பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார்ⓘ வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் ஆவார்.

காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் திருவெஃகா எனும் பகுதியில்லுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவிலில் உள்ள பொய்கையில் பிறந்தவர். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப்படுகின்றது. முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.

பொய்கையாழ்வார்
பொய்கையாழ்வார்
ஆழ்வர்களில் முதன்மையானவர் அவர்.
பிறப்புகாஞ்சிபுரம், தமிழ்நாடு
தத்துவம்விசிஷ்டாத்வைதம்
குருசேனை முதலியார்
இலக்கிய பணிகள்முதலாம் திருவந்தாதி

பெயர்க்காரணம்

காஞ்சிபுரத்தில் பொற்றாமரைப் பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் எனப் பெயர் பெற்றார்.

பாஞ்சஜன்ய அம்சம்

சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஆறு ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது வைணவ கொள்கை. இதன்படி பொய்கையாழ்வார் பாஞ்சஜன்யம் எனப்படும் புனித சங்கின் அம்சம் ஆவார்.

முதலாழ்வார்கள்

இவர் பேயாழ்வார், பூதத்தாழ்வார் எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார். இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்க துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.

கால நிர்ணயம்

ஆழ்வார் மங்களாசாசனம் செய்த திருக்கோவில்கள்

திருக்கோவில் இடம் படம் திருமால்-திருமகள்
1. திருவரங்கம் 10°51′45″N 78°41′23″E / 10.8625°N 78.689722°E / 10.8625; 78.689722
பொய்கையாழ்வார் 
1 பாசுரம்
2. திருவெக்கா 12°49′26″N 79°42′43″E / 12.824°N 79.712°E / 12.824; 79.712
பொய்கையாழ்வார் 
1 பாசுரம்
3. திருக்கோயிலூர் 11°58′01″N 79°12′07″E / 11.966944°N 79.201944°E / 11.966944; 79.201944
பொய்கையாழ்வார் 
4. திருப்பரமபதம்
பொய்கையாழ்வார் 
Vishnu, Lord of Vaikuntha
5. திருப்பதி 13°08′35″N 79°54′25″E / 13.143°N 79.907°E / 13.143; 79.907
பொய்கையாழ்வார் 
6. திருப்பாற்கடல்

இறைவனின் நாடகம்

இந்து சமயத்தாரால், குறிப்பாக வைணவப்பிரிவினரால், நம்பிக்கையுடன் போற்றப்படும் இவ்வரலாறு சுவை மிகுந்தது. இறைவன், இவர்களால் உலகை உய்விக்க கருதித் திருக்கோவலூரில், ஒரு வீட்டின் இடைகழியில் மழை பெய்யும் ஒரு நாள் இரவில் ஒருங்கிணைத்தான். எவ்வாறெனில், தனித்தனியாகத் தலயாத்திரை மேற்கொண்ட மூன்று ஆழ்வார்களும் திருக்கோவலூரில் ஒரே சமயத்தில் நுழைய பெருமழை உண்டானது. மழைக்கு ஒதுங்கும் பொருட்டு ஒரு குடிசையை நெருங்க அவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் எனும் அளவில் இருக்க இம்மூவரும் அங்குச் சிறிது நின்றுகொண்டிருக்க நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான் இறைவன்.

நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், பொய்கையார் பூமியாகிற தகழியில்(அகல்) கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தார் அன்பாகிய தகழியில்(அகல்) ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார். இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார். பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.இவ்வரலாற்றின் உட்பொருள் யாதெனில் பொய்கையாரின் செயல் புற இருள் நீக்கியது, பூதத்தார் செயல் அக இருளை நீக்கியது. அக இருள், புற இருள் இவ்விரண்டும் நீங்கினால் பரமனைக் காணலாம். ஆக முதல் இரண்டு ஆழ்வார்கள் செயல்கள் அக, புற இருள் நீக்க பேயாழ்வார் இறைவனின் வடிவழகை அன்பெனும் வெளிச்சத்தில் கண்டார் என்பதாம்.

