கிருஷ்ண ஜெயந்தி

சிரீ கிருட்டிண செயந்தி (சமசுகிருதத்தில் கிருட்டிண சென்மாட்டமி (कृष्ण जन्माष्टमी)), ஆண்டுதோறும் கிருட்டிணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும்.

ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது. கிரெகொரியின் நாட்காட்டியின் ஆகத்து அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருட்டிண செயந்தி கொண்டாடுகிறார்கள். கோகுலாட்டமி என்று தென்னிந்தியாவில் இவ்விழா குறிக்கப்படுகிறது.

கிருட்டிண சென்மாட்டமி
கிருஷ்ண ஜெயந்தி
கிருட்டிணனின் படம்
பிற பெயர்(கள்)சென்மாட்டமி. சிரீ கிருட்டிண செயந்தி
கடைபிடிப்போர்இந்து
வகைசமயம்
அனுசரிப்புகள்பூசை, வேண்டுதல் மற்றும் விரதம்
நாள்சிரவணம், கிருட்டிண பட்சம், அட்டமி
கிருஷ்ண ஜெயந்தி
கிருட்டிண செயந்தி விழா சமயத்தில் விற்கப்படும் கிருட்டிணர் சிலைகள்
கிருஷ்ண ஜெயந்தி
மும்பையில் கோவிந்தாக்கள் தயிர்க்கலசத்தை எட்ட மனித நாற்கூம்பு அமைத்தல்

இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. 1982 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு பொது விடுமுறை அளித்துள்ளது.

வட இந்தியாவில் கிருட்டிண செயந்தி

ராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும். மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு) அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அரசியல்கட்சிகளும், வணிக நிறுவனங்களும் புரவல் நல்கும் இவ்விழாக்களில் வெண்ணைத்தாழியை அடைந்தவர்களுக்கு பெரும் நிதிப் பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும் போது, தண்ணீர் பீய்ச்சி அடித்து, அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது.

தென்னிந்தியாவில் கிருட்டிண செயந்தி

கிருஷ்ண ஜெயந்தி
தென்னிந்திய வீடு ஒன்றில் சிரீ செயந்தி கொண்டாடப் படுகிறது.
  • தென்னிந்தியாவில் சிரீசெயந்தி, சென்மாட்டமி, கோகுலாட்டமி என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் மாலை நேரத்தில் சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது.
  • அனைத்து சமுதாய பண்டிகையாக நடைபெறுகிறது.

கேரளாவில் குருவாயூர் கோவிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை கிருட்டிண செயந்தி. கிருட்டிண செயந்தி அன்று குருவாயூர் கோவிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர்.

கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால், பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு, குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

Tags:

ஆகத்துஆவணிஇந்துகிருட்டிணன்கிரெகொரியின் நாட்காட்டிசமசுகிருதம்செப்டம்பர்தென்னிந்தியாரோகிணி நட்சத்திரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் நீதி நூல்கள்டெல்லி கேபிடல்ஸ்நிலாஇடைச்சொல்பிரேமம் (திரைப்படம்)யாதவர்அரண்மனை (திரைப்படம்)தமன்னா பாட்டியாபுங்கைபஞ்சபூதத் தலங்கள்திருவாசகம்இந்திய வரலாறுசித்ரா பௌர்ணமிமனித எலும்புகளின் பட்டியல்கில்லி (திரைப்படம்)கட்டுரைதசரதன்மான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்உத்தரகோசமங்கைமரகத நாணயம் (திரைப்படம்)இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்பொது ஊழிவிளையாட்டுமியா காலிஃபாதமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்திருவிளையாடல் புராணம்திரு. வி. கலியாணசுந்தரனார்நுரையீரல் அழற்சிகள்ளழகர் கோயில், மதுரைவிசயகாந்துதிருமால்விஷ்ணுஉன்னை நினைத்துகணபதி பி. ராஜ் குமார்புதிய மன்னர்கள்பெருஞ்சீரகம்பார்க்கவகுலம்ஐக்கிய நாடுகள் அவைசிறுநீரகம்இராவணன்இந்திய அரசியலமைப்புகருப்பை நார்த்திசுக் கட்டிதமிழர் நெசவுக்கலைமஞ்சும்மல் பாய்ஸ்நுரையீரல்கள்ளர் (இனக் குழுமம்)முயலுக்கு மூணு கால்கா. காளிமுத்துவாணிதாசன்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிதங்க தமிழ்ச்செல்வன்தாயுமானவர்மாநிலங்களவைமு. க. தமிழரசுகுறை ஒன்றும் இல்லை (பாடல்)சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஐம்பெருங் காப்பியங்கள்விவேக் (நடிகர்)உ. வே. சாமிநாதையர்கார்த்திக் (தமிழ் நடிகர்)மாடுபெருமாள் திருமொழிசிலம்பம்இலட்சம்ஸ்ரீலீலாஓ. பன்னீர்செல்வம்விநாயகர் அகவல்திருவிழாவினோஜ் பி. செல்வம்தினகரன் (இந்தியா)திருமணம்சமஸ்புரோஜெஸ்டிரோன்இராகுல் காந்திஅறிவு மேலாண்மைதொல்காப்பியர்தகவல் தொழில்நுட்பம்காச நோய்🡆 More