கங்கை (ⓘ) (/ˈɡændʒiːz/ GAN-jeez), (Hindustani: ) என்பது இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் வழியாக பாய்கின்ற ஒரு ஆறாகும்.
இது இந்தியாவின் முக்கிய ஆறு . கங்கை இந்தியாவின் தேசிய நதி ஆகும். இமய மலையில் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது.
கங்கை ஆறு, வாரணாசி | |
ஆறு | |
கங்கை | |
நாடுகள் | இந்தியா, வங்காளம் |
---|---|
மாநிலங்கள் | உத்தரகண்ட், உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் |
நகரங்கள் | ஹரித்வார், கான்பூர், சஜ்மு, அலகாபாத், வாரணாசி, மிர்சாபூர், காசிப்பூர், பாட்னா, ரிஷிகேஷ், மங்கர், பகல்பூர், கொல்கத்தா |
உற்பத்தியாகும் இடம் | கங்கோத்ரி பனியாறு, சடோபந்த் பனியாறு, பிண்டாரி பனியாறு |
- அமைவிடம் | உத்தரகண்ட், இந்தியா |
- உயர்வு | 3,892 மீ (12,769 அடி) |
- ஆள்கூறு | 30°59′N 78°55′E / 30.983°N 78.917°E |
கழிமுகம் | கங்கை டெல்டா |
- அமைவிடம் | வங்காளம், வங்காளம் & இந்தியா |
- elevation | 0 மீ (0 அடி) |
- ஆள்கூறு | 22°05′N 90°50′E / 22.083°N 90.833°E |
நீளம் | 2,525 கிமீ (1,569 மைல்) |
வடிநிலம் | 10,80,000 கிமீ² (4,16,990 ச.மைல்) |
Discharge | for பரக்கா பற்றகே |
- சராசரி | |
- மிகக் கூடிய | |
- மிகக் குறைந்த | |
Discharge elsewhere (average) | |
- வங்காளம் | |
கங்கை ஒருங்கிணைந்த வடிகால் பேசின்கள் வரைபடம் (செம்மஞ்சல்), பிரம்மபுத்திரா (ஊதா), மற்றும் மேக்னா (பச்சை). |
பிறகு உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, ஹூக்லி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகச் சென்று மிகப்பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கங்கை ஆறு மொத்தம் 2525 கி.மீ ஓடுகிறது. ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பட்னா, கொல்கத்தா ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்த முக்கிய நகரங்களாகும்.
வங்கதேசத்தில் கங்கை ஆறு பத்மா ஆறு என அழைக்கப்படுகிறது.
கங்கை இந்துகளின் புனித நதியாக திகழ்கிறது. இது இந்து மதக் கடவுள் கங்காதேவி எனவும் அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. மில்லியன் கணக்கான இந்தியர்கள் தங்கள் வாழ்நாளில் தங்கள் அன்றாட தேவைகளுக்கு இந்த ஆற்றைச் சார்ந்து வாழ்கின்றனர். இந்த நதியினை சார்ந்து மனிதர்கள் மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன. இதன் வடிநிலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இராச்சியங்கள் அல்லது பேரரசுகளின் தலைநகர்கள் ( கன்னோசி, காம்பில்யா, கரா, பிரயாகை அல்லத் அலகாபாத், காசி, பாடலிபுத்திரம் அல்லது பாட்னா, ஹாஜிப்பூர், முன்கிர், பாகல்பூர், முர்சிதாபாத், பாரம்பூர், நபதிவீப், சப்தகிராம், கொல்கத்தா, தாக்கா போன்ற) போன்றவை அமைந்துள்ளன. இந்தியாவின் பெருமைமிகு புனித நதிகளில் ஒன்றான கங்கை ஆறும், அதன் பிறப்பிடமான இமயமலையின் பனிமுகடும் உயிருள்ள நபர்கள் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கங்கை ஆறு 2007 ஆம் ஆண்டில் உலகின் ஐந்தாவது மிக மாசுபடுத்தப்பட்ட நதி என மதிப்பிடப்பட்டது. இந்த மாசுபாடானது மனிதர்களை மட்டுமல்லாமல், 140 க்கும் மேற்பட்ட மீன் வகைகள், 90 நிலநீர் வாழி வகைகள், கங்கை டால்பின்கள் ஆகியவற்றையும் அச்சுறுத்துகிறது. வாரணாசி அருகில் கங்கை ஆற்று நீரில் கலக்கும் மனித கழிவுகளிலின் மாசின் அளவானது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரம்பைவிட 100 பங்கு அதிகமாகும். கங்கை ஆற்றைத் தூய்மைப் படுத்த வகுக்கப்பட்ட சுற்றுச்சூழல் முயற்சியான கங்கை செயல் திட்டம் என்ற திட்டமானது, ஊழல், தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லாதது,{{efn|name=sheth|1= (Sheth 2008)
மோசமான சுற்றுச்சூழல் திட்டமிடல், மற்றும் சமயத் தலைவர்களின் ஆதரவு இல்லாதது போன்ற காரணங்களினால் இதுவரை பெரிய தோல்வியிலேயே முடிந்தது.{{{efn|name=gardner|1=(Gardner 2003)
கங்கையின் முதன்மை நீரோட்டமானது, உத்தரகண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியிலுள்ள தேவ்பிரயாக் நகரில் பாகீரதி ஆறு மற்றும் அலக்நந்தா ஆறுகளின் சங்கமத்தில் துவங்குகிறது. இந்து பண்பாடு மற்றும் புராணங்களில் பாகீரதி ஆதாரமாகக் கருதப்படுகிறது, இருப்பினும் அலக்நந்தா ஆறு, என நீரியல் ஆதாரம் கூறுகிறது. அலக்நத்தா ஆற்றின் நீராதாரமானது நந்தா தேவி, திரிசுல் மற்றும் கமேட் போன்ற சிகரங்களிலின் பனிமுகடுகளில் இருந்து உருவாகின்றது. பாகீரதியானது 3,892 மீ (12,769 அடி) உயரத்தில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறைகளின் அடியில் உள்ள கோமுகியில் இருந்து தோற்றம்பெறுகிறது.
