பேயாழ்வார்: பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்

பேயாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்.

முதல் ஆழ்வார்கள் எனப்படும் மூன்று ஆழ்வார்களுள் ஒருவர். திருமயிலை என வழங்கிய மயிலாப்பூரைச் சேர்ந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் உள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் இவராவார், இது நூறு வெண்பாக்களைக் கொண்டது.

பேயாழ்வார்
பிறப்புதிருமயிலை, சென்னை, தமிழ்நாடு
குருசேனை முதலியார்

அம்சம்

சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்று வைணவம் நம்புகின்றது. இதன்படி பேயாழ்வார் நந்தகம் எனப்படும் வாளின் அம்சம் கொண்டவர் என்கின்றனர்.

முதலாழ்வார்கள்

இவர் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார்.இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்க துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.

கால நிர்ணயம்

இறைவனின் நாடகம்

இந்து சமயத்தாரால், குறிப்பாக வைணவப்பிரிவினரால், நம்பிக்கையுடன் போற்றப்படும் இவ்வரலாறு சுவை மிகுந்தது. இறைவன், இவர்களால் உலகை உய்விக்க கருதித் திருக்கோவலூரில், ஒரு வீட்டின் இடைகழியில் மழை பெய்யும் ஒரு நாள் இரவில் ஒருங்கிணைத்தான். எவ்வாறெனில், தனித்தனியாகத் தலயாத்திரை மேற்கொண்ட மூன்று ஆழ்வார்களும் திருக்கோவலூரில் ஒரே சமயத்தில் நுழைய பெருமழை உண்டானது. மழைக்கு ஒதுங்கும் பொருட்டு ஒரு குடிசையை நெருங்க அவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் எனும் அளவில் இருக்க இம்மூவரும் அங்குச் சிறிது நின்றுகொண்டிருக்க நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான் இறைவன்.

நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், பொய்கையார் பூமியாகிற தகழியில்(அகல்) கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தார் அன்பாகிய தகழியில்(அகல்) ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார். இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார். பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.இவ்வரலாற்றின் உட்பொருள் யாதெனில் பொய்கையாரின் செயல் புற இருள் நீக்கியது, பூதத்தார் செயல் அக இருளை நீக்கியது. அக இருள், புற இருள் இவ்விரண்டும் நீங்கினால் பரமனைக் காணலாம். ஆக முதல் இரண்டு ஆழ்வார்கள் செயல்கள் அக, புற இருள் நீக்க பேயாழ்வார் இறைவனின் வடிவழகை அன்பெனும் வெளிச்சத்தில் கண்டார் என்பதாம்.

மூன்று திருவந்தாதிகள்

அவ்வானந்தம் உள்ளடங்காமல் மேலே வழிந்து செய்யுள் வடிவமாக வெளி வரலாயிற்று. அச்செய்யுள் தொகுதியே முறையே முதல் திருவந்தாதி (பொய்கையாருடையது), இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாருடையது), மூன்றாம் திருவந்தாதி (பேயாருடையது) எனப்பெயர் பெற்றன. இறைவனின் நாடகம் உண்மையில் நடந்தது என்று இந்து சமயத்தார் நம்புவதற்கு இம்மூன்று திருவந்தாதிகளிலுள்ள பாடல்களே முக்கிய சான்றுகளாகின்றன.

ஆழ்வார் மங்களாசாசனம் செய்த திருக்கோவில்கள்

  1. திருப்பதி
  2. திருப்பாற்கடல்
  3. திருவேளுக்கை
  4. திருவரங்கம்
  5. கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்
  6. உப்பிலியப்பன் கோயில்
  7. திருப்பரமபதம்
  8. திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்
  9. கள்ளழகர் கோயில், மதுரை
  10. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்
  11. திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்
  12. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்
  13. சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்
  14. அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில்

சைவமும், வைணவமும்

இந்து சமயத்தின் பிரிவுகளான சைவம், வைணவம் என்பவற்றுக் கிடையே போட்டி நிலவிய கால கட்டத்தில், இவ்விரு சமயப் பிரிவுகளிடையே ஒற்றுமை காண விழைந்தவர் பேயாழ்வார் எனக் கருதப்படுகிறார். இவர் பாடிய பாசுரங்களிலே இதற்குச் சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒரு பாசுரம்:

    தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்,
      சூழ் அரவும் பொன் நாணும்தோன்றுமால் --சூழும்
    திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
      இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து.

மேற்கோள்கள்

Tags:

பேயாழ்வார் அம்சம்பேயாழ்வார் முதலாழ்வார்கள்பேயாழ்வார் இறைவனின் நாடகம்பேயாழ்வார் மூன்று திருவந்தாதிகள்பேயாழ்வார் ஆழ்வார் மங்களாசாசனம் செய்த திருக்கோவில்கள்பேயாழ்வார் சைவமும், வைணவமும்பேயாழ்வார் மேற்கோள்கள்பேயாழ்வார்ஆழ்வார்கள்திருமயிலைநாலாயிரத்திவ்ய பிரபந்தம்மயிலாப்பூர்வெண்பாவைணவம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உன்னை நினைத்துதமிழர் விளையாட்டுகள்சிலம்பரசன்திணை விளக்கம்இந்திய வரலாறுதகவல் தொழில்நுட்பம்ஈரோடு தமிழன்பன்திதி, பஞ்சாங்கம்இடைச்சொல்இந்திய புவிசார் குறியீடுஉரிச்சொல்சிவனின் 108 திருநாமங்கள்வினையெச்சம்தேர்தல் மைகூத்தாண்டவர் திருவிழாதிணைபோக்கிரி (திரைப்படம்)தமிழ்ஐக்கிய நாடுகள் அவைரெட் (2002 திரைப்படம்)புதுப்பிக்கத்தக்க ஆற்றல்திருமலை நாயக்கர் அரண்மனைபீப்பாய்மனித உரிமைகில்லி (திரைப்படம்)இராவணன்அமெரிக்க ஐக்கிய நாடுகள்தொழிற்பெயர்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுதிருவிளையாடல் புராணம்வினைச்சொல்ஜெயமோகன்விவேகானந்தர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)கிரியாட்டினைன்காளை (திரைப்படம்)தமிழ் நாடக வரலாறுபாரதிதாசன்இதயம்காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்நாளந்தா பல்கலைக்கழகம்கலாநிதி மாறன்முதலாம் இராஜராஜ சோழன்ஆண்டாள்பொன்னுக்கு வீங்கிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)தாவரம்இணைச்சொல்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்புவி சூடாதல்திவ்யா துரைசாமிமத்தி (மீன்)கங்கைகொண்ட சோழபுரம்முடக்கு வாதம்கண்ணாடி விரியன்வன்னியர்இரட்டைக்கிளவிகம்பராமாயணத்தின் அமைப்புகொங்கு நாடுசூழலியல்கொங்கு வேளாளர்உயிர் உள்ளவரை காதல்மனித எலும்புகளின் பட்டியல்பௌத்தம்குணங்குடி மஸ்தான் சாகிபுமறவர் (இனக் குழுமம்)தமிழ்நாடுஈ. வெ. இராமசாமிதிருச்சிராப்பள்ளிஅறிவுகலிங்கத்துப்பரணிதமிழ் தேசம் (திரைப்படம்)மகேந்திரசிங் தோனிபாலைவனம்மத கஜ ராஜாஅரச மரம்🡆 More