நெட்டாண்டுகளில் 282 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 84 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 314 – உரோமைப் பேரரசர் லிசீனியசு சிபாலே என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் முதலாம் கான்ஸ்டன்டைனிடம் தோற்றான். இத்தோல்வி மூலம் தனது ஐரோப்பியப் பகுதிகளை இழந்தான்.
- 1573 – எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் பெற்றது.
- 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
- 1813 – பவேரியாவுக்கும் ஆசுதிரியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- 1821 – பெருவில் ஒசே சான் மார்ட்டின் தலைமையிலான அரசு கடற்படை அமைக்கப்பட்டது.
- 1836 – இலங்கையில் ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு வரி விதிப்பு அமுலாக்கப்பட்டது.
- 1856 – சீனாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையே இரண்டாம் அபினிப் போர் ஆரம்பமானது.
- 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கென்டக்கியில் கூட்டமைப்புப் படைகளின் முற்றுகையைத் தடுத்து நிறுத்தின.
- 1871 – சிகாகோ பெருந்தீ: சிக்காகோவில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர். விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் 2,500 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1879 – பசிபிக் போர்: சிலியின் கடற்படை அங்காமொசு என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பெருக் கடற்படையைத் தோற்கடித்தது.
- 1895 – கொரியாவின் கடைசிப் பேரரசி மெயோங்சியோங் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சப்பானியப் படைகளால் கியாங்பொக் அரண்மனையில் வைத்து எரிக்கப்பட்டது.
- 1912 – முதலாவது பால்கன் போர் ஆரம்பமானது: மொண்டெனேகுரோ உதுமானியப் பேரரசுடன் போர் தொடுத்தது.
- 1918 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் அமெரிக்கக் கோப்ரல் அல்வின் யோர்க் தனியாளாக 25 செருமனிய இராணுவத்தினரைக் கொன்று, 132 பேரைக் கைப்பற்றினார்.
- 1932 – இந்திய வான்படை நிறுவப்பட்டது.
- 1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனி மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: ரசுத்தோவ் சண்டயின் ஆரம்பத்தில் செருமனியப் படைகள் அசோவ் கடலை அடைந்து மரியுபோல் நகரைக் கைப்பற்றின.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: குரூசிஃபிக்ஸ் ஹில் சண்டை ஆஃகன் நகருக்க்கருகில் இடம்பெற்றது.
- 1952 – லண்டனில் தொடருந்து விபத்தில் 112 பேர் உயிரிழந்தனர்..
- 1962 – அல்சீரியா ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
- 1967 – கெரில்லா இயக்கத் தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைது செய்யப்பட்டனர்.
- 1970 – வியட்நாம் போர்: பாரிசில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், பொதுவுடைமைவாதிகள் அமெரிக்கத் தலைவர் நிக்சனின் அமைதி முன்மொழிவை நிராகரித்தனர்.
- 1973 – சூயசுக் கால்வாயின் இசுரேலியப் பக்கத்தில் இடம்பெற்ற போரில் 140 இசுரேலியத் தாங்கிகள் எகிப்திய படைகளினால் அழிக்கப்பட்டது.
- 1982 – சொலிடாரிட்டி தொழிற்சங்கம் போலந்தில் தடை செய்யப்பட்டது.
- 1987 – விடுதலைப் புலிகள் இந்திய அமைதி காக்கும் படையின் சரக்கு வாகனத்தைத் தாக்கியதில் 8 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- 1990 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: எருசலேமில் இசுரேலியக் காவல்துறையினர் கோவில் மலையில் பாறைக் குவிமாடம் மசூதியைத் தாக்கியதில் 17 பாலத்தீனர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
- 1991 – குரோவாசியா, சுலோவீனியா மக்கள் யுகோசுலாவியாவில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
- 2001 – இத்தாலியின் மிலன் நகரில் இரண்டு விமானங்கள் வானில் மோதியதில் 118 பேர் இறந்தனர்.
