அடர் வனம் என்பது அடர்த்தியாக வளர்ந்த பசுமையான மரங்களைக் கொண்டுள்ள காடு அல்லது வனம் ஆகும்.
கடந்த சில நூற்றாண்டுகளாக ஜங்கிள் (jungle) என்ற ஆங்கிலப் பதத்தின் பயன்பாடு மிகவும் வேறுபட்டுள்ளது. மேற்கத்திய இலக்கியங்களில் இந்த அடர் வனத்திற்குரிய ஆங்கிலப் பதமான “ஜங்கிள்” (jungle) நாகரிகத்தின் கட்டுப்பாடில்லாத குறைந்த நாகரீக வளர்ச்சியடைந்த வெளிகளை குறிக்கப் பயன்பட்டது.
ஜங்கிள் என்ற சொல்லானது சமஸ்கிருத வார்த்தை ஜங்களா (சமக்கிருதம்: जङ्गल) என்பதிலிருந்து தோன்றியதாகும். இதன் பொருள் விளைவிக்கப்படாத நிலம் என்பதாகும். இருந்த போதிலும் வறண்ட நிலப்பகுதியைக் குறிப்பதற்கும் இச்சொல் பயன்பட்டிருக்கிறது. ஆங்கிலோ - இந்தியர் ஒருவர் இச்சொல்லுக்கான உட்பொருளாக "சிக்கலான புதர்" எனக் கூறுகிறார். இந்தி மொழியில் உள்ள இதை ஒத்த சொல் காடுகளைக் குறிப்பதாக வேறு சிலரும் முன் வைக்கின்றனர்.. இந்தச் சொல் பரவலாக இந்தியத் துணைக்கண்டத்தின் பல மொழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
This article uses material from the Wikipedia தமிழ் article அடர் வனம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.