செர்னோபில் அணு உலை விபத்து

செர்னோபில் அணு உலை விபத்து என்பது 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தைக் குறிக்கும்.

செர்னோபில் அணு உலை விபத்து
செர்னோபில் அணு உலை விபத்து
விபத்துக்குப் பின் எடுக்கப்பட்ட 4 ஆவது அணு உலையின் படம்
நாள்26 ஏப்ரல் 1986 (1986-04-26) (37 years ago)
நேரம்01:23 (Moscow Time UTC+3)
நிகழிடம்Pripyat, (former Ukrainian SSR, சோவியத் ஒன்றியம்)
காரணம்Inadvertent explosion of core during emergency shutdown of reactor whilst undergoing power failure experiment

இங்கு நான்கு அணு உலைகள் இருந்தன. அவற்றில் ஒன்றின் நீர் குளிர்வு சாதனம் செயல்படாததன் காரணமாக, வெப்பம் அதிகரித்து, அணு உலையின் மையம் உருக ஆரம்பித்தது. 1986, ஏப்ரல் 26 அன்று அதிகாலை 1.23 மணியளவில் நேர்ந்த இந்த சம்பவம் தொடர்ந்து மூன்று மணி நேர வெப்பத்தின் காரணமாக , உருகுதலோடு, உலையில் உள்ள பிளாக்குகளைத் தீப்பற்ற செய்து வெடிக்கவும் வைத்தது. அதனால் சுமார் 20 வகையான கதிர் வீச்சுப் பொருள்கள் காற்று மண்டலத்தில் புகுந்தன. காற்று மண்டலத்தில் புகுந்த இக்கதிர் வீச்சுப் பொருள்கள் அங்கிருந்த நிலத்தில் விழுந்து சிதறின. இந்த கதிரியக்க வீழ் பொருள்கள் பத்து ஹிரோஷிமாக் குண்டுகளுக்கு சமமானதாக கருத்தப்படுகின்றது.

செர்னோபில் அணு உலையின் கதிர் வீச்சின் தன்மையை ஆராய பிரித்தானிய அறிவியல் அறிஞர்கள் ஆளில்லா பறக்கும் விமானம் மூலம் சோதனை நடத்துகிறார்கள்.

விளைவுகள்

இது உலகின் மிக மோசமான அணு உலை விபத்து எனச் சொல்லப்படுகின்றது. அனைத்துலக அணு ஆற்றல் நிகழ்வு அளவீட்டில் 7 ஆவது நிலையை எட்டிய ஒரே விபத்தான இதன் விளைவாக மோசமான கதிரியக்கம் சூழலுக்குள் வெளியேறியது. இந்நிகழ்வின் போது ஏற்பட்ட வெடிப்பினால் 30 பேர் இறந்தனர். எனினும் இவ்விபத்தினால் ஏற்பட்ட பின்விளைவுகளினால் இறந்தவர் தொகை அதிகமாகும். 2000 நபர்கள் இறந்தனர். இரத்தக்குழாய் வெடித்து அதிக அளவு இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், கண்புரை, இரத்தத்தில் இயல்புக்கு மாறான நிலைகள், தோல்புற்று நோய், சீழ்பிடித்து ரணமாதல், கதிர்வீச்சு நோய் முதலிய நோய்கள் உருவாகின. இதன் காரணமாகா காற்று நீர் ஆகியவற்றில் கதிரியக்க மாசு படிந்து தாவரங்களையும், விலங்குகளையும் பாதித்தது. உயிரிகள் துன்புற்றன.

உலை வெடிப்புக்கு காரணம்

செம்மையாக வடிவமைக்கப்படாத அணு உலை, பணியாளர்களின் கவனக்குறைவு, விபத்துக்கான எச்சரிக்கைக் கருவிகள் முன்கூட்டி எச்சரித்த போதும், கடமையில் காட்டிய மெத்தனம் ஆகியவைகளே விபத்தின் காரணமாக கூறப்படுகிறது.

இதையும் பார்க்க

2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்

மேற்கோள்கள்

Tags:

செர்னோபில் அணு உலை விபத்து விளைவுகள்செர்னோபில் அணு உலை விபத்து உலை வெடிப்புக்கு காரணம்செர்னோபில் அணு உலை விபத்து இதையும் பார்க்கசெர்னோபில் அணு உலை விபத்து மேற்கோள்கள்செர்னோபில் அணு உலை விபத்து1986அணுவுலை விபத்துகள்உக்ரேன்ஏப்ரல் 26சோவியத் ஒன்றியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

2024 இந்தியப் பொதுத் தேர்தல்வாதுமைக் கொட்டைதமிழக வெற்றிக் கழகம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)மக்களாட்சிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019முடக்கு வாதம்சைவ சமயம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)தனியார் பள்ளிகல்விக்கோட்பாடுதமிழர் நிலத்திணைகள்திணைஇந்திய தேசியக் கொடிமின்னஞ்சல்கன்னத்தில் முத்தமிட்டால்தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்இந்திய விடுதலை இயக்கம்மக்களவை (இந்தியா)பி. காளியம்மாள்சங்க காலம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இந்தியத் தேர்தல் ஆணையம்தமிழர் நெசவுக்கலைமுன்னின்பம்உன்னாலே உன்னாலேஊராட்சி ஒன்றியம்ரோசுமேரிசிந்துவெளி நாகரிகம்கருப்பைதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சித்த மருத்துவம்வரலாறுமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்சித்ரா பௌர்ணமி (திரைப்படம்)புவி நாள்சிவாஜி கணேசன்அசுவத்தாமன்பனிக்குட நீர்அகத்தியர்அனுமன் ஜெயந்திராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்வெண்பாபூனைதிருமலை (திரைப்படம்)சிப்பாய்க் கிளர்ச்சி, 1857இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குறிஞ்சிக்கலிசீறாப் புராணம்தற்கொலை முறைகள்முத்தரையர்கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்பாண்டவர்வராகிஇந்திய தேசிய சின்னங்கள்தமிழ் எண்கள்ஆய்த எழுத்துடேனியக் கோட்டைவெப்பம் குளிர் மழைவைகைகுகேஷ்குருதி வகைபுவிதிருப்பாவைஇணையம்சுடலை மாடன்திருமூலர்பெரியபுராணம்வெள்ளி (கோள்)கீழடி அகழாய்வு மையம்இலட்சம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்அணி இலக்கணம்மு. மேத்தாநடுக்குவாதம்அரங்குநிணநீர்க்கணு🡆 More