குறுகிய இமயமலை பள்ளத்தாக்கு வழியாக 250 கிமீ (160 மைல்) பாய்ந்த பிறகு, கங்கை ரிஷிகேஷில் உள்ள மலைகளிலிருந்து வெளிவருகிறது, பின்னர் புனித யாதிதிரைத் தலமானஅரித்துவாரில் கங்கை சமவெளிக்குள் முதல் முறையாக நுழைகிறது. அரித்வாரில் ஒரு அணையானது, கங்கையில் இருந்து கொஞ்ச நீரை கால்வாய் வழியாக திசைதிருப்பி, உத்திரபிரதேச மாநிலத்தின் டூப் பிராந்தியத்தில் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது, ஆற்றின் வடகிழக்கு சமவெளிகளில் தென்கிழக்குப்பகுதிக்கு இப்போது தெற்கே ஓடும் ஆற்றின் குறுக்கே நதி இருக்கிறது. இந்த கட்டம் வரை தெற்கே பாயக்கூடிய ஆறு, இதற்கு்கு மேல் தென் கிழக்கு நோக்கி திரும்பி வட இந்திய சமவெளிகளை வளமாக்குகிறது.
கங்கை 800 கிமீ (500 மைல்) தொலைவுக்கு கன்னோசி, ஃபருகஹாபாத், கான்பூர் ஆகிய நகரங்களை கடந்து பாய்கிறது. வழியில் இதனுடன் ராம்கங்கா இணைந்து, சுமார் 500 m3/s (18,000 cu ft/s). சராசரியான வருட ஓட்டத்தை அளிக்கிறது. இந்து மதத்தில் புனித சங்கமமான அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கையுடன் யமுனை ஆறு இணைக்கிறது. இந்த சங்கமத்தில் யமுனை கங்கை விட பெரியதாக, 2,950 m3/s (104,000 cu ft/s), 2,950 m3 / s (104,000 cu ft / s), அல்லது ஒருங்கிணைந்த ஓட்டத்தில் 58.5% பங்களிப்பை யமுனை அளிக்கிறது.
இப்போது கிழக்கே ஓடுகிம் ஆற்றோடு, தமசா ஆறு இணைந்து, கெய்மீர் மலைத்தொடரிலிருந்து வடக்கே பாய்கிறது மேலும் சுமார் 190 m3/s (6,700 cu ft/s) சராசரியான நீரோட்டத்தை அளிக்கிறது. தாம்சவுக்கு பிறகு கோமதி ஆறு இணைகிறது, இதன் பிறகு இமயமலையிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. கோமதி சராசரியாக வருடாந்த நீரோட்டமாக 234 m3/s (8,300 cu ft/s) அளிக்கிறது. நேபாளத்தின் இமயமலைகளிலிருந்து தெற்கே பாயும் காக்ரா ஆறு (கர்னலி நதி) கங்கையுடன் இணைகிறது. காக்ரா ஆறு (கர்னலி), சுமார் 2,990 m3/s (106,000 cu ft/s) சராசரி வருடாந்த நீரோட்டம் உடைய, கங்கையின் மிகப் பெரிய கிளை ஆறு ஆகும். காக்ராவுடன் (கர்னலி) சங்கமித்த பிறகு கங்கை தெற்கில் சோன் ஆற்றுடன் இணைகிறது, இது 1,000 m3/s (35,000 cu ft/s) நீரை வழங்குகிறது. நேபாளிலிருந்து வடகிழக்கு பாயும் கண்டகி ஆறு பிறகு கோசி ஆறு ஆகியவை முறையே 1,654 m3/s (58,400 cu ft/s) மற்றும் 2,166 m3/s (76,500 cu ft/s) நீரை அளிக்கின்றன. காக்ரா ஆறு (கர்னலி) மற்றும் யமுனைக்கு அடுத்து கங்கையின் மூன்றாவது பெரிய துணை ஆறாக கோசி ஆறு உள்ளது.