- 2005 – காசுமீரில் ஏற்பட்ட 7.6 அளவு நிலநடுக்கத்தில் பாக்கித்தான், இந்தியா, ஆப்கானித்தான் ஆகிய நாடுகளில் 86,000–87,351 பேர் வரையில் உயிரிழந்து, 69,000–75,266 வரையானோர் காயமடைந்தனர். 2.8 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர்.
- 2006 – காலி கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்கி 3 கடற்படைக் கலங்களை மூழ்கடித்தனர்.
- 2016 – மேத்யூ சூறாவளியின் தாக்கத்தால் இறந்தோரின் எண்ணிக்கை 900 ஐத் தாண்டியது.
பிறப்புகள்
- 1552 – மத்தேயோ ரீச்சி, இத்தாலிய இயேசுசபை மதப்பரப்புனர் (இ. 1610)
- 1872 – மேரி பென்னிங்டன், அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (இ. 1952)
- 1873 – எய்னார் எர்ட்சுபிரங்கு, தென்மார்க்கு வேதியியலாளர், வானியலாளர் (இ. 1967)
- 1908 – என். ஆர். இராசவரோதயம், இலங்கை அரசியல்வாதி (இ. 1963)
- 1908 – கரோலின் அந்தோனிப்பிள்ளை, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 2009)
- 1920 – பிராங்க் எர்பெர்ட், அமெரிக்க ஊடகவியலாளர், படப்பிடிப்பாளர் (இ. 1986)
- 1922 – கோ. நா. இராமச்சந்திரன், இந்திய அறிவியலாளர் (இ. 2001)
- 1924 – திருநல்லூர் கருணாகரன், இந்தியக் கவிஞர் (இ. 2006)
- 1926 – ராஜ்குமார், இந்தித் திரைப்பட நடிகர் (இ. 1996)
- 1932 – கென்னத் அப்பெல், அமெரிக்கக் கணிதவியலாளர்
- 1935 – மில்கா சிங், இந்திய தடகள விளையாட்டு வீரர்
- 1944 – ராஜ்ஸ்ரீ (இந்தி நடிகை) இந்தி திரைப்பட நடிகை
- 1949 – சிகர்னி வேவர், அமெரிக்க நடிகை, தயாரிப்பாளர்
- 1950 – சு. கலிவரதன், தமிழக எழுத்தாளர்
- 1969 – டைலன் நீல், கனடிய-அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
- 1970 – மேட் டாமன், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
- 1971 – பா. ராகவன், தமிழக எழுத்தாளர்
- 1977 – லட்சுமி மஞ்சு, இந்திய-அமெரிக்கத் தொலைக்காட்சி நடிகை
இறப்புகள்
- 1638 – இரண்டாம் இராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1612)
- 1936 – பிரேம்சந்த், இந்திய உருது எழுத்தாளர் (பி. 1880)
- 1958 – திருவாளப்புத்தூர் பசுபதிப் பிள்ளை, தமிழகத் தவில் கலைஞர் (பி. 1879)
- 1959 – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர், பாடலாசிரியர் (பி. 1930)
- 1967 – கிளமெண்ட் அட்லீ, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1883)
- 1974 – பி. ஆர். பந்துலு, தென்னிந்திய இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் (பி. 1911)
- 1979 – ஜெயபிரகாஷ் நாராயண், இந்திய அரசியல்வாதி (பி. 1902)
- 2003 – வீரமணி ஐயர், ஈழத்துக் கவிஞர் (பி. 1931)
- 2010 – ஜான் பீட்டர் அக்ரா, அமெரிக்க வானியலாளர் (பி. 1948)
- 2010 – ரெ. சண்முகம், மலேசியக் கவிஞர் (பி. 1934)
- 2011 – பாரத லக்சுமன் பிரேமச்சந்திர, இலங்கை அரசியல்வாதி (பி. 1956)
- 2020 – இராம் விலாசு பாசுவான், இந்திய அரசியல்வாதி, அமைச்சர் (பி. 1946)
- 2020 – அ. மா. சாமி, தமிழக எழுத்தாளர், இதழாளர், நூலாசிரியர் (பி. 1935)
- 2021 – பிறைசூடன், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், நடிகர் (பி. 1956)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article uses material from the Wikipedia தமிழ் article அக்டோபர் 8, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.