ஈசாக்கு

ஈசாக்கு என்பவர் விவிலியத்தின்படி, இஸ்ரயேலரின் முதுபெரும் தந்தையர் மூவரில் ஒருவராவார்.

இவர் ஆபிரகாம் மற்றும் சாராள் ஆகியோரின் மகனும் யாக்கோபுவின் தந்தையுமாவார். இவரது வரலாறு தொடக்கநூலில் கூறப்பட்டுள்ளது.

ஈசாக்கு
ஈசாக்கு
ஈசாக்கு கிணறு வெட்டுதல், கற்பனை ஓவியம் (c. 1900)
தகவல்
குடும்பம்
துணைவர்(கள்)ரெபேக்கா
பிள்ளைகள்

பெயர்

ஈசாக்கின் தாயான சாராள் தான் குழந்தையைப் பெறப்போவதாக இறைத்தூதர் ஆபிரகாமிடம் சொல்வதை கேட்டு தான் முதியவளாக இருந்தபடியால் நகைத்தார். இதனால் குழந்தையை பெற்றவுடன் நகைத்தல் எனப் பொருள்படும் வகையில் ஈசாக்கு என பெயரிட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஈசாக்கு ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிறந்த ஒரே குழந்தையாகும். அவ்ர்கள் இருவரும் மிக முதியவராக இருந்த போது ஈசாக்கு பிறந்தார். குழந்தை பிறந்து எட்டாவது நாளில் அபிரகாம் குழந்தைக்கு விருத்த சேதனம் பண்ணினார். ஈசாக்கு பால்குடி மறந்த நாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து ஒன்றைக் கொடுத்தார்.

சாராள், அபிரகாமுக்கு ஆகார் என்ற எகிப்திய அடிமை பெண் மூலமாக பிறந்திருந்த மகனான இஸ்மவேல் மூலம் தனது மகனுக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை எண்ணி அவர்களை விரட்டி விடுமாறு ஆபிரகாமை வேண்டினார். கடவுளும் ஆபிரகாமுக்கு இதையே சொல்ல ஆபிரகாம் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டார்.

ஈசாக்கு வளர்ந்து சுமார் 25 ஆவது அகவையை அடைந்தபோது, கடவுள் அபிரகாமை சோதிக்கும் நோக்கில், ஈசாக்கை பலியிட கட்டளையிடுகிறார். ஆபிரகாம் கடவுள் காட்டிய இடத்துக்குச் சென்று ஈசாக்கை கட்டி பலியிட ஆயத்தமான போது, இறைத்தூதர் ஆபிரகாமை தடுத்தார்.

ஈசாக்கின் 40ஆவது அகவையில் ஆபிரகாம் தனது சேவகரான எலியேசரை மொசபத்தேமியாவில் உள்ள தனது மைத்துனரான லாபான் வீட்டுக்கு அனுப்பி, ஈசாக்கு ஒரு மனைவியை தேடினார். ரெபேக்கா ஈசாக்கின் மனைவியாக அனுப்பப்பட்டார். ஈசாக்கு ரெபேக்காவை மணந்தார். சில காலம் குழந்தையற்றிருந்த ரெபேக்கா கர்பவதியாகி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றார். அவர்களுக்கு ஏசா,யாக்கோபு என பெயரிட்டார். ஏசா ஈசாக்கின் ஆதரவையும் யாக்கோபு ரெபேக்காளின் ஆதரவையும் பெற்றனர்.

ஈசாக்கு முதியவனான போது (அகவை 137) அவரது கண் பார்வை மிகவும் குன்றிக் காணப்பட்டது. அப்போது தனது மகன்களை ஆசிர்வதிக்கும் நோக்கில் மூத்தவனான ஏசாவை அழைத்தார், ஏசா அப்போது வேட்டையாட சென்றிருந்தார் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ரெபேக்காள் யாக்கோபை அனுப்பி மூத்த புதல்வனுக்குறிய ஆசீர்வதத்தை பெற்றுக் கொள்ள வைகிறாள். ஏசா வந்தபோது நடந்த்தை அறிந்த ஈசாக்கு ஏசாவுக்கு இரண்டாவது பிள்ளைக்காண ஆசிவாததை மட்டுமே கொடுக்கிறார். இதன் பிறகு சிலகாலம் வாழ்ந்த ஈசாக்கு தனது 180 ஆவது அகவையில் மரித்தார் அவரை அவரது புதல்வர்கள் இருவரும் அடக்கம் செய்தனர்.

குடும்ப மரம்

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்


உசாத்துணை

Tags:

ஈசாக்கு பெயர்ஈசாக்கு வாழ்க்கைக் குறிப்புஈசாக்கு குடும்ப மரம்ஈசாக்கு உசாத்துணைஈசாக்குஆபிரகாம்சாராள்தொடக்க நூல்யாக்கோபுவிவிலியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கண்டம்ஈ. வெ. இராமசாமிபள்ளிக்கரணைசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)காம சூத்திரம்ஞானபீட விருதுகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்குணங்குடி மஸ்தான் சாகிபுபட்டினப் பாலைதிருநாவுக்கரசு நாயனார்போதைப்பொருள்திருக்குறள்பரணி (இலக்கியம்)உரிப்பொருள் (இலக்கணம்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சிறுகதைசுற்றுச்சூழல் பிரமிடுஉவமையணிலெனின்பசுமைப் புரட்சிஇந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள்திருவையாறு ஐயாறப்பர் கோயில்முகலாயப் பேரரசுகுறிஞ்சிப் பாட்டுஔவையார்புறநானூறுதேவநேயப் பாவாணர்மம்தா பானர்ஜிஇனியவை நாற்பதுதினகரன் (இந்தியா)விருந்தோம்பல்நான் அவனில்லை (2007 திரைப்படம்)ஐங்குறுநூறுசிங்கம்சே குவேராஉலகப் புத்தக நாள்தனுசு (சோதிடம்)மலையாளம்எலுமிச்சைபொருள்கோள்தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022உன்னை நினைத்துபாலியல் துன்புறுத்தல்இளையராஜாதேசிக விநாயகம் பிள்ளைதொல். திருமாவளவன்வினையெச்சம்ஹர்திக் பாண்டியாயாவரும் நலம்கட்டுவிரியன்திருவோணம் (பஞ்சாங்கம்)திட்டக் குழு (இந்தியா)புளிப்புஜெயமோகன்மகாவீரர் ஜெயந்திதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குதமிழர் பண்பாடுதொகைநிலைத் தொடர்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005கலித்தொகைஅகநானூறுவினைச்சொல்அத்தம் (பஞ்சாங்கம்)பாரிகாரைக்கால் அம்மையார்நிதி ஆயோக்சுரதாபீனால்அயோத்தி இராமர் கோயில்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்பெண்கள் அதிகாரம்சிலம்பம்நாயன்மார் பட்டியல்ஆனைக்கொய்யாஇந்து வாரிசுரிமைச் சட்டம், 1956திருமணம்ஆண்டு வட்டம் அட்டவணை🡆 More