கங்கையாறு அலகாபாத் மற்றும் மால்காவிற்கும் இடையே பாய்ந்து, மேற்குவங்கத்தை நோக்கிச் செல்லும்போது கங்கை சுனார், மிர்சாபூர், வாரணாசி, காசிபூர், பாட்னா, [[ஹாஜீபூர், சப்ரா, பாகல்பூர், பிலியா, பக்ஸார், சிமரியா, சுல்தங்கான்ஜ் மற்றும் சைட்புர் ஆகிய நகரங்களை கடந்து செல்கிறது. பாகல்பூரில், ஆறானது தெற்கு-தென்கிழக்கு திசையை நோக்கி திரும்பி பாகூரில் ஓடுகிறது. இதன்பிறகு ஆறானது அதன் ஓட்டத்தில் முதன் முதலில் கிளை ஆறாக ஊக்லி ஆறு பிரிகிறது, வங்காளதேச எல்லைக்கு அருகில் கங்கையின் குறுக்கே ஃபராக்கா அணை கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து சில வாய்கால்கள் வழியான ஹகிஹ்லி ஆறு இணைக்கப்பட்டுள்ளது. ஹகிஹ்லி ஆறானது பக்கிரிதி நதி மற்றும் ஜலாங்கி ஆறு ஆகியவற்றின் சங்கமத்தினால் உருவானது, மேலும் ஹூக்ளி பல துணை ஆறுகளைக் கொண்டுள்ளது. 541 கிமீ (336 மைல்) நீளமுடைய தாமோதர் ஆறு, 25,820 km2 (9,970 sq mi) வடிகாலைக் கொண்டது. ஹூக்ளி ஆறு சாகர் தீவுக்கு அருகில் வங்காள விரிகுடாவில் நுழைகிறது. மால்டா மற்றும் வங்காள விரிகுடாவிற்கு இடையே, ஹூக்ளி ஆற்றானது முர்ஷிதாபாத், நாட்ப்விப், கொல்கத்தா ஹௌரா பொன்ற ஊர்களையும் நகரங்களையும் கடந்து செல்கின்றது.
வங்கதேசத்தில் நுழைந்த பிறகு, கங்கையின் முதன்மைக் கிளை பத்மா என்று அழைக்கப்படுகிறது. பிரம்மபுத்திராவின் மிகப்பெரிய கிளை ஆறான ஜமுனா ஆறு பத்மாவுடன் இணைகிறது. மேலும் கீழே, பத்மா பிரம்மபுத்திராவின் இரண்டாவது மிகப்பெரிய கிளை ஆறான மேகனா ஆற்றுடன் சேர்ந்து, அது மேகானா என்ற பெயரைப் பெற்று, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் பாயும் பெரிய, வண்டல் நிறைந்த கங்கை வடிநிலம் உலகின் மிகப்பெரிய வடிநிலமாகும், இது சுமார் 59,000 km2 (23,000 sq mi) பரப்பளவு கொண்டது ஆகும். இது வங்காள விரிகுடாவில் 322 km (200 mi) நீண்டு செல்கிறது.
சூரிய குலத்துத் தோன்றலாகிய திலீபன் என்பவனின் மகன் பகீரதன். தன் மூதாதையர்கள் சாபத்தால் இறந்த செய்தியை வசிட்டர் வாயிலாகக் கேட்டு, அவர்கள் நற்கதி அடையப் பிரம்மனை நோக்கி 10,000 ஆண்டுகள் தவம் புரிந்தான். பிரம்மனோ நீ கங்கையையும் சிவனையும் நோக்கித் தவம் செய்து கங்கையைக் கொண்டு அவர்களின் சாம்பலை நனைத்தால் அவர்களுக்கு நற்கதி கிடைக்கும் என்று கூற அவ்வாறே செய்தான். கங்கை சிவன் முன் தோன்றி, நான் வருவதற்குத் தடையொன்றும் இல்லை, என் வேகத்தைத் தாங்கிக் கொள்வார் உண்டாயின் என்றாள். பிரம்மன் கட்டளைப்படி சிவனாரை நோக்கித் தவம் புரிந்தான். சிவனாரும் கங்கையின் வேகத்தைத் தாங்கிக் கொள்வதாகக் கூற, பின் சிவன் வேண்டுகோளின்படி கங்கை வானுலகினின்று பூலோகம் வருகையில் சிவனாரால் கங்கை தாங்கப் பெற்றுப் பூமி பொறுக்கும் அளவுக்குப் பூமியில் விடப்பட்டாள். கங்கையை இறந்தோர் சாம்பலில் பாய வைத்து நற்கதி பெறச் செய்தவன். இவனால் கங்கை கௌரவம் பெற்றதால் கங்கைக்குப் பாகீரதி எனப் பெயர் வந்தது. இதனால் சிவபெருமான் கங்காதரன் என்று அழைக்கப்படுகிறார்.
வாரணாசியில் கங்கைக்கரையில் தினமும் கங்கை ஆற்றுக்கு ஆர்த்தி வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நிகழ்வை கங்கா ஆர்த்தி என்கின்றனர்.
கங்கை ஆற்றின் துணை ஆறுகள்:
This article uses material from the Wikipedia தமிழ் article கங்கை ஆறு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.