மூன்று திருவந்தாதிகள்

அவ்வானந்தம் உள்ளடங்காமல் மேலே வழிந்து செய்யுள் வடிவமாக வெளி வரலாயிற்று. அச்செய்யுள் தொகுதியே முறையே முதல் திருவந்தாதி (பொய்கையாருடையது),

இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாருடையது),

மூன்றாம் திருவந்தாதி (பேயாருடையது) எனப்பெயர் பெற்றன. இறைவனின் நாடகம் உண்மையில் நடந்தது என்று இந்து சமயத்தார் நம்புவதற்கு இம்மூன்று திருவந்தாதிகளிலுள்ள பாடல்களே முக்கிய சான்றுகளாகின்றன.

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

பொய்கையாழ்வார் பெயர்க்காரணம்பொய்கையாழ்வார் பாஞ்சஜன்ய அம்சம்பொய்கையாழ்வார் முதலாழ்வார்கள்பொய்கையாழ்வார் ஆழ்வார் மங்களாசாசனம் செய்த திருக்கோவில்கள்பொய்கையாழ்வார் இறைவனின் நாடகம்பொய்கையாழ்வார் மூன்று திருவந்தாதிகள்பொய்கையாழ்வார் வெளியிணைப்புகள்பொய்கையாழ்வார் மேற்கோள்கள்பொய்கையாழ்வார்ஆழ்வார்கள்ஐப்பசிகாஞ்சிபுரம்திருவெக்கா சொன்ன வண்ணம்செய்த பெருமாள் கோயில்திருவோணம் (பஞ்சாங்கம்)படிமம்:Ta-பொய்கையாழ்வார்.oggமுதலாம் திருவந்தாதிவிஷ்ணுவைணவம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மஞ்சள் காமாலைதமிழர் பண்பாடுஎழுத்து (இலக்கணம்)மங்கலதேவி கண்ணகி கோவில்திருவண்ணாமலைகளப்பிரர்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஉலக சுற்றுச்சூழல் நாள்வானிலைதீரன் சின்னமலைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்யாதவர்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிதமிழ் தேசம் (திரைப்படம்)சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்வயாகராஅவிநாசி அவிநாசியப்பர் கோயில்அரச மரம்கருச்சிதைவுசேரர்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்புனித ஜார்ஜ்இட்லர்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஜல் சக்தி அமைச்சகம்எட்டுத்தொகைதமிழ் மாதங்கள்ஜீரோ (2016 திரைப்படம்)பிள்ளைத்தமிழ்நற்றிணைஉயிரளபெடைபல்லவர்சென்னை சூப்பர் கிங்ஸ்ஜவகர்லால் நேருதிருவள்ளுவர்சத்திமுத்தப் புலவர்பாவலரேறு பெருஞ்சித்திரனார்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்நன்னூல்இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)சிறுபாணாற்றுப்படைசதுரங்க வேட்டை 2 (திரைப்படம்)மனித உரிமைகள்ளுபுற்றுநோய்கணினிர. பிரக்ஞானந்தாதமிழ்நாடு சட்டப் பேரவைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சூரரைப் போற்று (திரைப்படம்)விவேகானந்தர்கள்ளழகர் கோயில், மதுரைநாடகம்இந்திய வரலாறுசெஞ்சிக் கோட்டைஇலங்கை உணவு முறைகள்தமிழ் விக்கிப்பீடியாதேசிய அடையாள அட்டை (இலங்கை)மலைபடுகடாம்யுகம்பெரியபுராணம்ம. பொ. சிவஞானம்கிராம சபைக் கூட்டம்மழைநீர் சேகரிப்புசுபாஷ் சந்திர போஸ்அசுவத்தாமன்விஜய் வர்மாஅயோத்தி தாசர்நயன்தாராமலேரியாதிருப்போரூர் கந்தசாமி கோயில்தட்டம்மைதினமலர்மதுரகவி ஆழ்வார்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019நாயன்மார்கொடைக்கானல்மெய்வைகை🡆 More