புரூணை (மலாய் மொழி: Negara Brunei Darussalam; ஆங்கிலம்: Brunei Darussalam; சாவி: Jawi: نݢارا بروني دارالسلام) என்பது போர்னியோ தீவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும்.
இதன் வடக்கில் தென் சீனக் கடல் உள்ளது. இதர பாகங்களில் மலேசியாவின் சரவாக் மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது. சுல்தான்களால் ஆளப்படும் இந்த நாடு 1984 சனவரி 1-ஆம் தேதி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலைப் பெற்றது.
புரூணை Brunei Darussalam بروني دارالسلام | |
---|---|
குறிக்கோள்: "Always in service with God's guidance" (இறைவனின் துணை கொண்டு எப்போதும் சேவையில்) | |
நாட்டுப்பண்: Allah Peliharakan Sultan இறைவன் சுல்தானுக்கு ஆசீர்வாதம் வழங்குவாராக | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | பண்டார் செரி பகவான் |
ஆட்சி மொழி(கள்) | மலாய் |
மக்கள் | புரூணையர் |
அரசாங்கம் | இசுலாமிய சுல்தானிய முடியாட்சி |
• சுல்தான் | அசனல் போல்கியா |
விடுதலை | |
• பிரித்தானிய இராச்சியத்திலிருந்து | சனவரி 1 1984 |
பரப்பு | |
• மொத்தம் | 5,765 km2 (2,226 sq mi) (172ஆவது) |
• நீர் (%) | 8.6 |
மக்கள் தொகை | |
• 2020 மதிப்பிடு | 460,345 |
• அடர்த்தி | 65/km2 (168.3/sq mi) (127-ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $33.389 பில்லியன் (125-ஆவது) |
• தலைவிகிதம் | $74,952 (29-ஆவது) |
மமேசு (2007) | 0.838 அதியுயர் · 47-ஆவது |
நாணயம் | புரூணை டாலர் (BND) |
நேர வலயம் | ஒ.அ.நே+8.1 |
அழைப்புக்குறி | 673 |
இணையக் குறி | .bn |
|
சரவாக் மாநிலத்தின் லிம்பாங் மாவட்டத்தால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. போர்னியோவில் ஒரே இறையாண்மை கொண்ட நாடு புரூணை மட்டுமே. போர்னியோ தீவின் எஞ்சிய பகுதி மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது.
புரூணை அரசாங்கம் அதன் சுல்தானால் ஆளப்படும் ஒரு முழுமையான முடியாட்சியாகும். யாங் டி-பெர்துவான் என்று அழைக்கப்படுகிறார். இந்த நாடு ஆங்கில பொதுச் சட்டம்; சரியா சட்டம் மற்றும் பொது இசுலாமிய நடைமுறைகளின் கலவையைச் செயல்படுத்துகிறது.
புரூணை பேரரசின் உச்சத்தில், சுல்தான் போல்கியா (1485-1528 ஆட்சி) போர்னியோவின் பெரும்பாலான பகுதிகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இன்றைய சரவாக் மற்றும் சபா, அத்துடன் போர்னியோவின் வடகிழக்கு முனையில் உள்ள சுலு தீவுக்கூட்டம் (Sulu Archipelago) உட்பட பல பகுதிகள் புரூணை பேரரசின் ஆளுமையின் கீழ் இருந்தன. பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியும் இந்தப் பேரரசின் கீழ் இருந்தது.
19-ஆம் நூற்றாண்டில், புரூணை பேரரசு வீழ்ச்சி அடையத் தொடங்கியது. புரூணை சுல்தானகம் சரவாக்கை (கூச்சிங்) ஜேம்ஸ் புரூக்கிற்கு விட்டுக் கொடுத்து; அவரை வெள்ளை ராஜாவாக நியமித்தது.
மேலும் அது சபாவைப் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திடம் (British North Borneo Chartered Company) ஒப்படைத்தது. தன்னுடைய நிலப் பகுதிகளை விட்டுக் கொடுத்ததனால் காலப் போக்கில் வீழ்ச்சி அடைந்தது.
1888-இல், புரூணை பிரித்தானியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இரண்டாம் உலகப் போரின் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குப் பின்னர், 1959-இல் ஒரு புதிய அரசியலமைப்பு எழுதப்பட்டது. 1962-இல், முடியாட்சிக்கு எதிரான ஒரு சிறிய ஆயுதக் கிளர்ச்சி நடந்தது. ஆங்கிலேயர்களின் உதவியுடன் அந்தக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
1967-ஆம் ஆண்டு முதல் சுல்தான் அசனல் போல்கியாவால் (Hassanal Bolkiah) புரூணை வழிநடத்தப்பட்டு வருகிறது. 1984 ஜனவரி 1-ஆம் தேதி, பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.
This article uses material from the Wikipedia தமிழ் article புரூணை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.