பெரியம்மை (smallpox), மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும்.
இது வரியோலா மேசர் (Variola major) மற்றும் வரியோலா மைனர் (Variola minor) ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது. இவற்றுள் வரியோலா மேசர் அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும். இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 விழுக்காட்டினர் இறந்து விடுகின்றனர். வரியோலா மைனர் கிருமி தாக்கியவர்களுள் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே இறக்கின்றனர். உயிர் பிழைத்தவர்களில் பலரும், (ஒன்று அல்லது) இரண்டு கண்கள் குருடாவதுடன், நீங்காத தழும்புகளையும் பெறுகின்றனர். 20ஆம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக 300-500 மில்லியன் மக்கள் இறந்தனர். 1967ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அந்த ஆண்டு மட்டும் 15 மில்லியின் மக்கள் அந்நோய்யால் பாதிக்கப்பட்டு அவர்களுள் இரண்டு மில்லியன் மக்கள் இறந்தனர். எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய இராச்சியத்தில் ஜேனட் பார்க்கர் என்பவர் இந்நோய் தாக்கி இறந்தார். அதன் பின் இந்நோயின் தாக்குதல் எங்கும் அறியப்படவில்லை.
பெரியம்மை Smallpox | |
---|---|
[[File:=|frameless|upright=1.36]] | |
பெரியம்மையால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | infectious diseases |
ஐ.சி.டி.-10 | B03. |
ஐ.சி.டி.-9 | 050 |
நோய்களின் தரவுத்தளம் | 12219 |
மெரிசின்பிளசு | 001356 |
ஈமெடிசின் | emerg/885 |
பேசியண்ட் ஐ.இ | பெரியம்மை |
ம.பா.த | D012899 |
Variola virus (Smallpox) | |
---|---|
தீநுண்ம வகைப்பாடு | |
குழு: | Group I (dsDNA) |
குடும்பம்: | Poxviridae |
பேரினம்: | Orthopoxvirus |
இனம்: | Variola vera |
பெரியம்மையின் முதல் தோற்றம் இன்னும் தெரியவில்லை. ஆனால் பல நூற்றாண்டுகளாக, இந்தக் கொடிய நோய், உலகின் பல்வேறு இடங்களில் தாக்கியுள்ளது. இதற்கான காலவரிசை கீழே உள்ளது
பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர், குணமடையும் முன் கீழ் காணும் கட்டங்களை கடக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திற்கும் சில அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் உள்ளன.
1) நோயரும்பல் : இந்தக் கால கட்டத்தில், பெரியம்மையின் நோய்க்கிருமி மனிதனின் உடலில் பெருகிக்கொண்டிருக்கும். ஆனால் எந்த அறிகுறியும் தெரியாது.
2) ஆரம்ப அறிகுறிகள் : இந்த கட்டத்தில், நோயுற்றவர்கள் எந்த வேலையும் செய்ய இயலாத அளவிற்கு, சோர்வு அடைந்திருப்பார்கள்.
3) முற்கால வேனற்கட்டி : சின்ன வேனற்கட்டிகள், முதலில் நாக்கிலோ அல்லது வாயினிலோ வரும். இந்த கட்டிகள் புண்னாகி வெடித்தப்பின், இந்த நோய்கிருமி பெரிய அளவில் உடம்பு முழுவதும் பரவும். முகத்தில் ஆரம்பித்து, 24 மணி நேரத்திற்குள், கை மற்றும் கால் வரை, உடம்பில் எல்லா இடங்களிலும் பருக்கள் தென்பட ஆரம்பிக்கும். இப்படி கட்டிகள் தென்படும் தருணத்தில் காய்ச்சல் சற்று தனிந்திருக்கும். நான்காம் நாளில், எல்லா கட்டிகளும் தடித்து புண்ணாகி விடும். இந்த புண்ணில் தடித்த, தெளிவற்ற திரவம் இருக்கும். இந்த தருணத்தில் காய்ச்சல் மீண்டும் அதிகரிக்கும்
4) சீழ் கொப்புளங்கள் மற்றும் பொருக்குகள் : இந்த கட்டத்தில், உடம்பில் உள்ள புண்கள், கொப்புளங்களாக மாறும். இந்த கொப்புளங்களின் தன்மை, சற்று எழுப்பப்பட்ட, வட்டமாகவும் தொடுவதற்கு தோலுக்குள் பட்டாணி இருப்பது போல தோன்றும். சுமார் 5 நாட்களுக்கு பிறகு, இந்த கொப்புளங்களின் மேல் ஓடுகள் போன்று உருவெடுக்கும், பின்னர் பொருக்களாகும். பொருக்கள் என்பது காய்ந்த புண்ணின் மேல் படிந்திருக்கும் ஓடு போன்றது.
5) பொருக்குகள் உதிர்வது : இந்த கட்டத்தில், காய்ந்த பொருக்கள் உதிர ஆரம்பிக்கும். காய்ந்த போதிலும், இன்னும் பரவும் தன்மை கொண்டது. ஆகையால் கவனமாக இருக்க வேண்டும். உதிர்ந்தப் பின், உடம்பில் தழும்புகள் இருக்கும்.
6) பொருக்கின்மை : எல்லா பொருக்குகளும் உதிர்ந்தப் பின், நோய் பரவாது. பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டவர், முழுவதும் குணமடைவதற்கான அறிகுறி இது.
பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை ஒன்றும் கிடையாது. எந்த ஒரு சிகிச்சையும் பயனளிக்காது. ஆயினும், சில சமயங்களில் நச்சுயிருக்கு எதிரான சில மருந்துகளும், நுண்ணுயிர்க்கு எதிரான சில மருந்துகளும் பரிந்துரைக்கப்படலாம். இவை பெரியம்மையின் நச்சுயிரை எதிர்ப்பதற்காக இல்லை. பெரியம்மையால் பாதித்த போது மற்ற நோய்கள் தாக்கக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படலாம்.
பெரியம்மைக்கு எந்த மருத்துவ சிகிச்சையும் இல்லாததால், இதனை வருமுன் காப்பதே நல்லது. இதற்காக தடுப்பூசிகள் உள்ளன.
பெரியம்மை தொற்றும் தன்மை கொண்டிருந்தமையால், இது மிகவும் கொடிய நோயாக கருதப்பட்டது. பெரியம்மைக்கு தடுப்பு ஊசிகள் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலே இருந்த போதிலும், ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களில் இந்த நோய் பரவிக்கொண்டு தான் இருந்தது. 1959ம் ஆண்டில் தான், உலக சுகாதார மையம், பெரியம்மையை முற்றிலுமாக நீக்க முடிவெடுத்தது. நிதி பற்றாகுறையினாலும், போதுமான தன்னார்வத் தொண்டர்கள் இல்லாததாலும், இதனை வெற்றிகரமாக செயலாக்க இயலவில்லை. 1967ம் ஆண்டில், மீண்டும் இந்த முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது.
பெரியம்மையின் கடைசி தோற்றங்கள்,
பெரியம்மை நோய் வேருடன் அழிக்கப்பட்டதாக, மே 8, 1980 அன்று, உலக சுகாதார் சட்டசபையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. உலகிலிருந்து பெரியம்மை நொய் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, 27 ஆண்டுகளாகிறது (2017ல்).
This article uses material from the Wikipedia தமிழ் article பெரியம்மை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.