கருணை (Kindness) என்பது நன்நெறி, இனிய மனநிலை மற்றும் மற்றவர்களுக்காக கவலை கொள்ளும் மன நிலையைக் குறிக்கும் ஒரு நடத்தை ஆகும்.
இது ஒரு நல்லொழுக்கம் எனவும் அறியப்படுகிறது, பல மதங்களில் மதிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரிஸ்டாட்டில், அவரது "சொல்லாட்சிக் கலை" (Rhetoric) புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில், தேவைக்கேற்றவாறு உதவுவதும், எதையும் எதிர்பாராமல் உதவுவதும், உதவி பெறுபவரின் நன்மையைக் கருதி செய்வது கருணை" என வரையறுக்கிறார். கருணையும் அன்பும் "மனித உடலை குணப்படுத்தும் மூலிகைகள் மற்றும் முகவர்கள்" என்று பிரீட்ரிக் நீட்சே வாதிட்டார். இரக்கம் நல்லொழுக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மெகர் பாபாவின் போதனைகளில் கடவுள் இரக்கம் காட்டுகிறார், கடவுளது அன்பற்ற இரக்கத்தை கற்பனை செய்வது முடியாத காரியம் என்று குறிப்பிட்டுள்ளாா். கருணையே கடவுளை அடையும் எளிய வழி.
This article uses material from the Wikipedia தமிழ் article கருணை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.