள்குலசேகர ஆழ்வார்ஆக்‌ஷன்ஐங்குறுநூறு - மருதம்வளைகாப்புகிழவனும் கடலும்கருப்பைஇந்திய நாடாளுமன்றம்பலாயாழ்ரஜினி முருகன்தலைவி (திரைப்படம்)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்திருக்குர்ஆன்வேதநாயகம் பிள்ளைகுண்டூர் காரம்வெப்பநிலைஇரா. இளங்குமரன்செயற்கை மழைகுற்றியலுகரம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைசிலம்பம்🡆 More